அன்றும் இன்றும்
கே.பாலசுந்தரி.எம்.ஏ .
விலங்குகளைக் கொன்று
வேட்டையாடக் கணை கொடுத்தான் அன்று
மனிதர்களைக் கொன்று
பழிதீர்க்க ஏவுகணை கண்டான் இன்று
மனித நேயம் கொண்டோம் அன்று
மனித வெடிகுண்டு கண்டோம் இன்று
ஏன் இந்த மாற்றம் என்று
யோசிப்போமா சற்றே நின்று
மனிதன் விலங்கானான் இன்று
அதனால் வந்த வினை என்று
உணர்ந்து விட்டால் நன்று
உணர போவது என்று?
அடக்கு முறை கண்டு
ஆட்டிப் படைக்கிறோம் இன்று
அன்பு வழி கண்டு
அகிலம் வெல்வது என்று?
விஞ்ஞான அறிவு கொண்டு
அழிவை நாடுகிறோம் இன்று!
மெய்ஞான அறிவு கொண்டு
அமைதி நாடுவதே நன்று!
அகிம்சை வழி நின்று
அன்பை விதைத்தல் நன்று!
வேட்டையாடக் கணை கொடுத்தான் அன்று
மனிதர்களைக் கொன்று
பழிதீர்க்க ஏவுகணை கண்டான் இன்று
மனித நேயம் கொண்டோம் அன்று
மனித வெடிகுண்டு கண்டோம் இன்று
ஏன் இந்த மாற்றம் என்று
யோசிப்போமா சற்றே நின்று
மனிதன் விலங்கானான் இன்று
அதனால் வந்த வினை என்று
உணர்ந்து விட்டால் நன்று
உணர போவது என்று?
அடக்கு முறை கண்டு
ஆட்டிப் படைக்கிறோம் இன்று
அன்பு வழி கண்டு
அகிலம் வெல்வது என்று?
விஞ்ஞான அறிவு கொண்டு
அழிவை நாடுகிறோம் இன்று!
மெய்ஞான அறிவு கொண்டு
அமைதி நாடுவதே நன்று!
அகிம்சை வழி நின்று
அன்பை விதைத்தல் நன்று!
வசந்தவாசல்கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
8124394182
மாங்குடி
திருவாரூர்
ஆத்மார்த்த அஞ்சலி
8124394182
கே. பாலசுந்தரி
உறங்கிக் கிடந்த மக்களை
உசுப்பேற்றிவிட்ட
உதய மூர்த்தி - நீ
உறங்கி விட்டாய் - ஆனாலும்
உறங்காது எம்முள் என்றும் - உன்
உடல் மறைந்தாலும் - எம்
உள்ளத்தில் எப்போதும்
உந்தன் ஆத்ம தரிசனம் - அது
உன்னால் முடியும் என்று எம்முள்
உர மூட்டுவது என்றும் நிதர்சனம்!
கடவுளும் நீயும்
உன்னைக்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
நீ எங்கேயும் இருப்பாய்
எந்த உருவிலும் வருவாய் -நீ
நீரிலும் இருப்பாய்
நெருப்பிலும் இருப்பாய்
மண்ணிலும் இருப்பாய்
விண்ணிலும் இருப்பாய்
காற்றிலும் கரைந்து இருப்பாய்
காலம் காலமாக இருக்கும்
உன்னைக் காட்ட முடியாது
உணர மட்டுமே முடியும்
உணர்ந்த பின்னர்
உன்னில் உறைந்து
மறைந்து உன்னில்
கலந்து கரைந்து விடுவதால்
மரணமே நீயும்
கடவுளும் ஒன்றா ?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
புதிய சிறகுகள்
எண்ணப் பறவை சிறகொடிந்து
மண்ணில் கிடக்கின்றது -பொய்
வேடந்தாங்கு வோரைத் -தன்
வேடந்தாங்கலாய் நம்பியதை
எண்ணித் தவிக்கின்றது
கண்ணீரை வடிக்கின்றது
கடந்த காலம் நினைக்கின்றது
காகிதத்தில் தன் காயம் துடைக்கின்றது
எழுதுகோல் எடுக்கின்றது -அதில்
எண்ணங்களை நிரப்புகின்றது
கற்பனையை விரிக்கின்றது
கவிதை பிறக்கின்றது
சாம்பலிலும் உயிர்க்கும்
"பீனிக்ஸ் " பறவையாய் உயிர்க்கின்றது
புதிய சிறகுகள் முளைக்கின்றது
புதிய சகாப்தம் படைக்கின்றது
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
மரம் நம் வரம்
வான மங்கையின் வண்ணமிகு
ஓசோன் ஆடையைத்
தொட்டிழுத்துத் துகிலுரித்தத்
துச்சாதனர்களே !
