ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.
முன்னுரை:
தேவாரம் முதலிய பக்தி நூல்களின் தொகுப்புக்கு திருமுறைகள் என்று பெயர். தமிழில் உயிர் எழுத்துக்கள் பண்ணிரண்டு, அது போல் பக்திக்கு உயிர் நாடியான திரு முறைகளும் பண்ணிரண்டு.முறை என்றால் நூல் என்று பொருள், திரு முறை என்றால் இறைவனை போற்றிப் பாடும் நூல்கள் என்று பெயர்.
மேலும் முறை என்றால் நெறி, வழி என்றும் பொருள், திருமுறை என்றால் செம்மையான நெறி ,சிறந்த வழி என்றும் பொருள் கொள்ளலாம். நமது வாழ்வுக்குத் தேவையான நெறிகளையும்,முறைகளையும் தெள்ளத் தெளிவாகப் புகட்டுவது இந்தத் திருமுறைகளே ஆகும்.
கிட்ட தட்ட 6 ம் நூற்றாண்டு இருதியில் பாடதலை பட்டு இவை 10 ம் நூற்றாண்டில் தொடுக்கப்பட்டது. இருப்பினும் இவை பாமரர்களை அதிகம் சென்றடைய வில்லை காரணம் பல்வேறு படை எடுப்புகள்.ஆட்சி மற்றங்கள்.
இந்த நிலை மாறியது 20 ம் நூற்றாண்டில் தான் மாற்றியவர் அமரர் திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். தேவாரப் பண்ணை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் இவரே. இவரது தேவார இசை தட்டுகள் ஒலிக்காத ஆலயங்களே இல்லை எனலாம் . குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி , திருவெம்பாவை மார்கழி பனியுடன் இவரது குரலைக் கேட்கும் போது நமக்கு சிலிர்க்கும். மனம் சில்லிட்டுப் போகும். இவரது குரலை இசைத்தட்டில் கொண்டுவந்த பெருமை தருமை ஆதீனத்தையேசாரும்.
அடுத்து தருமபுரம் சுவாமினாதன் அவர்கள்,திருமுறை சித்தராகவே வாழ்ந்தவர் தற்போது சாமி தண்டபாணி அவர்கள் பெரிதும் தன்னை திருமுறைக்காவவே அர்ப்பணித்து கொண்டவர்.
பின்னர் இசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தை "சிம்பொனியில்" தந்து உலக அரங்கில் உன்னத இடம் பெறச்செய்தார்.நமது தமிழ் மேலை நாடுகளிலும் ஒலிக்கச்செய்தவர் இவரே. இப்படிப்பட்ட தேவார திரு வாசக பண்களை ஒதுபவர்கள் ஒதுவார்கள் என்று அழைக்கப்பட்டனர் ஒதுதல் என்றால் பாராயணம் என்றுப்பொருள்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.1
ஒதுவது ஒழியேல்...
ஒதாமல் ஒரு நாலும் இருக்க வேண்டாம்... என்பது மரபு. ஒதுவது என்பது படிப்பது,படிப்பிப்பது,கற்பது,கற்றுக் கொடுப்பது எனபல் வேறு பொருள்கள் உண்டு.வேதம் ஒதுதல் என்பதே வழக்கு.அதாவது வேத பாராயனம் செய்வது,அந்தக் காலத்தில் எழுதிப் படிக்கும் வழக்கம் இல்லை.வாய்வழி கேட்டே கல்வி பயின்றார்கள்.அதுவும் இசையுடன்.அவர்கள்வேத விற்பன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
திருமுறைகளுக்கும் திராவிட வேதம் என்றே பெயர் வழங்கப்பட்டது.இருப்பினும் திரவிட வேதத்திற்கு அதிகம் முக்கியதுவம் கிடைக்கவில்லை காரணம்.ராஜராஜன் காலத்தேதான் தேவாரங்கள் சிதம்பரத்தில் கண்டு எடுக்கப்பட்டன.இருந்தும் அவன் காலத்தே தேவரம் அதிக முக்கியதுவம் பெறவில்லை.ஆயினும் இவன் காலம் தொட்டே 63 மூவருக்கு சிலைகள் ஆலயத்தில் அமைக்கப்பட்டன.இருப்பினும் ஆட்சியிலும் ஆலயத்திலும் வடமொழிக்கே அதிகம் முக்கியதுவம் தரப்பட்டது.ஆலயத்தை ஒட்டி அவர்கள் வசிக்க அக்கிரஹாரம் என்று வீதி அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டனர்.ஆலயத்தில் நான்கு வேதங்களே முழங்கியது,திராவிடவேதம் ஒதுக்கப்பட்டது.அ+கிரக+ஹாரம், அந்தனர்கள் வசிக்கும் வீடுகளின் மாலை என்ற பொருளில் அக்கிரஹாரம் என்ற சொல் வழக்கில் வந்தது இது இன்றும் பல ஊர்களில் உண்டு இது இனாம் சாசனம் செய்யப்பட்டது.
