கட்டில்!
பாலசுந்தரி, மாங்குடி.
பல் துலக்கி முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்து குங்குமம் வைத்த கமலம் அதிர்ந்தாள். ஒரு காதில் கம்மலைக் காணோம். அரைப்பவுனில் புஷ்பராக கம்மல். ராசியான கம்மல் ஒற்றைக் கம்மலின் விலையே பத்தாயிரம் இருக்கும். இரவு படுக்கும் போது கூட நன்கு திருகிவிட்டுத்தான் படுத்தாள். பாத்ரூம் கூட போகவில்லை. ஹாலில் சோபாவில்தான் படுத்து இருந்தாள். அப்படியானால் ஹாலில்தான் விழுந்து இருக்க வேண்டும். ஹாலுக்கு விரைந்தாள். அதற்குள் வேலைக்கார பெண் ராதா ஹாலைப் பெருக்கித் துடைத்துக் கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
சோபாவில் கம்மல் இல்லை. மகனையும், மருமகளையும் கேட்டாள். நன்றாக தேடிப்பாருங்கள் என்று அவர்களும் பதட்டத்துடன் வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அங்குலம், அங்குலமாக தேடிவிட்டனர். எங்கும் கம்மல் இல்லை. 'இந்த வேலைக்கார குட்டிதான் எடுத்து இருக்கணும். நேற்று அவ அம்மாவுக்கு உடம்புக்கு முடியல.ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு அழுதுகிட்டு இருந்தா' என்றவளை இடைமறித் தான் கமலத்தின் மகன்.
'அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதம்மா. இங்கதான் விழுந்திருக்கும். நல்லா தேடிப் பாருங்க' என்றான்.
'உங்க ஆபிஸ் ஸ்வீப்பரோட பொண்ணு. நல்லா படிப்பா. இப்ப லீவுல இருக்கிறா. நம்மோட சம்பளம் அவ படிப்பு செலவுக்கு ஆகும்னு நீதான் வேலைல சேர்த்த. அவ, அவ வேலையை காட்டிட்டா. இப்ப நான் என் வேலையை காட்டறேன், என்று ஆவேசத்துடன் விளக்கு மாற்றை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள் கமலம்.
மகனும், மருமகளும் தடுக்க தடுக்க ஆவேசத்துடன் கொல்லைப்புறம் சென்றவள் அங்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை ஓங்கி உதைத்தாள்.
'எங்கடி கம்மல்?'
'எந்தக் கம்மல்மா?'
"நீ இப்படியெல்லாம் கேட்டா சரிபட மாட்டா. இதோ இப்பவே போலீசுக்கு போன் பண்றேன்' என்றபடி முந்தானையை உதறி திரும்ப 'சிலீங்' என்ற சப்தத்துடன் கம்மல் முந்தானை மடிப்பிலிருந்து கீழே விழுந்தது.
கூனிக் குறுகினாள் கமலம்.
அதுவரை அழுதுகொண்டிருந்த அந்த சிறுமி, நிமிர்ந்து எழுந்தாள்.
'இனிமே வேலைக்கு வரமாட்டேம்மா' என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு யாருடைய அழைப்பையும் பொருட்படுத்தாமல் வெளியேறினாள்.
மரவல்லி மரம்
கே.பாலசுந்தரி
வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற கதை
'இன்னும் ஒரு ஆ...வாங்கிக்க கண்ணு.'
'வேண்டாம்' என்று இடமும் வலமுமாகத் தலையை பலமாக ஆட்டினாள் குழந்தை. 'இப்ப காக்கா வந்து ஆ... வாங்கிக்குமாம், என்று சரசு கண்ணை மூடிக்கொள்ளப் பூஞ்சிட்டாய் வாய் திறக்கும் குழந்தை. உதட்டோரம் வழியும் சாதத்தை சரசுவின் தோளில் உரசித் துடைக்கும் குழந்தை. மேனி சிலிர்க்கிறது. மதியம் சாதத்தை மோர் விட்டுக் குழையப் பிசைந்து இரண்டு சொட்டு வற்றல் குழம்பு கலந்த கலவை. அப்படி இப்படி போக்குக் காட்டி சாதம் ஊட்டிவிட்டாள்.
கோடையின் புழுக்கம் உள்ளே உட்கார முடியவில்லை. மங்களூர் ஓட்டின் தாக்கம். மதியம் தகித்த வெய்யிலை உள் வாங்கி இரவில் மெல்லமெல்ல வெளியிடும் வெளிப்பாடு. ஓர் இலை கூட அசையவில்லை.
பனியில் நனைந்த ரோஜாவாய் குழந்தையின் முகத்தில் வியர்வைத் துளிகள். முந்தானையால் மெல்ல ஒற்றி எடுக்கிறாள். மடியிலேயே குழந்தை உறங்கி விட்டாள். நாளையைப் பற்றிய கவலை இல்லாத நிம்மதியான உறக்கம். சாதம் ஊட்டிய கை காய்ந்துவிட்டது. உள்ளே போய்விட்டால் குழந்தை புழுக்கம் தாங்கமாட்டாள். அவசியம் என் செல்லக்குட்டிக்கு ஃபேன் வாங்கணும். எண்ணியபடியே குழந்தையைக் கீழே கிடத்தினாள்.