வரப்போகும் புவிவெப்பம் எனும்
புதியதொரு குரு சேஷ்த்திரப் போரினால் - நீங்கள்
தோற்காதிருக்கப் புகல்கிறேன்
புதிய கீதை !
வான மங்கையின்
வண்ணச் சேலையின் - ஓசோன்
ஓட்டைகளை ஒட்டுப்போட்டுத்
தைத்திடுங்கள்
நூலும் ஊசியும் இல்லா
நூதனத் தையல் இது
நுட்பமாய் இதனைச் செய்தால்
நுகர்ந்திடலாம் தூயக் காற்று
மரம் வளர்த்து
மனிதம் வளர்ப்போம் !
மரம்தான் இது மனிதற்கு
வரம்தான் என உணர்வோம் !!!
மந்திரம்
கேட்டேன்
கேட்டது கிடைக்கவில்லை
நினைத்தேன்
நினைத்தது நடக்கவில்லை
அழுதேன்
அமைதி கிடைக்கவில்லை
எழுதினேன்
ஏட்டில் வரவல்லை -புறக்
கண்களை மூடினேன் -அகக்
கண் திறந்தது
ஆழ்ந்து யோசித்தேன்
அனுபவங்களை தொடுத்தேன்
அரங்கேற்றம் செய்தேன்
அற்புதம் நிகழ்ந்தது
அச்சில் ஏறியது
கேட்காமலேயே வெற்றி
கிடைத்தது !
நினைக்காமலே வந்தது
நிம்மதி!
மாற்று யோசனையே
மந்திரம் என்ற
தந்திரம் தெரிந்தது !
முதிர்கன்னி
வீணாய் உலர்ந்த
மலருக்கு உண்டு மணம்
வீணாய்ப் போன
விதவைக்கு உண்டு மறுமணம்
குடும்பத் தூணாய் நிற்கும்
முதிர் கன்னிக்கு என்று மனம்?
ஒப்புக்கு வாழ்ந்து
ஓடாய் தேய்கிறாள் தினம்
கைத்தலம் பற்றக்
கனாக்காண்கிறாள் தினம் தினம்
கல்யாண பத்திரிகையில்
தன் பேர் வருமா என
ஏங்குகிறாள் தினம்
கன்னிகாதானம்.ஆனாலும்
கட்டாயம் தரவேண்டும் சீதனம்
நினைக்கையில் நெஞ்சுக்குள் ஆறாதரணம்
இதற்கு என்று நிவாரணம்?
கன்னத்துச் சுருக்கத்தையும்
காதோர நரையையும்
கண்ணாடி காட்டுது
கன்னி கழியாத கழிசடை என
ஊருசனம் தூற்றுது
எப்போது மாறும் இவரது குணம்?
நடைப்பிணம் அவளுக்கும் உண்டு மனம் ,மனம் .....?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்
இனி ஒரு சுதந்திர வேள்வி
இன்று முதல் தொடங்குவோம்
அந்நியரை வெளியேற்றிய நாம்
அந்நிய மோகம் தவிர்க்க மறந்தோம்
தவிர்க்க மறந்ததால்- இன்று
தவித்து நிற்கிறோம்
தாய்ப்பால் தவிர்த்தப்
புட்டிப்பால் குழந்தையாய்
தாய்மொழி மறந்து
தடம் மாறி நின்று
தமிழ்ப்புத்தாண்டும்
தமிழர் திருநாளும் மறந்து
ஆங்கிலப் புத்தாண்டை
ஆலம் சுற்றி வரவேற்கின்றோம்
அந்நியரை மதிப்போம்
அதேசமயம் - நம்
கலாசாரமும் காப்போம்
களை எடுக்கிறோம் எனப் பயிரைப் பிடுங்காது
அந்நிய மோகம் தவிர்ப்போம் -நம்
அன்னை பூமியை மதிப்போம் .
காரையின் புது கவிதை
கவிதைச்சரம் கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
சஞ்சீவி மருந்து!
கொத்துக் கொத்தாய்
செத்துமடியும் தொற்று
நோய்களுக்கு மருந்துகள்
பல கண்டோம்!