களப்பிரர்கள் ஆட்சியில்தமிழகம் இருண்டுகிடந்த போது,ஒளியேற்ற வந்தவர்கள் பல்லவர்கள். இவர்கள்தொண்டைமான்,இளந்திரையன் வழி வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். சோழ இளவரசனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவன் இவன்.இவர்கள்பயனித்தக் கப்பல் புயலில் சிக்கியது தொண்டைக் கொடியால் பாலகனை ஒரு பலகையில் கட்டிக் கடலில் இட்டனர், பெற்றோர்.இளம்திரைகளால் கடற்கரையில் ஒதுங்கியவனே பின்னாளில் தொண்டைமான் இளந்திரையன் ஆனான். இவன் வழிவந்தவர்கள்களே பல்லவர்கள் இளம் திரை என்றால் கடல் அலைகள்.தொண்டைக் கொடியால் பினைக்கப்பட்டு இளம்திரையில் மிதந்து வந்தவன் ஆனதால் தொண்டைமான் இளந்திரையன் என்று பெயர்பெற்றான்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.2
இந்தத் தொண்டைமான் இளந்திரையன் பற்றி அமரர் கல்கி அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" நாவலில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.அவர் நடையும்,மணியம்,வினுவின் ஒவியக் கொடையும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் அற்புத அனுபவங்கள்,அது சொல்லில் அடங்காத அனுபவம், சொல்லில் புரியவக்க முடியாத அனுபவம்.
இந்த இளந்திரையன் வழி வந்த சிம்ம விஷ்னுவே களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன். இவன் மகன் மகேந்திரவர்மன் கல்லிலே லலை வண்ணம் கண்டவன்.சித்திரகாரப்புலி என்ற பட்டம் பெற்றவன்.புதியதொரு யாழைக்கண்டு பிடித்தவன்,குடுமியான் மலை கல்வெட்டுகள் இவன் இசைத்திறமை புகழ் பாடுகிறது.செங்கல்,இரும்பு,இன்றிகற்றளி கோவில்கள் கண்ட கதா நாயகன் இவனே. இவனது கொடையே மாமல்லபுரம்,சமயச்சீரழிவு பற்றி ஒரு நாடகமும் இயற்றி இருக்கிறான் இவன்.
இவன் கி.பி. 6 ம் நூற்றாண்டு இறுதியிலும் 7 ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவன். இவன் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமுறை தந்த நாவுக்கரசரும்,ஞானசம்பந்தரும்.மன்னன்சமணத்தைச்சார்ந்தவன்.நாவுக்கரசரின் ஆரம்பகாலப் பெயர் மருள் நீக்கியார் இவரும் சமணத்தைச்சார்ந்தவரே,இவரது சகோதரியின் முயற்சியால் இவர் மீண்டும் சைவத்திற்கு திரும்பினார்.மன்னனையும் சைவத்திற்கு திருப்பினார்.
இறைவன் நாவுக்கரசரை சூலை (நோய்)தந்து ஆட்கொண்டான், சம்பந்தரை பாலைத் தந்து ஆட்கொண்டான்,சுந்தரரை ஒலைதந்து ஆட்கொண்டான்.