மரத்துப் போன கால்களை மாற்றிப் போட்டு அமர்ந்து வானத்தையே வெறித்தாள். கோடைகால வானம் நிர்மலமாக, துடைத்து விட்ட மொசைக் தரையாக... இடையிடையே வாரிச் சுருட்டிக்கொண்டு விரையும் வெண்மேகங்கள், எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த ஓட்டம். இலக்கில்லாமல் விரையும் மேகங்கள். எத்தனை எத்தனை உருவங்கள். யானை, மாடு, தேர், மலை பற்பல உருவெடுக்கும் மேகங்கள். பின்னர் பழைய உருவங்கள் சிதைந்து புதிய வடிவெடுக்கும் மேகங்கள். ஒரு துணுக்கில் இருந்து பிரிந்து இன்னொரு துணுக்கில் இணையும் அதிசயம். அவள் வாழ்வைப் போல.
குப்பென்று ஒரு வாசம். மல்லிகையா? இல்லை முல்லையா? இல்லை இரண்டும் கலந்த கலவையா? அனுமானிக்க முடியாத அற்புத வாசம். மெல்லமெல்லத் தவழ்ந்து வந்து நெஞ்சை நிறைக்கும் வாசம். எங்கிருந்து இந்த மணம்? கண்கள் அலை பாய்ந்தது, தெருவிளக்கின் வெளிச்சத்தில். ஆங்... கண்டுபிடிச்சுட்டேன்.. மனதில் உற்சாகத்துள்ளல்.
முதல் முதலாய்ப்பூத்துக் குலுங்கும் மரமல்லிகை. வெள்ளை நிற சீரியல் பல்புகளைச் செண்டாய்ச் கட்டியது போல கொத்தாய் தொங்கும் பூங்கொத்து. கையகலக் கொத்து. சற்றே நெகிழ்ந்த மொட்டில் இருந்து கசியும் மணம். அவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே மெல்ல மெல்ல இதழ்விரிந்துச் சிரிக்கும் அதிசயம். கண்ணைச் சுருக்கி கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கிறாள் சரசு. கிளையெங்கும் மொட்டுகள் நன்கு படர்ந்த கிளையில் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடும் மொட்டுகள். இதை இத்தனை நாட்கள் கவனிக்கவே இல்லையே. அதிசயிக்கிறாள்.
இந்த மரமல்லிகைக்கு ஒரு தனிச் சிறப்பு. விதைபோட வேண்டாம். கிளை ஊன்ற வேண்டாம். வேரில் தலை நீட்டும் குருத்துகள் தானாகவே தளதளவென வளர்ந்து பூத்துக் குலுங்கும் அதிசயம். இந்தமரம் மூணாவது வீட்டு மரத்தின் வேரில் முளைத்த மரம். அடுத்த வீட்டில் புகுந்து என் வீட்டில் தலை நீட்டி இரண்டு வருடம் ஆகி இருக்குமா? கண்களை மூடித் தூணில் சரிந்தாள். கை அனிச்சையாய் மடியில் இருக்கும் லட்சுமியைத் தட்டிக்கொடுக்க மனது பத்து ஆண்டுகளுக்கு முன்னே பாய்ந்து ஓடி நின்றது.
அப்பா பிரபல கொத்தனார். சின்ன வயதிலேயே அம்மா போய்ச் சேர்த்துவிட அப்பா மறுமணம் செய்து கொள்ளவில்லை. மகளுக்காகவே வாழ்ந்த அப்பா. சரசு ஒரே மகள். பேரழகி இல்லைவிட்டாலும் அவலட்சணமும் இல்லை. மாநிறம். மாறாத புன்னகை. அளவான உடல்வாகு. வீட்டுக் காரியங்களைச் சுத்தமாகச் செய்யும் சுறுசுறுப்பு. தாயில்லாப் பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஏங்கி நின்ற அப்பாவுக்கு, உடன் வேலை செய்யும் சரவணனை மிகவும் பிடித்துப்போய் விட்டது. சரசுவுக்கும் தான். வாட்டசாட்டமான உருவம். சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாதுர்யம். சரசுவுக்கு உலகே தன் காலடியில் என்று நெஞ்சு கொள்ளாத பெருமை. சொல்லிக் கொள்வது போல் உறவு ஏதும் இல்லை என்றதால் சரவணன் வீட்டோடு மாப்பிள்ளை ஆனான்.
அப்பாவுக்கு கழுத்தில் தலைநிற்காத பெருமை, தன்னைப் போலவே மருமகனும் கொத்தனார், அத்தோ வீட்டோடு மாப்பிள்ளை, எனவே மகள் பிரிவு இல்லை என்று போவோர் வருவோரிடம் பீற்றிக்கொள்வார். அத்துடன் மகள் மூன்ரு மாத கர்ப்பம் என்றதும் ஆகாசத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளக் குதித்த அப்பா. அந்தப் பூரிப்புடனே படுத்தவர், எழுந்திருக்காமல் தூக்கத்திலேயே மரணித்த அப்பா. ஒருவாறாக ஜீரணித்துத் தெளிந்தவளுக்குப் பேரிடி. சரவணன் கூட வேலை செய்யும் பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பது தெரிந்தது. கேட்டவளுக்கு அடி உதை. அத்தோடு வீட்டைத் தன் பேரில் எழுதிக்கொடு பேங்கில் லோன்போட்டு மாடி வீடு கட்டப்போகிறேன், என்று அவளை நெருக்க ஆரம்பித்தான். அதற்கும் சரி என்று தலை ஆட்டிவைத்தாள்.