இளம்பிள்ளைவாதம் நீக்கப்
போலியோ ஒழிப்பு
முகாம்கள் கண்டோம்
மதவாதம் நீங்க
மருந்தென்ன கண்டோம்?
காலராவுக்கும் மருந்து கண்டோம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கால்வேறு கைவேறு ஆக்கி கதற வைக்கும்
கண்ணிவெடி கலாசாரத்திற்கு
மருந்து கண்டோமா?
பெரியம்மை, தட்டம்மை
பெரிதும் ஒழித்தோம்
அப்பாவிகளைத் தக்கும்
தீவிரவாதம் ஒழிய
மருந்து கண்டோமா?
விஞ்ஞானிகள் மருந்து
காணும் முன்னே - நம்
மெய்ஞானிகள் கண்ட
மருந்தொன்று உண்டு
அத்தனை வாதங்களையும்
அறவே நீக்கும் அற்புத மருந்து
அதுதான் அன்பெனும்
அருமருந்து!
-கே.பாலசுந்தரி
புதிய அந்தாதி
வீரசுதந்திரம் பெற்றிட்டோம்
தீரநெஞ்சினர் போராட்டத்தால்
போராட்டங்கள் ஓய்வதில்லை-எனவேப்
புதிதாய் ஒரு போராட்டம்
போராடும் வேலையில்லா இளைஞர்கள்
வேலைதேடி அலையாமல் - தானே
வேலைவாய்ப்பை உருவாக்கும்
புதியதொரு போராட்டம்
போராட்டம் வென்றிடும்
போர்க்குண இளைஞரணி
புண்ணிய பாரதத்தைத்
திண்ணியதாய் ஆக்கிடும்
ஆக்கிடும் திட்டங்கள்
அத்தனையும் பலித்திடும் - நாட்டை
வல்லரசாய் மாற்றிட
வலிமையான இளைஞர் வரிசை
வரிசையாய்ச் சாதனைகள்
வரிந்து கட்டும் தீரர்கள் - நாளைய
வரலாறு கூறிடும் நம்மையும்
வல்லரசு தான் என்று.
கவிஞர் கே.பாலசுந்தரி
8124394182
மாங்குடி
திருவாரூர்
ஆத்மார்த்த அஞ்சலி
8124394182
கே. பாலசுந்தரி
உறங்கிக் கிடந்த மக்களை
உசுப்பேற்றிவிட்ட
உதய மூர்த்தி - நீ
உறங்கி விட்டாய் - ஆனாலும்
உறங்காது எம்முள் என்றும் - உன்
உடல் மறைந்தாலும் - எம்
உள்ளத்தில் எப்போதும்
உந்தன் ஆத்ம தரிசனம் - அது
உன்னால் முடியும் என்று எம்முள்
உர மூட்டுவது என்றும் நிதர்சனம்!
கடவுளும் நீயும்
உன்னைக்
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
நீ எங்கேயும் இருப்பாய்
எந்த உருவிலும் வருவாய் -நீ
நீரிலும் இருப்பாய்
நெருப்பிலும் இருப்பாய்
மண்ணிலும் இருப்பாய்
விண்ணிலும் இருப்பாய்
காற்றிலும் கரைந்து இருப்பாய்
காலம் காலமாக இருக்கும்
உன்னைக் காட்ட முடியாது
உணர மட்டுமே முடியும்
உணர்ந்த பின்னர்
உன்னில் உறைந்து
மறைந்து உன்னில்
கலந்து கரைந்து விடுவதால்
மரணமே நீயும்
கடவுளும் ஒன்றா ?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
புதிய சிறகுகள்
எண்ணப் பறவை சிறகொடிந்து
மண்ணில் கிடக்கின்றது -பொய்
வேடந்தாங்கு வோரைத் -தன்
வேடந்தாங்கலாய் நம்பியதை
எண்ணித் தவிக்கின்றது
கண்ணீரை வடிக்கின்றது
கடந்த காலம் நினைக்கின்றது
காகிதத்தில் தன் காயம் துடைக்கின்றது
எழுதுகோல் எடுக்கின்றது -அதில்
எண்ணங்களை நிரப்புகின்றது
கற்பனையை விரிக்கின்றது
கவிதை பிறக்கின்றது
சாம்பலிலும் உயிர்க்கும்
"பீனிக்ஸ் " பறவையாய் உயிர்க்கின்றது
புதிய சிறகுகள் முளைக்கின்றது
புதிய சகாப்தம் படைக்கின்றது
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
மரம் நம் வரம்
வான மங்கையின் வண்ணமிகு
ஓசோன் ஆடையைத்
தொட்டிழுத்துத் துகிலுரித்தத்
துச்சாதனர்களே !