நாவுக்கரசர் தன்னை அடிமையாகவும் ஆண்டவனை ஆண்டானகவும் பாவித்து பாடியவர் எனவே இவர் தமிழ் "கெஞ்சுதமிழ்" ,சம்பந்தர் தந்தையாகவே இறைவனைக் கண்டார்.எனவே இவரது பாடல்கள் தகப்பனிடம் மகன் பேசுவது போன்றது. எனவே அது"கொஞ்சு தமிழ்" சுந்தரர் இறைவனைத் தன் தோழனாகவே கண்டார். பறவையிடம் தூது சென்றார், திருக்குவளையிலிருந்து ஆருருக்கு நெல் கொணர்ந்தார் எனவே இவர் தமிழ்"விஞ்சுதமிழ்" என்று வாகீசகலா நிதி அமரர் கி.வா.ஜகன் நாதன் அவர்கள் அழகுறப்பட்டியல் இடுகிறார்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.3
மகேந்திரவர்மனுக்கும், அவன் மகன் மாம்ல்லனுக்கும் படைத்தளபதியாக அமைந்த பரஞ்சோதியே பின்னாளில் பிள்ளைக் கறியமுது தந்து சிறுதொண்டராக உயர்ந்தவர். இவர் தலைமையிலே மாமல்லன் இரண்டாம், புலிகேசியை வெற்றி கொண்டான்.வாதாபியிலிருந்து கொணர்ந்த கணபதியைத் தனது ஊரான "திருச்செங்காட்டான் குடியில்" பிரதிஷ்டை செய்தார் பரஞ்சோதி,திருவாருரில் இருப்பதே வாதாபி கணபதி என்று வாதிடுவோரும் உண்டு,எது எப்படி இருந்தாலும்"வாதாபி கணபதியாக" பல்வேறு கீர்த்தனையில் இடம் பெற்ற கீர்த்தி இவருக்கு உண்டு.நாவுக்கரசருக்கு முன்னரே கரைக்கால் அம்மையார் பல பதிகங்கள் பாடி இருக்கிறார். இது மூத்த திருப்பதிகம் என்றசிறப்பு பெயர் கொண்டது. இறைவனே இவரை அம்மையே என்று எதிர் கொண்டு அழைத்தப் பேறு பெற்றவர் இவர்.எனவேதான் 63 வரில் அனைவரும் நிற்க இவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் ஞான ஒளி வீசிட்ட நங்கையவள் இந்த புனிதவதி.
கி.பி. 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுந்தரர் தனது விஞ்சுதமிழ் திருத் தொண்டர்கள் 60 பேரை தனது திருத் தொண்டர் தொகையில் அடையாளம் காட்டினார்,இதுவே முதல் நூல்.
ராஜராஜன் காலத்தில் அவனுடைய பெரியதாயார் "செம்பியன்மாதேவி"யின் முயற்சியால் தேவராப் பாடல்கள் சேகரிக்கப்பட்டன.இவர் சிவ நேசச்செல்வர் கண்டராதித்த சோழரின் மனைவி, திருனாகேஸ்வரத்தில் வசித்தவர்.அத்தலத்து இறைவன் மீது மாளாக் காதல் கொண்டவர்.
இவருடைய முயற்சியால் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையை அடிப்படையாக கொண்டு "திரு நாரையூர் நம்பியாண்டார் நம்பி" அவர்களால்"திருத்தொண்டத்திரு அந்தாதி" நூல் இயற்றப்பட்டது. இது "வழி நூல்" வடமொழியில் வேதங்களைத் தொகுத்தவர் வியாசர். அது போல் தமிழில் திருமுறைகளை தொகுத்ததால் இவருக்குத் தமிழ் வியாசர் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னரே சேக்கிழார் கி.பி.12 ம் நூற்றாண்டில் பெரியபுராணத்தை இயற்றினார் இது "சார்பு நூல்", பெரியர் புராணம் என்பதே பின்னாளில் பெரிய புராணம் என்று மருவியது.
ராஜராஜன் கால்த்தே தேவராச்சுவடிகளை சிதம்பரத்தில் கண்டு பிடித்ததாகக் கூறுவர். அவன் பின்னே வந்த ஆதித்த சோழனே கண்டுபிடித்தான் என்றும் ஒரு சாரார் கூறு கின்றனர்...