பின்னர் தான் உண்மை தெரிந்தது. இடத்தை யாருக்கோ விலைபேசி அட்வான்ஸ் வாங்கி சின்ன வீட்டுக்குச் செலவு செய்து இருப்பது. கையெழுத்து போட மறுத்தவளை அடித்து ஓங்கி வயிற்றில் உதைந்து தாலியையும் பறித்துச் சென்றவன் தான். அந்த உதையில் கரு கலைய உறைந்து உடைந்து நின்றவளுக்கு ஒரே ஆதரவு, புதிதாக எதிர் வீட்டுக்குக் குடிவந்த பேங்க்காரங்க வீட்டு விஜயா அம்மா.
சிண்டும் சிமிழுமாக மூன்று குழந்தைகள். ஆபீஸ் செல்லும் கணவன். ஙை,ஙை என்று அழும் கைக்குழந்தையுடன் திண்டாடிய விஜயாம்மா. கருவும் கலைந்து கணவனும் பிரிந்த சரசு; இருவரையும் இணைத்த இறைவனின் கருணை. சரசுவுக்குப் புதியதோர் உலகம் தெரிய ஆரம்பித்தது. அவர் வீட்டில் ஒருத்தி ஆனாள். புதியவர்கள் வந்தால் உறவா? என்று கேட்கும்படி ஒன்றிவிட்டாள். குழந்தைகளைக் கவனித்து, துணி துவைத்து, பாத்திரம் தேய்த்து கடைக்குப் போய் வந்து அனைத்தும் சரசு தான். மூன்று வேளை சாப்பாடு, பண்டிகைக்குப் புதுப்புடவை, அவ்வப்போது பழம் புடவை வேறு என்ன வேண்டும். எனவே சம்பளம் இருநூறு ரூபாயை வாங்குவதே இல்லை.
ஒண்டிக்கட்டை. ஒண்டிக்கொள்ளச் சொந்தக்குடிசை. எனவே செலவுக்கு என்ன வேலை. அப்படியே அவள் பெயரில் வங்கியில் போட்டு வைத்தார்கள். பத்தாண்டுகள் ஓடிவிட்டன.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகி டவுனுக்குப் போய் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வேலைகள் வெகுவாகக் குறைந்தன. விஜயாம்மாவுக்குப் பேச்சுத்துணையாக சினேகிதியாக நின்றவளின் மனதில் எதுவோ நிரடல். ஒரு வெறுமை. ஐந்தாம் வகுப்பு படித்த அவளுக்கு அம்மா வீட்டில் வாங்கும் புத்தகம் எல்லாம் அத்துபடி. படித்ததை அம்மாவுடன் அசைபோடுவது இருவருக்குமே பேரானந்தம்.
இதற்குள் சரவணன் பழையவளை விட்டு விலகி புதியவள் ஒருத்தியுடன் வாழ்வதாகக் கேள்வி. கணவனை இழந்த கைக்குழந்தைக்காரியாம். விஜயாம்மாதான் சொன்னார்.
'பக்கத்து டவுனல தான் உன் புருஷன் குடித்தனம் நடத்துறானாம். ஐயா நேத்துப் பார்த்தாராம். போய் என்னன்னு கேளுடி. பள்ளிக் கூடம் புதுசாக் கட்டுறாங்கயில்ல, அங்கதான் வேலை செய்யுறானாம். இப்படி எத்தனை நாளைக்குத் தனி மரமாவே நிப்ப. உனக்குன்னு ஒரு குழந்தை குடும்பம்னு பிடிப்பு வேணாமா?'
கோபமாக வெடித்தார் விஜயாம்மா.
அவசரமாக இடைமறித்தாள் சரசு.
'வேணாம்மா. முன்ன என்ன பாவம் செஞ்சேனோ இந்த மனுஷன் வாச்சு இருக்கார். கொடுமைக்கார புருஷனா ஆனாலும் ஒரு விதவைக்கு வாழ்வு தந்து இருக்கார். அதைக் கெடுக்க விரும்பலைம்மா. அன்னிக்குப் படிச்சோமே பாரதிதாசன் கவிதைகள். வேரில் பழுத்த பலா ஒண்ணு கோரிக்கையற்றுக் கிடக்குதுன்னு.அந்தப் பலாவைக் கோரி பெற்றுக்கிட்டார் அவர். அதை தட்டிப்பறித்து நான் வாழவிரும்பல.'
படபடவென்று கைதட்டல். பேங்க் ஐயாதான்.