வரப்போகும் புவிவெப்பம் எனும்
புதியதொரு குரு சேஷ்த்திரப் போரினால் - நீங்கள்
தோற்காதிருக்கப் புகல்கிறேன்
புதிய கீதை !
வான மங்கையின்
வண்ணச் சேலையின் - ஓசோன்
ஓட்டைகளை ஒட்டுப்போட்டுத்
தைத்திடுங்கள்
நூலும் ஊசியும் இல்லா
நூதனத் தையல் இது
நுட்பமாய் இதனைச் செய்தால்
நுகர்ந்திடலாம் தூயக் காற்று
மரம் வளர்த்து
மனிதம் வளர்ப்போம் !
மரம்தான் இது மனிதற்கு
வரம்தான் என உணர்வோம் !!!
மந்திரம்
கேட்டேன்
கேட்டது கிடைக்கவில்லை
நினைத்தேன்
நினைத்தது நடக்கவில்லை
அழுதேன்
அமைதி கிடைக்கவில்லை
எழுதினேன்
ஏட்டில் வரவல்லை -புறக்
கண்களை மூடினேன் -அகக்
கண் திறந்தது
ஆழ்ந்து யோசித்தேன்
அனுபவங்களை தொடுத்தேன்
அரங்கேற்றம் செய்தேன்
அற்புதம் நிகழ்ந்தது
அச்சில் ஏறியது
கேட்காமலேயே வெற்றி
கிடைத்தது !
நினைக்காமலே வந்தது
நிம்மதி!
மாற்று யோசனையே
மந்திரம் என்ற
தந்திரம் தெரிந்தது !
முதிர்கன்னி
வீணாய் உலர்ந்த
மலருக்கு உண்டு மணம்
வீணாய்ப் போன
விதவைக்கு உண்டு மறுமணம்
குடும்பத் தூணாய் நிற்கும்
முதிர் கன்னிக்கு என்று மனம்?
ஒப்புக்கு வாழ்ந்து
ஓடாய் தேய்கிறாள் தினம்
கைத்தலம் பற்றக்
கனாக்காண்கிறாள் தினம் தினம்
கல்யாண பத்திரிகையில்
தன் பேர் வருமா என
ஏங்குகிறாள் தினம்
கன்னிகாதானம்.ஆனாலும்
கட்டாயம் தரவேண்டும் சீதனம்
நினைக்கையில் நெஞ்சுக்குள் ஆறாதரணம்
இதற்கு என்று நிவாரணம்?
கன்னத்துச் சுருக்கத்தையும்
காதோர நரையையும்
கண்ணாடி காட்டுது
கன்னி கழியாத கழிசடை என
ஊருசனம் தூற்றுது
எப்போது மாறும் இவரது குணம்?
நடைப்பிணம் அவளுக்கும் உண்டு மனம் ,மனம் .....?
வசந்தவாசல் கவிப் பேழை 2009
கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்
இனி ஒரு சுதந்திர வேள்வி
இன்று முதல் தொடங்குவோம்
அந்நியரை வெளியேற்றிய நாம்
அந்நிய மோகம் தவிர்க்க மறந்தோம்
தவிர்க்க மறந்ததால்- இன்று
தவித்து நிற்கிறோம்
தாய்ப்பால் தவிர்த்தப்
புட்டிப்பால் குழந்தையாய்
தாய்மொழி மறந்து
தடம் மாறி நின்று
தமிழ்ப்புத்தாண்டும்
தமிழர் திருநாளும் மறந்து
ஆங்கிலப் புத்தாண்டை
ஆலம் சுற்றி வரவேற்கின்றோம்
அந்நியரை மதிப்போம்
அதேசமயம் - நம்
கலாசாரமும் காப்போம்
களை எடுக்கிறோம் எனப் பயிரைப் பிடுங்காது
அந்நிய மோகம் தவிர்ப்போம் -நம்
அன்னை பூமியை மதிப்போம் .
காரையின் புது கவிதை
கவிதைச்சரம் கவிஞர் கே.பாலசுந்தரி
மாங்குடி
திருவாரூர்
சஞ்சீவி மருந்து!
கொத்துக் கொத்தாய்
செத்துமடியும் தொற்று
நோய்களுக்கு மருந்துகள்
பல கண்டோம்!
