மனக் கோயில் கொண்ட மகாதேவன்
நன்றி
திருக்கோவில் கே.பாலசுந்திரி,எம்.ஏ.
ஆலயம்!
நம் இதயம் இசைக்கும் பக்திலயமும். இறைவனின் கருணை லயமும் இணைந்தால் நம் இதயக்கோவிலில் இறைவன் குடியேறுவான். இதனையே
உள்ளப் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல்த் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஜந்துங் காளாமணிவிளக்கு"
-திருமூலர்
என்கிறது திருமந்திரம்.
அல்லும் பகலும் இறைவனை மனதில் ஏத்தி வைத்து அன்போடு நம்பிக்கையோடு பூசித்து வந்தால் அவன் நம் இதயக் கோவிலில் எழுந்தருள்வான். உதாரணமாக கோவிலில் தீபாராதனையைக் கண்டு களிக்கிறோம். கண்மூடி ஜபிக்கிறோம். அதை எப்போதும் அகக்கண்ணில் கண்டு களிக்கிறோம். இது எப்படி சாத்தியம் ஆகிறது.
தீபாராதனை என்பது போட்டோ எடுக்கும் போது ஏற்படும் பிளாஷ் ஒளி போன்றது. அந்த ஒளியில் விக்ரத்தின் உருவம் நம் கண்கள் எனும் காமிராவால் படம் பிடிக்கப்பட்டு நமது இதயம் என்ற இருட்டறையில் கழுவப்படுகிறது. இதை மற்றவர்க்குக் காட்ட முடியாது. ஆயினும் நம்மால் நன்கு உணர முடியும்.
இப்படித் தன் மனதில் கண்ட இறைவனுக்குத் தன் மனதிலேயே கோயில் கட்டிய அன்பர் ஒருவர் உண்டு. அவர் இதயக் கோவில் குடமுழுக்குக்காக அரசன் அமத்தக் கோவிலின் குடமுழுக்கைத் தள்ளி வைக்கச் சொன்னான் இறைவன். இது நடக்க முடியுமா என யோசிக்கும் நமக்கு பாரதி பதில் கூறுகிறான்.
"பாவித்தல் போதுமே பரமநிலையெய்துதற்கே" - பாரதி
ஆம்!
கற்பனை செய்தால் போதும் நம் காரியம் கைகூட. இந்த அற்புதத்தை நிகழ்த்துவது நமது ஆழ்மன எண்ணங்கள். இப்படி நமது உயர்வான லட்சியங்கள் பற்றித் தினமும் புலனறிவினால் கற்பனை செய்தால், அது நமது ஆழ்மனதில் படக்காட்சியாய்ப் பதிகிறது. அந்த ஆழ்மன எண்ணங்கள் எப்படியோ பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு காரியங்கள் நிகழ்கின்றன. ஒத்த எண்ணமுடையவரை ஈர்க்கின்றது. அவர்களின் உதவி கிடைக்கின்றது. நமது லட்சியம் நிறைவேறுகிறது.சில சமயம் கனவுகள் -உல்ளுணர்வு மூலம் வழி காண்கிறோம். இதனையே தெய்வாதீனம் என்று குறிப்பிடுகிறோ என்று உலவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இது பற்றி டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தனது "எண்ணங்கள்" என்ற நூலில் விரிவாகக் கூறியிருக்கிறார்.
இதனையே எண்ணங்கள் போல் வாழ்வு - எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என முன்னோர்கள் மறைமுகமாகக் கூறி இருக்கின்றனர். இப்படித் தன் லட்சியமானக் கோவிலை நனவில் கட்ட முடியாத நிலையிலும் கனவிலேயே கட்டி முடித்தவர் பூசலார். சான்றோர் உடைத்த தொண்டை நாட்டில் திருநின்றவூரில் பிறந்தவர். அவரே திருவாகிச் சிறக்கப் போகிறார் என்பதால் முன்னமே அப்படிப் பொருத்தமான பெயர் அமைந்ததா?