முன்னுரை:
தேவாரம் முதலிய பக்தி நூல்களின் தொகுப்புக்கு திருமுறைகள் என்று பெயர். தமிழில் உயிர் எழுத்துக்கள் பண்ணிரண்டு, அது போல் பக்திக்கு உயிர் நாடியான திரு முறைகளும் பண்ணிரண்டு.முறை என்றால் நூல் என்று பொருள், திரு முறை என்றால் இறைவனை போற்றிப் பாடும் நூல்கள் என்று பெயர்.
மேலும் முறை என்றால் நெறி, வழி என்றும் பொருள், திருமுறை என்றால் செம்மையான நெறி ,சிறந்த வழி என்றும் பொருள் கொள்ளலாம். நமது வாழ்வுக்குத் தேவையான நெறிகளையும்,முறைகளையும் தெள்ளத் தெளிவாகப் புகட்டுவது இந்தத் திருமுறைகளே ஆகும்.
கிட்ட தட்ட 6 ம் நூற்றாண்டு இருதியில் பாடதலை பட்டு இவை 10 ம் நூற்றாண்டில் தொடுக்கப்பட்டது. இருப்பினும் இவை பாமரர்களை அதிகம் சென்றடைய வில்லை காரணம் பல்வேறு படை எடுப்புகள்.ஆட்சி மற்றங்கள்.
இந்த நிலை மாறியது 20 ம் நூற்றாண்டில் தான் மாற்றியவர் அமரர் திரு எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். தேவாரப் பண்ணை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் இவரே. இவரது தேவார இசை தட்டுகள் ஒலிக்காத ஆலயங்களே இல்லை எனலாம் . குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி , திருவெம்பாவை மார்கழி பனியுடன் இவரது குரலைக் கேட்கும் போது நமக்கு சிலிர்க்கும். மனம் சில்லிட்டுப் போகும். இவரது குரலை இசைத்தட்டில் கொண்டுவந்த பெருமை தருமை ஆதீனத்தையேசாரும்.
அடுத்து தருமபுரம் சுவாமினாதன் அவர்கள்,திருமுறை சித்தராகவே வாழ்ந்தவர் தற்போது சாமி தண்டபாணி அவர்கள் பெரிதும் தன்னை திருமுறைக்காவவே அர்ப்பணித்து கொண்டவர்.
பின்னர் இசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தை "சிம்பொனியில்" தந்து உலக அரங்கில் உன்னத இடம் பெறச்செய்தார்.நமது தமிழ் மேலை நாடுகளிலும் ஒலிக்கச்செய்தவர் இவரே. இப்படிப்பட்ட தேவார திரு வாசக பண்களை ஒதுபவர்கள் ஒதுவார்கள் என்று அழைக்கப்பட்டனர் ஒதுதல் என்றால் பாராயணம் என்றுப்பொருள்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.1
ஒதுவது ஒழியேல்...
ஒதாமல் ஒரு நாலும் இருக்க வேண்டாம்... என்பது மரபு. ஒதுவது என்பது படிப்பது,படிப்பிப்பது,கற்பது,கற்றுக் கொடுப்பது எனபல் வேறு பொருள்கள் உண்டு.வேதம் ஒதுதல் என்பதே வழக்கு.அதாவது வேத பாராயனம் செய்வது,அந்தக் காலத்தில் எழுதிப் படிக்கும் வழக்கம் இல்லை.வாய்வழி கேட்டே கல்வி பயின்றார்கள்.அதுவும் இசையுடன்.அவர்கள்வேத விற்பன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
திருமுறைகளுக்கும் திராவிட வேதம் என்றே பெயர் வழங்கப்பட்டது.இருப்பினும் திரவிட வேதத்திற்கு அதிகம் முக்கியதுவம் கிடைக்கவில்லை காரணம்.ராஜராஜன் காலத்தேதான் தேவாரங்கள் சிதம்பரத்தில் கண்டு எடுக்கப்பட்டன.இருந்தும் அவன் காலத்தே தேவரம் அதிக முக்கியதுவம் பெறவில்லை.ஆயினும் இவன் காலம் தொட்டே 63 மூவருக்கு சிலைகள் ஆலயத்தில் அமைக்கப்பட்டன.இருப்பினும் ஆட்சியிலும் ஆலயத்திலும் வடமொழிக்கே அதிகம் முக்கியதுவம் தரப்பட்டது.ஆலயத்தை ஒட்டி அவர்கள் வசிக்க அக்கிரஹாரம் என்று வீதி அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டனர்.ஆலயத்தில் நான்கு வேதங்களே முழங்கியது,திராவிடவேதம் ஒதுக்கப்பட்டது.அ+கிரக+ஹாரம், அந்தனர்கள் வசிக்கும் வீடுகளின் மாலை என்ற பொருளில் அக்கிரஹாரம் என்ற சொல் வழக்கில் வந்தது இது இன்றும் பல ஊர்களில் உண்டு இது இனாம் சாசனம் செய்யப்பட்டது.