'சூப்பர்மா அசத்திட்ட, இருந்தாலும் உனக்கு கடைசி காலத்துல வயசான காலத்துல ஆதரவு? பொருளாதாரம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அதனால் பேங்க்ல இருக்கும் உன் சம்பளம் பணத்துல ஒரு கறவைமாடு வாங்கு. நாங்களே பாலை வாங்கிக்கிறோம். அக்கம் பக்கத்துல வாடிக்கை புடிச்சுத் தாரேன். அதோட எங்க பேங்க இருக்கும் சைக்கிள் ஷெட்டை ஓட்டுக்கட்டடமாக மாத்தப் போறாங்க. பழைய ஓட்டுக் கூரையை காண்ட்ராக்ட் காரரிடம் சொல்லி குறைஞ்ச விலையில் உனக்கு வாங்கித்தரேன். கூரையை ஓடா மாத்திடலாம். பணம் பத்தலனா பேங்ல லோன் போட்டுத்தர்றேன். மாட்டை இன்ஷீர் பண்ணித்தர்றேன். என்ன சரியா?'
தலையாட்டினாள்.
கனவு போல இருக்கிறது. கூரை வீடு ஓட்டு வீடாச்சு. ஒரு மாடு இரண்டு மாடு ஆச்சு. கடனும் அடைச்சாச்சு. மெதுவாக நிம்மதிப் பெருமூச்சு விடலானாள். அந்த நிம்மதியும் கலைந்தது.
அன்று தான் இந்த மரமல்லிக் கன்றை அடையாளம் கண்டாள் சரசு. விஜயாம்மா தான் கூறினார். மூணாவது வீட்டு மரத்தில் கிளைத்த வேரில் இருந்து வெடித்த குருத்து இது என்று. சீமக் கருவேல முட்களை வெட்டிச் செடியின் சுற்றிலும் நட்டுவைத்தாள். ஒரு செம்பு தண்ணீரும் ஊற்றி நிமிரும் போது.
'இங்க சரசுங்கறது?'
கேள்வியுடன் வந்தவர் போலீஸ்கார். 'நான் தாங்க!' என்று கூறுவதற்குள் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
'வேறு ஒருத்தரும் இல்லையா?'
அவர் கேட்கும் போதே அவளுக்குக் குலை நடுங்கியது. ஓடிப்போய் பேங்க் ஐயாவை அழைத்துவந்தாள்.
விஷயம் இதுதான். குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடித்திருக்கிறான் சரவணன். அம்மிக் கல்லில் தலைமோதி அங்கேயே மண்டையைப் போட்டுவிட்டாள் மகராசி. லாக்கப்பில் சரவணன். விலாசம் தேடி சேதி சொல்ல வந்திருக்கும் காக்கி. பேங்க் ஐயாவுடன் ஓடினாள் சரசு. லாக்கப்பில் கைகட்டி குத்திட்டு விட்டத்தை வெறித்தபடியே, சரவணன். கண்களில் வழியும் கண்ணீர் துடைக்கவும் தோன்றாத பரப்பிரம்மமாய்.
'தூக்கோ ஆயுளோ உறுதி. கேஸ் வலுவா இருக்கு!' இன்ஸ்பெக்டர் கூற விக்கித்து நின்றாள் சரசு. சரவணனிடம் எந்தவிதச் சலனமும் இல்லை, இவளைக் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.
'அப்புறம் அந்தக் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுகிறோம்.'
இன்ஸ்பெக்டர் கூறிக்கொண்டே போகத் திடுக்கிட்டாள் சரசு. பெண் போலீஸ் தந்த பாலை பாட்டிலில் உறிஞ்சியபடியே திகில் உறைந்த விழிகளுடன் அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. கலைந்த தலை. கண்ணும் மூக்கும் வழிந்து காய்ந்த முகத்திலும் ஒரு களை. அந்த வண்டுக் கண்கள் அவளிடம் ஏதோ கூறுவது போல் ஒரு பிரமை. வராந்தாவிலேயே உட்கார்ந்து கிடந்தாள் சரசு. அனாதை ஆரமத்திலிருந்து உரியவர்கள் வர ஒப்படைத்தார்கள் குழந்தையை. போக மறுத்து அடம் பிடித்து அழுது புரண்டாள் குழந்தை. அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. சரசுவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பிரவாகம் ஊற்றாகப் பீறிட்டது. சட்டென பேங்க் ஐயாவிடம் தன் கோரிக்கையை வைத்தாள். இது சாத்திரத்தால முடியாததை, சத்தியமா நான் இதைச் சாதித்துக் காட்டுறேன் ஐயா, நீங்க தான் ஏற்பாடு செய்யணும் என்று கண்ணீருடன் கை குவித்தாள். அந்தப் பிஞ்சு தன் அழுகையை மறந்து இவளையே கண்கொட்டாமல் கவனித்தது.
ஆச்சு யார் யாரிடமோ பேசினார் பேங்க் ஐயா. முறைப்படி சட்டப்படி குழந்தை சரசுவிடம் தத்து கொடுக்கப்பட்டது. மௌனமாகக் கைகுவித்தான் சரவணன். குழந்தையை ஐயா அம்மா இருவர் காலடியிலும் கிடத்தி தானும் விழுந்தவளைத் தாங்கிப்பிடித்தாள் விஜயா அம்மா. ஆதரவாகத் தோளில் சாய்ந்தாள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் சரசுவின் காலிடுக்கில் குழந்தை ஒடுங்கி நின்றாள்.
