கவிஞர்களின் பார்வையில் நேரு !
மாங்குடிபாலா
நேரு !
ஆனந்த பவனம் தந்த
ஆசிய ஜோதியே!
மனிதாபிமானம் மிக்கவனே
மனிதருள் மாணிக்கமே!
பஞ்சசீலம் கண்டவனே
பாரதம் ஆண்டவனே
அணிசேரா நாடுகளின்
அணிதலைவனே!
இந்தியாவின் வரலாற்றை
இந்திராவுக்கு கடிதம் மூலம்
ஊட்டியவனே -உலகுக்கு
உணர்தியவனே ரோஜாவை
உன்நெஞ்சில் பதித்து -முள்ளை
எம் நேசில் பதித்து -நீ
மறைத்து விட்டாய் -மறைந்தும்
எம்முள் உறைந்துவிட்டாய் -உன்னை
எரித்த சாம்பலை
இந்தியா முழுவதும் தூவச் சொன்னாய்
சாம்பலிலும் உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையாய் -எம்
நெஞ்சில் நீ உயிர்துவிட்டை
தாயகத்தை உயர்த்திட தலைவனே
நீ என்றும் எம்முள்
நின்று வழி நடத்துவாய்
மாங்குடிபாலா
நேரு !
ஆனந்த பவனம் தந்த
ஆசிய ஜோதியே!
மனிதாபிமானம் மிக்கவனே
மனிதருள் மாணிக்கமே!
பஞ்சசீலம் கண்டவனே
பாரதம் ஆண்டவனே
அணிசேரா நாடுகளின்
அணிதலைவனே!
இந்தியாவின் வரலாற்றை
இந்திராவுக்கு கடிதம் மூலம்
ஊட்டியவனே -உலகுக்கு
உணர்தியவனே ரோஜாவை
உன்நெஞ்சில் பதித்து -முள்ளை
எம் நேசில் பதித்து -நீ
மறைத்து விட்டாய் -மறைந்தும்
எம்முள் உறைந்துவிட்டாய் -உன்னை
எரித்த சாம்பலை
இந்தியா முழுவதும் தூவச் சொன்னாய்
சாம்பலிலும் உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையாய் -எம்
நெஞ்சில் நீ உயிர்துவிட்டை
தாயகத்தை உயர்த்திட தலைவனே
நீ என்றும் எம்முள்
நின்று வழி நடத்துவாய்