களப்பிரர்கள் ஆட்சியில்தமிழகம் இருண்டுகிடந்த போது,ஒளியேற்ற வந்தவர்கள் பல்லவர்கள். இவர்கள்தொண்டைமான்,இளந்திரையன் வழி வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். சோழ இளவரசனுக்கும் நாககன்னிக்கும் பிறந்தவன் இவன்.இவர்கள்பயனித்தக் கப்பல் புயலில் சிக்கியது தொண்டைக் கொடியால் பாலகனை ஒரு பலகையில் கட்டிக் கடலில் இட்டனர், பெற்றோர்.இளம்திரைகளால் கடற்கரையில் ஒதுங்கியவனே பின்னாளில் தொண்டைமான் இளந்திரையன் ஆனான். இவன் வழிவந்தவர்கள்களே பல்லவர்கள் இளம் திரை என்றால் கடல் அலைகள்.தொண்டைக் கொடியால் பினைக்கப்பட்டு இளம்திரையில் மிதந்து வந்தவன் ஆனதால் தொண்டைமான் இளந்திரையன் என்று பெயர்பெற்றான்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.2
இந்தத் தொண்டைமான் இளந்திரையன் பற்றி அமரர் கல்கி அவர்கள் தனது "சிவகாமியின் சபதம்" நாவலில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.அவர் நடையும்,மணியம்,வினுவின் ஒவியக் கொடையும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் அற்புத அனுபவங்கள்,அது சொல்லில் அடங்காத அனுபவம், சொல்லில் புரியவக்க முடியாத அனுபவம்.
இந்த இளந்திரையன் வழி வந்த சிம்ம விஷ்னுவே களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன். இவன் மகன் மகேந்திரவர்மன் கல்லிலே லலை வண்ணம் கண்டவன்.சித்திரகாரப்புலி என்ற பட்டம் பெற்றவன்.புதியதொரு யாழைக்கண்டு பிடித்தவன்,குடுமியான் மலை கல்வெட்டுகள் இவன் இசைத்திறமை புகழ் பாடுகிறது.செங்கல்,இரும்பு,இன்றிகற்றளி கோவில்கள் கண்ட கதா நாயகன் இவனே. இவனது கொடையே மாமல்லபுரம்,சமயச்சீரழிவு பற்றி ஒரு நாடகமும் இயற்றி இருக்கிறான் இவன்.
இவன் கி.பி. 6 ம் நூற்றாண்டு இறுதியிலும் 7 ம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவன். இவன் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமுறை தந்த நாவுக்கரசரும்,ஞானசம்பந்தரும்.மன்னன்சமணத்தைச்சார்ந்தவன்.நாவுக்கரசரின் ஆரம்பகாலப் பெயர் மருள் நீக்கியார் இவரும் சமணத்தைச்சார்ந்தவரே,இவரது சகோதரியின் முயற்சியால் இவர் மீண்டும் சைவத்திற்கு திரும்பினார்.மன்னனையும் சைவத்திற்கு திருப்பினார்.
இறைவன் நாவுக்கரசரை சூலை (நோய்)தந்து ஆட்கொண்டான், சம்பந்தரை பாலைத் தந்து ஆட்கொண்டான்,சுந்தரரை ஒலைதந்து ஆட்கொண்டான்.