'சரசு! நீ சாதாரணப் பெண் அல்ல தெய்வம். வசதி படைச்சவங்களுக்குத் தோணாத தைரியம் உனக்கு வாய்ச்சிருக்கு. புள்ளையை நல்லாப் படிக்க வைச்சு ஆளாக்கு'.
'பேர் என்ன கண்ணு?' என்று கேட்க லட்சுமி என்றது மழலையில். பகபகவென சரித்தாள் சரசு.
'என்னடி சிரிப்பு உனக்கு இந்த நிலைமையிலும்?'
தொண்டையடைக்கக் கேட்டார் விஜயா அம்மா.
'இல்ம்மா படிக்காத என் பெயர் சரசு. அப்பன் ஆத்தா இல்லாத அடுத்த வேளை பாலுக்கு வழியில்லாத இவள் பெயர் லட்சுமி. அதான் சிரிப்புவந்துட்டு'.
'இப்பவாவது சரின்னு சொல்லு. கணவனால் கைவிடப்பட்டவள்ன்னு உனக்கு அரசு உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?
என்ற பேங்க் ஐயாவை அவசரமாக இடைமறித்தாள் சரசு.
'வேண்டாம்யா. புருஷனே தாலிய அறுத்துக்கிட்டு உறவையும் அறுத்துக்கிட்டுப் போனவர்தானே. அவரைக் காட்டிப் பென்ஷன் எதுக்குய்யா? உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு. அதோட இந்தப் பிஞ்சு பொக்கிஷமாக் கிடைச்சிருக்கு. இது போறும்யா. என் புருஷனாலதான் இந்தப் பிஞ்சு பெத்தவளை இழந்து நிர்க்கதியா நிக்குது. என்புருஷன் செஞ்ச பாவத்துக்கு இது கூட நான் செய்யலன்னா நானும் என் புருஷன் மாதிரி ஒரு மிருகம் தான். அப்புறம் என் புருஷனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கூடப் பொறந்த பொறப்பா நீங்களும் அம்மாவும்!
பேசிக் கொண்டே போனவளை கண்ணீர்கசிய ஏறிட்டனர்பேங்க் ஐயாவும் அம்மாவும்.
'ஐயா வந்து... வந்து ஒரு உதவி. உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்க? அதனாலதான் திரும்பத் திரும்ப உங்களையே உதவி கேட்குறேன்.'
தொண்டையடைக்கக் கேவினாள்.
சொல்லும்மா என்ன செய்யணும். உன் அளவு எங்களுக்குப் பரந்த மனசு இல்லாட்டாலும், உனக்கு உதவியாக நிற்க நாங்கதான் குடுத்து வைச்சிருக்கணும். எதா இருந்தாலும் தைரியமாகக் கேளு ஊக்கப்படுத்தினார்.
'ஐயா உங்க பேங்கில கூட்டிப் பெருக்குற ஆயா பிள்ளை ஊட்டோட அடுத்தமாசம் பட்டணத்துக்குப் போவுதாம். அந்த வேலையை எனக்கு...
இழுத்தவளை இடைமறித்தார் ஐயா.
'சரி. உனக்குத் தான் அந்தவேலை'.
'அப்புறம் உங்க பேங்ல ஒரு இருவது பேர் வேலை பாக்கிறாங்கல்ல, ஆமாம். அவுங்க எல்லாம் ரெண்டு வேளையும் டீயும், வடையும் சாப்புடுவாங்கல்ல? அதை நானே செஞ்சு குடுக்குறேன்யா. சாப்புட்டுப் பார்க்கட்டும். புடிச்சா வாங்கிகிடட்டும். கட்டாயமில்லையா...'
என்றாள் கைகளைப் பிசைந்தவாறே.
'கட்டாயம் வாங்குவாங்க, உன் கைமணம்தான் எனக்குத் தெரியுமே? எனக்குக் கூட இது தோணலபாரு. சரசுகிட்ட சரஸ்வதியே குடியேறி ஐடியாகக் குடுக்கிறான்னு நினைக்கிறேன்'
விஜயாம்மா கூற உனக்கு கூட ஐடியா தோணுதே என்று ஐயா கிண்டலடிக்க. சரசு இப்ப செம பிசி.
கறவை மாடு கவனித்து இரண்டு வேளையும் சுடச்சுட டீயும் பஜ்ஜியும் வடையும் போண்டாவுமாக அசத்துகிறாள். அதைச் சாப்பிடுவதற்காகவே யாரும் லீவு போடுவதில்லை என்று ஐயா சொல்வார். வசூல் பணத்தை ஐயாவே லட்சுமியின் பெயரில் பேங்கில் போட்டு விடுவார். கூட்டிப் பெருக்கும் சம்பளம் ஐயா வீட்டு சம்பளம் இரண்டையும் சேர்த்து அம்மாவே மொத்தமா மளிகைச் சாமான் வாங்கித்தர பம்பரமாய்ச் சூழலும் சரசு, நித்தியப்படி வண்டி ஓடுவது வழக்கம் போல் ஐயாவீட்டு சாப்பாட்டில். குழந்தைக்குத் துணி எடுப்பது அம்மாவேதான். அவருடைய சொந்தச் செலவில்.