திருநின்றவூரில் இறைவனுக்குத் திருக்கோவில் அமைக்க ஆசை. அந்த ஆசைபற்றியயே அசைபோடும் மனம். மனம் விரும்பிய கோவில் கட்டத் திருமகள் மனம் இசையவில்லை எனவே வறுமை வாட்டியது. ஆயினும் வளமான மனம். நனவுக் கஒயிலைக் கனவில் கட்ட முற்படுகிறார்' ஆசையைத் தனது ஆழ்மனதில் விதைக்கிறார்.
" மெய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சிப்
தம்மையுள் நோக்கிக் கண்டு
தகவெனும் வேயிலிட்டுச்
செம்மையுள் நிற்பாராகில்
சிவகதி விளையும் அன்றே - நாவுக்கரசர் தன் மனதாலேயே பொருள் சேர்த்தார். இடம் தேர்வு செய்தார். ஆகம விதிப்படிக் கோவில் கட்ட ஆரம்பித்தார் சிற்பிகள், சாத்திர வல்லுநர்கள்,தொழிலாளிகள் அனைவரையும் மனதாலேயே தேர்வு செய்தார். சிற்ப சித்திர வேலைப்பாடுகள் அனைத்தையும் மனதிலேயே வடிவமைத்தார். திருக்குளம் -கொடிமரம் - இறைஉருவம் அனைத்தும் கற்பனையிலேயே வடித்தார்.
இடையிடையே பணத்தட்டுப்பாடு - ஆள் தட்டுப்பாடு என்ற நடைமுறை விஷயுகங்களையும் கற்பனை செய்தார். ஆண்டுகள் பல ஆயின. ஆலயத்தைக் கட்டி முடித்து ஆலயத்திற்குக் குடமுழுக்கு செய்ய நாள் குறித்தார் கற்பனையில்தான். பூசலாரின் புதிய பூசனை முறைகயை உலகுக்கு உணர்த்த திருஉளம் கொண்டான் இறைவன். அப்போது பல்லவ மன்னன் ஒரு கோயில் எழுப்பித்து இருந்தான். அதற்குக் குடமுழுக்கு நடத்தப் பூசலார் தெரிவு செய்து நாளையேத் தேர்வு செய்து இருந்தான்.
இறைவன் மன்னன் கனவில் தோன்றினான். "குடமுழுக்கு செய்யய வேறொரு நாள் குறிப்பிடுக. அன்றைய தினம் பூசலாரின் குடமுழுக்கைத் திருநின்றவூரில் யாம் ஏற்க வேண்டும்." என்று அருளி மறைந்தார். மன்னன் திடுக்கிட்டு விழித்தான். எங்கும் நிறைந்த இறைவன் அன்று வர இயலாது என்று கூறியது கண்டு அதிசயித்தான்.
அதிசயக் கோயிலைக் காண அரசன் தன் பரிவாரகங்களோடு திருநின்றவூர் விரைந்தான். கோயில் இல்லை ; கும்பாஷேகப் பணிகள் இல்லை. குழம்புகிறான். பூசலார் கட்டிய கோயில் எங்கு உள்ளது என விசாரிக்கிறான். கோயிலா? என திகைத்த ஊரார் பூசாரிசடம் மன்னனை அழைத்துச் செல்கின்றனர்.
மன்னன் தன் கனவினை உரைக்கப் பூசலார் தயங்கித் தயங்கி தனது மனக்கோயிலை விவரிக்க, தாங்கள் கற்பனை செய்த கோயிலைப் போன்ற வடிவிலேயே நான் அமைத்த கோயிலும் என மன்னன் சிலிர்க்க தனது கனவை நனவாக்கிய இறைவனின் கருணைத் திறத்தை எண்ணி எண்ணி உருகினார் பூசலார். தன் மனக் கோயில் கொண்ட மகராஜனை வழிபட்டு இறையருள் பெற்றார். திருநின்றவூரில் ஒரு சிவாலயம் அமைக்கச் செய்தான் மன்னன். இறைவன் பெயர் "இருதயாலீஸ்வரர்" எத்தனைப் பொருத்தமான பெயர். பூசலாரின் கனவை நனவாக்கினார் மகேஸ்வரன்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்".