இளம்பிள்ளைவாதம் நீக்கப்
போலியோ ஒழிப்பு
முகாம்கள் கண்டோம்
மதவாதம் நீங்க
மருந்தென்ன கண்டோம்?
காலராவுக்கும் மருந்து கண்டோம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கால்வேறு கைவேறு ஆக்கி கதற வைக்கும்
கண்ணிவெடி கலாசாரத்திற்கு
மருந்து கண்டோமா?
பெரியம்மை, தட்டம்மை
பெரிதும் ஒழித்தோம்
அப்பாவிகளைத் தக்கும்
தீவிரவாதம் ஒழிய
மருந்து கண்டோமா?
விஞ்ஞானிகள் மருந்து
காணும் முன்னே - நம்
மெய்ஞானிகள் கண்ட
மருந்தொன்று உண்டு
அத்தனை வாதங்களையும்
அறவே நீக்கும் அற்புத மருந்து
அதுதான் அன்பெனும்
அருமருந்து!
-கே.பாலசுந்தரி
புதிய அந்தாதி
வீரசுதந்திரம் பெற்றிட்டோம்
தீரநெஞ்சினர் போராட்டத்தால்
போராட்டங்கள் ஓய்வதில்லை-எனவேப்
புதிதாய் ஒரு போராட்டம்
போராடும் வேலையில்லா இளைஞர்கள்
வேலைதேடி அலையாமல் - தானே
வேலைவாய்ப்பை உருவாக்கும்
புதியதொரு போராட்டம்
போராட்டம் வென்றிடும்
போர்க்குண இளைஞரணி
புண்ணிய பாரதத்தைத்
திண்ணியதாய் ஆக்கிடும்
ஆக்கிடும் திட்டங்கள்
அத்தனையும் பலித்திடும் - நாட்டை
வல்லரசாய் மாற்றிட
வலிமையான இளைஞர் வரிசை
வரிசையாய்ச் சாதனைகள்
வரிந்து கட்டும் தீரர்கள் - நாளைய
வரலாறு கூறிடும் நம்மையும்
வல்லரசு தான் என்று.
விடியலை நோக்கி ஒரு பறவை...
விடியல் வெகு விரைவில் விழித்திரு.
கனவுகளோ பெரிது
வாழ்க்கையோ சிறிது !
சாதிக்க நினைப்பது அதிகம்
சாதித்ததோ குறைவு !
சாதிக்க முடியும்
என்ற நம்பிக்கையோ
இந்த அகிலத்தை விட அதிகம் !
அந்த நம்பிக்கையில் - தான்
ஒவ்வொரு நாட்களும்
ஒவ்வொரு யுகங்களாய் நகர்கின்றன...
சாதிக்கும் நாள் வெகுவிரைவில்
தளர்ந்து விடாமல்
தடைகளை உடைத்தெறிந்தால்...
அந்த நாள் இந்த அகிலமே
நம்மை நோக்கும் நாள்....
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384
தூங்காத இரவுகள்...
ஏதோ நினைவுகள்
என் மனதில்
தினமும் ஓடிக்கொண்டிருக்குது
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் ஏதோ
ஒன்றை என்னுள்
புதைத்துவிட்டு ஓடுகிறது
தூங்காத இரவுகள்
மிஞ்சி நிற்க்கிறது கண்களில
நிசப்த்தமான இரவுகளில்
எங்கோ கேட்கும்
ஒரு மெல்லிய அழுகுரல்
என்னை தினமும் உலுக்குகிறது
அழுகுரலின் தேவை
என்ன என்பதை
அறிய முற்படுவதில்லை
எழுந்தவுடன் என்
தூங்காத இரவுகளின்
மிச்சத்தை விழிகளில் காணும் வரை
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384
புன்னகையே பதிலாக.....