டாண்டாண் என எதிர்வீட்டுக் கடிகாரம் பத்துமுறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பத்து மணி ஆச்சா? காலையில் நிறையவேலை இருக்கு, என் செல்லத்தைப் பள்ளியில் சேர்க்கணும் பக்கத்துத் தெரு மில் தொழிலாளிகள் பத்துபேருக்கு மதியம் சாம்பார்சாதம் தயிர்சாதம் செய்து தரணும்; இது புது வாடிக்கை. என் புள்ளய கலெக்டருக்குப் படிக்க வைக்கணும், அதற்கு இப்பவே நிறைய உழைக்கணும். கணிசமாக் காசு சேர்க்கணும்.... வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மலடாய் நின்ற வெண்மேகங்கள் கருக்கொண்டு கருமேகமாய்ச் சூழ பளீரென மின்னல் வெட்டியது. கொட்டும் முரசாய் இடி.
சத்தம் கேட்டு நடுங்கும் லட்சுமியை மார்போடு அணைத்து உள்ளேசென்று பாய்விரித்துக் கிடத்தினாள். சாப்பிடத் தோன்றாது கை அலம்பி லட்சுமியின் அருகே படுத்தாள்.
பனியில் நனைந்த ரோஜாவாய் சில்லிட்ட பட்டுப்பாதங்களைக் கண்ணில் ஒற்றிகொண்டாள். அவள் களைப்புப் பறந்தது. சின்னத் தூறலாய் ஆரம்பித்த மழைச் சாரலோடு மரமல்லியின் மணம் வீட்டுக்குள்ளேயும் ஜன்னல் வழிவந்து நாசியில் நுழைந்து இதயத்தை நிறைத்தது.
உறங்கும் லட்சுமியை மார்போடு அணைத்துக் கொண்டாள் சரசு. இரண்டு அனாதைகளை இணைத்து உறவுப்பாலம் அமைத்த இறைவனுக்கு நன்றி கூறி நிம்மதியாய்க் கண் மூடினாள். மரமல்லிகையின் மணமும் நித்ராதேவியும் ஒரு சேரத் தழவினர் சரசுவை.
ஒரு மரணத்தின் கதை
அமரர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை
கே.பாலசுந்தரி
கனத்த அமைதி.
இரும்புத்திரை போர்த்தியது போன்ற அமைதி. வருவோரும், போவரும் ஜே, ஜேன்னு கூட்டம். இருவராக, நால்வராகக் கும்மலாக என்று பிரித்து நின்று பேசும் கூட்டம். தங்கள் ஆதங்கம் அனைத்தையும் பேசிப் பேசியேத் தீர்க்கும் கூட்டம். இதமான முல்லை மலர் வாசம். கூடவே சந்தன ஊதுவத்தியின் மணம், நேற்று அம்மா தகதகவென்று தேய்த்து வைத்தக் குத்துவிளக்கு; அம்மாவைப் போலவே முத்துப் போல் சுடர் விட்டு எரிகிறது மூலையில் என் வயிறு எரிகிறது.
குளு குளு பிரீசரில் அம்மா. இத்தனை நாட்கள் உள்ளுக்குள் வெந்து புழங்கிய அம்மாவுக்கு இதமான ஒத்தடமோ இந்தக் குளுமை. வாய் விட்டு அழாமல் மவுனிகிறேன். வெளியே லேசான தூறல். வானமும் அழுகிறதோ அம்மாவுக்காக?
யாரோ தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
காதைத் தீட்டிக் கொல்கிறேன். "என்னவோ ஒரேடியா நிலையா நின்னா, இப்ப பொசுக் குன்று போயிட்டா. போறச்ச என்னத்த வாரிக் கட்டிக்கிட்டுப் போனா. மணி மணியா ரெண்டு பெத்தா. அதுகளோடு இருந்து பேரன், பேத்தின்னு கொஞ்சி அனுபவிக்கக் குடுத்து வச்சிருக்கணும்...ம்ம்...முதல்ல யார் பார்த்தது?"
"நான்தான்...எதிர் வீட்டு லட்சுமி அக்கா."
"நேத்து சாயங்காலம் நாலு மணி இருக்கும். நான் பால் கொண்டாந்தேன். பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க, எனக்குக் கூட குத்தாங்க. அந்தப் பூ அப்படியே தலையில இருக்கு அதுக்குள்ள... தொண்டையைச் செறுமிக் கொண்டு தொடர்கிறாள் அக்கா. கடைசி ஊட்டுக்குப் பால் குடுத்துட்டு அம்மாக்கிட்ட லோட்டா வாங்க வந்தேன், பூ மேலேயே படுத்துக்கிட்டு இருந்தாங்க... நான் குடுத்துட்டுப் போன பாலை பூனைக் குடிச்சிக்கிட்டு இருக்கு. நான் பதறிப் போய் அம்மா, அம்மான்னு கூப்பிட்டேன். பதிலே இல்லை. அக்கம் பக்கத்துல சொல்லி டாக்டரை கூப்பிட்டு வந்தோம். அரைமணி நேரம் ஆச்சுன்னுட்டார் என்று நாற்பது இரண்டாவது முறையாக புலம்பினாள் லட்சுமி அக்கா. அக்காவின் குரலில் அம்மாவின் இழப்பன் தாக்கத்தை விட, தான் தான் முதலில் பார்த்து என்ற பரபரப்பு..."