நாவுக்கரசர் தன்னை அடிமையாகவும் ஆண்டவனை ஆண்டானகவும் பாவித்து பாடியவர் எனவே இவர் தமிழ் "கெஞ்சுதமிழ்" ,சம்பந்தர் தந்தையாகவே இறைவனைக் கண்டார்.எனவே இவரது பாடல்கள் தகப்பனிடம் மகன் பேசுவது போன்றது. எனவே அது"கொஞ்சு தமிழ்" சுந்தரர் இறைவனைத் தன் தோழனாகவே கண்டார். பறவையிடம் தூது சென்றார், திருக்குவளையிலிருந்து ஆருருக்கு நெல் கொணர்ந்தார் எனவே இவர் தமிழ்"விஞ்சுதமிழ்" என்று வாகீசகலா நிதி அமரர் கி.வா.ஜகன் நாதன் அவர்கள் அழகுறப்பட்டியல் இடுகிறார்.
ஒதுவார் எம் பெயர் ஒதுவார்.3
மகேந்திரவர்மனுக்கும், அவன் மகன் மாம்ல்லனுக்கும் படைத்தளபதியாக அமைந்த பரஞ்சோதியே பின்னாளில் பிள்ளைக் கறியமுது தந்து சிறுதொண்டராக உயர்ந்தவர். இவர் தலைமையிலே மாமல்லன் இரண்டாம், புலிகேசியை வெற்றி கொண்டான்.வாதாபியிலிருந்து கொணர்ந்த கணபதியைத் தனது ஊரான "திருச்செங்காட்டான் குடியில்" பிரதிஷ்டை செய்தார் பரஞ்சோதி,திருவாருரில் இருப்பதே வாதாபி கணபதி என்று வாதிடுவோரும் உண்டு,எது எப்படி இருந்தாலும்"வாதாபி கணபதியாக" பல்வேறு கீர்த்தனையில் இடம் பெற்ற கீர்த்தி இவருக்கு உண்டு.நாவுக்கரசருக்கு முன்னரே கரைக்கால் அம்மையார் பல பதிகங்கள் பாடி இருக்கிறார். இது மூத்த திருப்பதிகம் என்றசிறப்பு பெயர் கொண்டது. இறைவனே இவரை அம்மையே என்று எதிர் கொண்டு அழைத்தப் பேறு பெற்றவர் இவர்.எனவேதான் 63 வரில் அனைவரும் நிற்க இவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் ஞான ஒளி வீசிட்ட நங்கையவள் இந்த புனிதவதி.
கி.பி. 8 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சுந்தரர் தனது விஞ்சுதமிழ் திருத் தொண்டர்கள் 60 பேரை தனது திருத் தொண்டர் தொகையில் அடையாளம் காட்டினார்,இதுவே முதல் நூல்.
ராஜராஜன் காலத்தில் அவனுடைய பெரியதாயார் "செம்பியன்மாதேவி"யின் முயற்சியால் தேவராப் பாடல்கள் சேகரிக்கப்பட்டன.இவர் சிவ நேசச்செல்வர் கண்டராதித்த சோழரின் மனைவி, திருனாகேஸ்வரத்தில் வசித்தவர்.அத்தலத்து இறைவன் மீது மாளாக் காதல் கொண்டவர்.
இவருடைய முயற்சியால் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையை அடிப்படையாக கொண்டு "திரு நாரையூர் நம்பியாண்டார் நம்பி" அவர்களால்"திருத்தொண்டத்திரு அந்தாதி" நூல் இயற்றப்பட்டது. இது "வழி நூல்" வடமொழியில் வேதங்களைத் தொகுத்தவர் வியாசர். அது போல் தமிழில் திருமுறைகளை தொகுத்ததால் இவருக்குத் தமிழ் வியாசர் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னரே சேக்கிழார் கி.பி.12 ம் நூற்றாண்டில் பெரியபுராணத்தை இயற்றினார் இது "சார்பு நூல்", பெரியர் புராணம் என்பதே பின்னாளில் பெரிய புராணம் என்று மருவியது.
ராஜராஜன் கால்த்தே தேவராச்சுவடிகளை சிதம்பரத்தில் கண்டு பிடித்ததாகக் கூறுவர். அவன் பின்னே வந்த ஆதித்த சோழனே கண்டுபிடித்தான் என்றும் ஒரு சாரார் கூறு கின்றனர்...