முன்னுரை
சோழர்கள் ஆட்சியில் தஞ்சைத் தரணியில் ஆலயங்கள் பொலிவு பெற்று விளங்கின. மாடக்கோவில் மூலமாக அந்தப் பொலிவுக்குப் புதிய வடிவு கண்டான் கோட் செங்கட் சோழன். செங்கற் கோவில்களைக் கருங்கற் கோவிலாக அமைத்து அந்த வடிவுக்குப் புதிய வலிமை கண்டனர்.பராந்தகனும்,கண்டராதித் தனும் அவன் துணைவி செம்பியன் மாதேவியும்.
விண்ணை முட்டும் கோபுரம் கண்டு அந்த வலிமைக்குப் புதிய வனப்பும் சேர்த்தனர் ராஜராஜனும் ,ராஜேந்திரனும்.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயங்கள் அந்நியர் படையெடுப்பாலும் -அந்நியர் ஆட்சியாலும் தன் பொலிவு குன்றி இருட்டடிப்புக்கு ஆளாயின. அவற்றை மீண்டும் வெளிச்சத்திற்கும் கொணர வித்திட்டவர் அமரர் தொ.மு .பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்.
கல்கியில் வெளியான அவருடைய வேங்கடம் முதல் குமரி வரை கட்டுரைத் தொடருக்கு பின்னே நம்மிடையே ஒரு வழிப்புணர்வு பக்தியில் ஒரு புதிய மறுமலர்ச்சி.
அவருடைய எழுத்தின் ஊடே நாமும் வேங்கடம் முதல் குமரி வரை பயணித்தோம் .பக்தியில் திளைத்தோம்.பரவசம் கொண்டோம்.
அந்த ஆன்மீகச் செம்மலின் அடியொட்டி பொன் வைக்கும் இடத்தில பூ வைக்கும் முயற்சியில் என் முதல் நூலை அரங்கேற்றுகிறேன்.
காண மயிலாடக் கண்டிருந்த வான் கோழியாய் என் எழுத்துச் சிறகை விரிக்கிறேன் .
எழுத்துலகில் தாமதமாக நடைபயிலத் தொடக்கி இருக்கும் நோஞ்சான் குழந்தையான என்னை வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.
அன்புடன்
கே.பாலசுந்தரி. எம் .எ (மாங்குடிபாலா )
சோழர்கள் ஆட்சியில் தஞ்சைத் தரணியில் ஆலயங்கள் பொலிவு பெற்று விளங்கின. மாடக்கோவில் மூலமாக அந்தப் பொலிவுக்குப் புதிய வடிவு கண்டான் கோட் செங்கட் சோழன். செங்கற் கோவில்களைக் கருங்கற் கோவிலாக அமைத்து அந்த வடிவுக்குப் புதிய வலிமை கண்டனர்.பராந்தகனும்,கண்டராதித் தனும் அவன் துணைவி செம்பியன் மாதேவியும்.
விண்ணை முட்டும் கோபுரம் கண்டு அந்த வலிமைக்குப் புதிய வனப்பும் சேர்த்தனர் ராஜராஜனும் ,ராஜேந்திரனும்.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயங்கள் அந்நியர் படையெடுப்பாலும் -அந்நியர் ஆட்சியாலும் தன் பொலிவு குன்றி இருட்டடிப்புக்கு ஆளாயின. அவற்றை மீண்டும் வெளிச்சத்திற்கும் கொணர வித்திட்டவர் அமரர் தொ.மு .பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்.
கல்கியில் வெளியான அவருடைய வேங்கடம் முதல் குமரி வரை கட்டுரைத் தொடருக்கு பின்னே நம்மிடையே ஒரு வழிப்புணர்வு பக்தியில் ஒரு புதிய மறுமலர்ச்சி.
அவருடைய எழுத்தின் ஊடே நாமும் வேங்கடம் முதல் குமரி வரை பயணித்தோம் .பக்தியில் திளைத்தோம்.பரவசம் கொண்டோம்.
அந்த ஆன்மீகச் செம்மலின் அடியொட்டி பொன் வைக்கும் இடத்தில பூ வைக்கும் முயற்சியில் என் முதல் நூலை அரங்கேற்றுகிறேன்.
காண மயிலாடக் கண்டிருந்த வான் கோழியாய் என் எழுத்துச் சிறகை விரிக்கிறேன் .
எழுத்துலகில் தாமதமாக நடைபயிலத் தொடக்கி இருக்கும் நோஞ்சான் குழந்தையான என்னை வாசகர்கள் இருகரம் நீட்டி வரவேற்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்.
அன்புடன்
கே.பாலசுந்தரி. எம் .எ (மாங்குடிபாலா )