"சரி புருஷன் எப்ப வந்தார்?"
"ராத்திரி பத்து மணிக்கு. போன இடம் தெரிஞ்சாத் தானே சேதி சொல்லலாம் பொண்டாட்டி கிட்டயே எங்க போறேன்னு சொல்லமாட்டார். எப்ப வருவேன்னும் சொல்ல மாட்டார். அப்படி ஒரு குணம். பாவம், அது தான் வேளா வேளைக்கு ஆக்கி வைச்சுக்கிட்டுக் காத்து இருக்கும்." பக்கத்து வீட்டு செண்பகாவின் புலம்பல்.
"புருஷன் வரும் முன்னரே தெரிஞ்ச வரைக்கும் அவுங்க உறவுக்காரங்க எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன். முப்பது வருஷமாத் தாயா புள்ளையா பழக்கம், அதனால அவங்க உறவுக்காரங்க விலாசம் தெரியும். புள்ள அமெரிக்காவுல இருந்து வந்துக்கிட்டு இருக்கு. நாளைக்கு முதல் திருமண நாள். அதுக்காக கிளம்பினது நல்லதாப் போச்சு. அம்மா நெஞ்சு நல்லா வெந்துடும்." பக்கத்து வீட்டுக்காரர் யாரிடமோ சொல்லிக் கொண்டே போனார்.
அது சரி இந்தம்மா புருஷன் யாரு?
"வாசல்ல கால் மேலக் கால் போட்டுக்கிட்டு கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்து இருக்காறே அவுரு தான் .சென்ட் வாசம் ஆளைத் தூக்குதே அவரா?" என்றபடி பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"இருக்கும் போதே நல்ல அமுக்குணி புருஷனப் பக்தி வாயத் திறக்கமாட்டா. உல வாய மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இவளுக்குப் புருஷனக் கையிலப் போட்டுக்குத் தெரியல...
"ஆம்புள்ளன்னா அப்படி, இப்படி இருப்பான் தான். அதுக்காக மூஞ்சியைத் தூக்கி வைச்சிக்கிட்டா. இப்படி உங்களுக்குள்ள நல்ல ஒத்துமை இல்லாமப் போச்சுதே... பேசாம என் பொண்ணையும் கட்டிக்கண்ணு சொன்னேன். கேட்டானா? இவ சம்மதிக்கமாட்டான்னு பயந்தான். போன மாசம் தான் எம்பொண்ணைக் கட்டிக்குடுத்தேன். போனது தான் போனா ரெண்டு மாசம் முன்னாடி போயிருக்கக்கூடாது..."
போறச்சயும் அமுக்குனியா அனாதை மாதிரிப் பொசுக்குன்னு போயிட்டா. நான் தான் இனிமே தம்பியப் பாத்துக்கணும் என்று இனிமே இங்கேயே தங்கப் போறேன் என்று மறைமுகமாய் கூறிக் கொண்டிருந்தாள் பெரிய அத்தை."
"ஆ...ன்னா ஊ...ன்னா புருஷன் கிட்டக் கோவிச்சுக்கிட்டு பையத் தூக்கிட்டு, இங்க வந்து டேரா போடும் அத்தை. போகும் போது அரிசி, பருப்பு, பணம், துணிமணி என்று தேத்திக்கிட்டுப் போகும் அத்தை, எவ்வளவு சுலபமா அம்மாவைப் பக்தி விமர்சிக்கிறா... அனாதை மாதிரி செத்துக் கிடந்தாள்ன்னு, நான் இருப்பது கண்ணு தெரியலியா?"
அடுத்து சித்தப்பா...
"ம்...என்னமோப் போய் சேந்துட்டாங்க... தான் என்னவோ நிரந்தம் மாதிரியும், எல்லாத்தையும் விடாது அனுபவிக்கப் போறது மாதிரியும் ஓடி ஓடி சேத்து வைச்சாங்க... இப்ப என்ன ஆச்சு? எல்லாம் செல்லரிச்சுப் போச்சு,"என்று பெரிய அத்தையிடம் நன்கு விசிறி விட்டு அண்ணனைப் பார்க்கப் போனார்.
"என்ன குறை வச்சேண்டா உன் அண்ணிக்கு? சம்பாரிச்ச அத்தனையும் குடும்பத்துக்கே கொட்டி அழுதேன். கடங்காரி கொஞ்ச நாளா அடிக்கடி நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு இருந்தா. டாக்டர் கிட்டக் காட்டினதும், 'ஹார்ட் அட்டாக்' பெட்டுல சேர்க்கணும், ஓய்வா இருக்கணும், கடுமையா வேலை செய்யக்கூடாது, அதிர்ச்சி கூடாதுன்னார்..."
"காசு கறக்க டாக்டர் அப்படித்தான் சொல்வார்... அதுக்காக பெட்ல சேர்த்தா யார் பார்க்கறது. எனக்கு யார் சமைச்சுப் போடறது. அதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது வேலையைப் பாருண்னேன். வேலைக்குக் கூட ஆள் வச்சேன். ஆறு மாசம் ஆனதும் வேணாம்முன்னுட்டா. அவளும் நின்னுட்டா..."