-குறள்
நன்றி
திருக்கோவில் கே.பாலசுந்திரி,எம்.ஏ.
ஆலயம்!
நம் இதயம் இசைக்கும் பக்திலயமும். இறைவனின் கருணை லயமும் இணைந்தால் நம் இதயக்கோவிலில் இறைவன் குடியேறுவான். இதனையே
உள்ளப் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல்த் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஜந்துங் காளாமணிவிளக்கு"
-திருமூலர்
என்கிறது திருமந்திரம்.
அல்லும் பகலும் இறைவனை மனதில் ஏத்தி வைத்து அன்போடு நம்பிக்கையோடு பூசித்து வந்தால் அவன் நம் இதயக் கோவிலில் எழுந்தருள்வான். உதாரணமாக கோவிலில் தீபாராதனையைக் கண்டு களிக்கிறோம். கண்மூடி ஜபிக்கிறோம். அதை எப்போதும் அகக்கண்ணில் கண்டு களிக்கிறோம். இது எப்படி சாத்தியம் ஆகிறது.
தீபாராதனை என்பது போட்டோ எடுக்கும் போது ஏற்படும் பிளாஷ் ஒளி போன்றது. அந்த ஒளியில் விக்ரத்தின் உருவம் நம் கண்கள் எனும் காமிராவால் படம் பிடிக்கப்பட்டு நமது இதயம் என்ற இருட்டறையில் கழுவப்படுகிறது. இதை மற்றவர்க்குக் காட்ட முடியாது. ஆயினும் நம்மால் நன்கு உணர முடியும்.
இப்படித் தன் மனதில் கண்ட இறைவனுக்குத் தன் மனதிலேயே கோயில் கட்டிய அன்பர் ஒருவர் உண்டு. அவர் இதயக் கோவில் குடமுழுக்குக்காக அரசன் அமத்தக் கோவிலின் குடமுழுக்கைத் தள்ளி வைக்கச் சொன்னான் இறைவன். இது நடக்க முடியுமா என யோசிக்கும் நமக்கு பாரதி பதில் கூறுகிறான்.
"பாவித்தல் போதுமே பரமநிலையெய்துதற்கே" - பாரதி
ஆம்!
கற்பனை செய்தால் போதும் நம் காரியம் கைகூட. இந்த அற்புதத்தை நிகழ்த்துவது நமது ஆழ்மன எண்ணங்கள். இப்படி நமது உயர்வான லட்சியங்கள் பற்றித் தினமும் புலனறிவினால் கற்பனை செய்தால், அது நமது ஆழ்மனதில் படக்காட்சியாய்ப் பதிகிறது. அந்த ஆழ்மன எண்ணங்கள் எப்படியோ பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு காரியங்கள் நிகழ்கின்றன. ஒத்த எண்ணமுடையவரை ஈர்க்கின்றது. அவர்களின் உதவி கிடைக்கின்றது. நமது லட்சியம் நிறைவேறுகிறது.சில சமயம் கனவுகள் -உல்ளுணர்வு மூலம் வழி காண்கிறோம். இதனையே தெய்வாதீனம் என்று குறிப்பிடுகிறோ என்று உலவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இது பற்றி டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தனது "எண்ணங்கள்" என்ற நூலில் விரிவாகக் கூறியிருக்கிறார்.
இதனையே எண்ணங்கள் போல் வாழ்வு - எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என முன்னோர்கள் மறைமுகமாகக் கூறி இருக்கின்றனர். இப்படித் தன் லட்சியமானக் கோவிலை நனவில் கட்ட முடியாத நிலையிலும் கனவிலேயே கட்டி முடித்தவர் பூசலார். சான்றோர் உடைத்த தொண்டை நாட்டில் திருநின்றவூரில் பிறந்தவர். அவரே திருவாகிச் சிறக்கப் போகிறார் என்பதால் முன்னமே அப்படிப் பொருத்தமான பெயர் அமைந்ததா?