நீங்கள் மட்டும் அல்ல
எல்லோரும் என்னிடம்
கேட்கும் கேள்விக்கு
பதில் இல்லை - என்னிடம்
என் சிறு புன்னகையை
மட்டும் பதிலாக தருகிறேன் ,
என் சிறு புன்னகை
உங்களின் கேள்விக்கு
நிறைவான பதில் இல்லை
என்பதையும் நான் அறிவேன் ,
எதை நோக்கியும்
என் பயணம் இல்லை
எதை எதிர்பார்த்தும்
என் நாட்கள் இல்லை
எதை நினைத்தும்
என் கனவுகள் வருவதில்லை
எதை நேசித்தும்
என் உறவுகள் இல்லை
ஆனால் ,
ஏதோ ஒன்றை நோக்கி
என் பயணம் செல்கிறது
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து
என் நாட்கள் நகர்கிறது
ஏதோ ஒன்றை நினைத்து
என் கனவுகள் வருகிறது
ஏதோ ஒன்றை நேசித்து
என் உறவுகள் உருகுகிறது ,
எனக்கு ஒன்று மட்டும்
புரிகிறது - நீங்கள்
என்னிடம் எதிர்பார்க்கும் பதில்
உங்கள் கேள்விகளுக்காக -இல்லை
என்றோ ஒரு நாள்
உங்களிடம் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு - நீங்களும்
சிறு புன்னகையை மட்டும்
பதிலாக தந்ததால் -என்னிடமாவது
பதில் கிடைத்துவிடாதா
என்ற எண்ணத்தில்
என்ன செய்வது
இந்த கேள்விக்கும்
என்னிடம் -
சிறு புன்னகையே பதிலாக...
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384
விடியல் வெகு விரைவில் விழித்திரு.
கனவுகளோ பெரிது
வாழ்க்கையோ சிறிது !
சாதிக்க நினைப்பது அதிகம்
சாதித்ததோ குறைவு !
சாதிக்க முடியும்
என்ற நம்பிக்கையோ
இந்த அகிலத்தை விட அதிகம் !
அந்த நம்பிக்கையில் - தான்
ஒவ்வொரு நாட்களும்
ஒவ்வொரு யுகங்களாய் நகர்கின்றன...
சாதிக்கும் நாள் வெகுவிரைவில்
தளர்ந்து விடாமல்
தடைகளை உடைத்தெறிந்தால்...
அந்த நாள் இந்த அகிலமே
நம்மை நோக்கும் நாள்....
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384
தூங்காத இரவுகள்...
ஏதோ நினைவுகள்
என் மனதில்
தினமும் ஓடிக்கொண்டிருக்குது
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் ஏதோ
ஒன்றை என்னுள்
புதைத்துவிட்டு ஓடுகிறது
தூங்காத இரவுகள்
மிஞ்சி நிற்க்கிறது கண்களில
நிசப்த்தமான இரவுகளில்
எங்கோ கேட்கும்
ஒரு மெல்லிய அழுகுரல்
என்னை தினமும் உலுக்குகிறது
அழுகுரலின் தேவை
என்ன என்பதை
அறிய முற்படுவதில்லை
எழுந்தவுடன் என்
தூங்காத இரவுகளின்
மிச்சத்தை விழிகளில் காணும் வரை
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384
புன்னகையே பதிலாக.....
நீங்கள் மட்டும் அல்ல
எல்லோரும் என்னிடம்
கேட்கும் கேள்விக்கு
பதில் இல்லை - என்னிடம்
என் சிறு புன்னகையை
மட்டும் பதிலாக தருகிறேன் ,
என் சிறு புன்னகை
உங்களின் கேள்விக்கு
நிறைவான பதில் இல்லை
என்பதையும் நான் அறிவேன் ,
எதை நோக்கியும்
என் பயணம் இல்லை
எதை எதிர்பார்த்தும்
என் நாட்கள் இல்லை
எதை நினைத்தும்
என் கனவுகள் வருவதில்லை
எதை நேசித்தும்
என் உறவுகள் இல்லை
ஆனால் ,
ஏதோ ஒன்றை நோக்கி
என் பயணம் செல்கிறது
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து
என் நாட்கள் நகர்கிறது
ஏதோ ஒன்றை நினைத்து
என் கனவுகள் வருகிறது
ஏதோ ஒன்றை நேசித்து
என் உறவுகள் உருகுகிறது ,
எனக்கு ஒன்று மட்டும்
புரிகிறது - நீங்கள்
என்னிடம் எதிர்பார்க்கும் பதில்
உங்கள் கேள்விகளுக்காக -இல்லை
என்றோ ஒரு நாள்
உங்களிடம் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு - நீங்களும்
சிறு புன்னகையை மட்டும்
பதிலாக தந்ததால் -என்னிடமாவது
பதில் கிடைத்துவிடாதா
என்ற எண்ணத்தில்
என்ன செய்வது
இந்த கேள்விக்கும்
என்னிடம் -
சிறு புன்னகையே பதிலாக...
R.S.பாலமுருகன்.
Cell: 9841165384