திருநின்றவூரில் இறைவனுக்குத் திருக்கோவில் அமைக்க ஆசை. அந்த ஆசைபற்றியயே அசைபோடும் மனம். மனம் விரும்பிய கோவில் கட்டத் திருமகள் மனம் இசையவில்லை எனவே வறுமை வாட்டியது. ஆயினும் வளமான மனம். நனவுக் கஒயிலைக் கனவில் கட்ட முற்படுகிறார்' ஆசையைத் தனது ஆழ்மனதில் விதைக்கிறார்.
" மெய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சிப்
தம்மையுள் நோக்கிக் கண்டு
தகவெனும் வேயிலிட்டுச்
செம்மையுள் நிற்பாராகில்
சிவகதி விளையும் அன்றே - நாவுக்கரசர் தன் மனதாலேயே பொருள் சேர்த்தார். இடம் தேர்வு செய்தார். ஆகம விதிப்படிக் கோவில் கட்ட ஆரம்பித்தார் சிற்பிகள், சாத்திர வல்லுநர்கள்,தொழிலாளிகள் அனைவரையும் மனதாலேயே தேர்வு செய்தார். சிற்ப சித்திர வேலைப்பாடுகள் அனைத்தையும் மனதிலேயே வடிவமைத்தார். திருக்குளம் -கொடிமரம் - இறைஉருவம் அனைத்தும் கற்பனையிலேயே வடித்தார்.
இடையிடையே பணத்தட்டுப்பாடு - ஆள் தட்டுப்பாடு என்ற நடைமுறை விஷயுகங்களையும் கற்பனை செய்தார். ஆண்டுகள் பல ஆயின. ஆலயத்தைக் கட்டி முடித்து ஆலயத்திற்குக் குடமுழுக்கு செய்ய நாள் குறித்தார் கற்பனையில்தான். பூசலாரின் புதிய பூசனை முறைகயை உலகுக்கு உணர்த்த திருஉளம் கொண்டான் இறைவன். அப்போது பல்லவ மன்னன் ஒரு கோயில் எழுப்பித்து இருந்தான். அதற்குக் குடமுழுக்கு நடத்தப் பூசலார் தெரிவு செய்து நாளையேத் தேர்வு செய்து இருந்தான்.
இறைவன் மன்னன் கனவில் தோன்றினான். "குடமுழுக்கு செய்யய வேறொரு நாள் குறிப்பிடுக. அன்றைய தினம் பூசலாரின் குடமுழுக்கைத் திருநின்றவூரில் யாம் ஏற்க வேண்டும்." என்று அருளி மறைந்தார். மன்னன் திடுக்கிட்டு விழித்தான். எங்கும் நிறைந்த இறைவன் அன்று வர இயலாது என்று கூறியது கண்டு அதிசயித்தான்.
அதிசயக் கோயிலைக் காண அரசன் தன் பரிவாரகங்களோடு திருநின்றவூர் விரைந்தான். கோயில் இல்லை ; கும்பாஷேகப் பணிகள் இல்லை. குழம்புகிறான். பூசலார் கட்டிய கோயில் எங்கு உள்ளது என விசாரிக்கிறான். கோயிலா? என திகைத்த ஊரார் பூசாரிசடம் மன்னனை அழைத்துச் செல்கின்றனர்.
மன்னன் தன் கனவினை உரைக்கப் பூசலார் தயங்கித் தயங்கி தனது மனக்கோயிலை விவரிக்க, தாங்கள் கற்பனை செய்த கோயிலைப் போன்ற வடிவிலேயே நான் அமைத்த கோயிலும் என மன்னன் சிலிர்க்க தனது கனவை நனவாக்கிய இறைவனின் கருணைத் திறத்தை எண்ணி எண்ணி உருகினார் பூசலார். தன் மனக் கோயில் கொண்ட மகராஜனை வழிபட்டு இறையருள் பெற்றார். திருநின்றவூரில் ஒரு சிவாலயம் அமைக்கச் செய்தான் மன்னன். இறைவன் பெயர் "இருதயாலீஸ்வரர்" எத்தனைப் பொருத்தமான பெயர். பூசலாரின் கனவை நனவாக்கினார் மகேஸ்வரன்.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்".
-குறள்