அவளாகவா நின்னாள்?
அப்பாவின் வாரிசு வேலைக்காரியின் வயிற்றில் வளர ஆரம்பிச்சதும், அக்கம் பக்கம் புகைய ஆரம்பிச்சது. அவசரமாக அவளை அசலூருக்குக் கூட்டிப் போய் சுத்தம் பண்ணி வேற ஒருத்தனுக்குக் கட்டி வச்சது அப்பா தானே?
அதில் இருந்து தான் அம்மா ஒதுங்க ஆரம்பித்தாள். ஒடுங்கவும் ஆரம்பித்தாள். அப்பா, சித்தாப்பாவிடம் தொடர்கிறார்...
"நேத்து கூட என்னவோ உடம்பு முடியலன்னு சொல்லிக்கிட்டு, ஒரு ரசத்தை வைச்சு சாதம் போட்டா... இந்த சோத்த எவன் தின்பான்னு விசிறி அடிச்சுட்டு டவுனுக்குக் கிளம்பினேன். ராத்திரிக்காவது அடையும், அவியலும் செஞ்சுவை ஒண்ணும் ஆயிடாதுன்னு சொல்லிட்டுப் போனேன்."
"என் குணம் அறிஞ்சு, அடைக்கு அரைச்சு வச்சுட்டு அவியலுக்கு நறுக்கி வச்சு இருக்கா... நல்ல பசியோடு வந்தேன். அடையத் திங்க விடாம செத்து வச்சு இருக்கா பழிக்காரி. அம்மா போனதை விட அடை தின்னாதது தான் அவருக்குப் பெரிசாப்பட்டது. திட்டம் போட்டே இப்படிப் பொசுக்குன்னு போய் என்னைப் பழி ஆளாக்கிட்டா... நமக்குன்னு ஒரு கவுரவம் இருக்குல்ல. அதைக் காப்பாத்தணும். இதுவரைக்கும் யார் வீட்டிலும் நடக்காத வகையில் காரியத்தைச் செய்யணும்... என்று மூக்கைச் சிந்தியபடியே உறுமினார்."
தேவார கோஷ்டி, அதிர்வேட்டு, மதியத்துக்கு வடை பாயசத்தோடு சாப்பாடு, ஒண்ணுலயும் குறை வைக்கக் கூடாது என்று சத்தமாக உறுமியபடியே கட்டளையிட்டார். பத்தாயிரம் ரூபாய் தூக்கிப் போட்டார் சித்தாப்பாவிடம். மவுனமாக லிஸ்ட் போட ஆரம்பித்தார் சித்தப்பா.
"அக்கா, நீங்க இவ்வளவு சீக்கிரமாப் போயிட்டீங்களே... உள்ளே சிரித்து, வெளியே அழும் ஜானகி அக்கா. அப்பாவின் நண்பருடைய மனைவி. அம்மா ஊரில் இல்லாத நாட்கள் இருவருக்கும் திருநாளே. அதற்காகவே அம்மாவை அடிக்கடி ஊருக்குத் துரத்தும் அப்பா. நாள் கிழமைக்கு, ஊருக்கு போனாலும் தான் மட்டும் தங்கி விடுவார். நாலு நாள் கழிச்சு வா, உடனே வந்து நிக்காதே என்று மறைமுக மிரட்டல். மீறி வந்து விட்டால் அடி, உதை."
"இந்தக் கூத்து எல்லாம் அண்ணனுக்குத் தெரியாது. அவன் அப்பாவி. ஜானகி அக்காவை தன் பெண்ணைப் போலவே நேசித்தாள் அம்மா. பார்த்துப் பார்த்து காஃபியும், டிபனும் கொடுப்பாள். தனக்குப் பெண் இல்லாத குறையை, அவளை அலங்கரித்து நிறைவேற்றிக் கொள்வாள். அவள் குழந்தைகளையும், தன் பேரக் குழந்தைகள் மாதிரிக் கொஞ்சி மகிழ்வாள். அவள் ஜானகி அக்காவிடம் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை."
"தான் அழகு, அறிவு ஜீவி, கை நிறைய சம்பளம், பெரிய பதவி என்ற அகங்காரம் அப்பாவுக்கு. அம்மாவைத் தனக்கு சரியான. இணை இல்லை என்ற இறுமாப்புடனே விமர்சிப்பார். வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னே, எடுத்து எறிந்து பேசும் அலட்சியம். தன் அழகுக்கும், அறிவுக்கும், பதவிக்கும் அத்தனைப் பெண்களுமே தன் காலடியில் என்ற மமதை அவருள்."
இந்த விஷயத்தில் அவர் ஒரு சமதர்மவாதி. சாதி, இனம், உறவு என்ற பேதமில்லாமல் அவரது லீலைகளில் ஒரு சமத்துவம். அம்மாவை தன் மனைவியாகத் தன்னில் ஒரு பாதியாக என்றுமே நினைத்தது இல்லை. கொத்தடிமை என்ற நினைப்பு. எங்கும் எப்போதும் தனக்கே முதலிடம், தனக்குப் பின் தான் பிள்ளைகள் கூட என்ற இறுமாப்பு. சுருக்காக கூறினால், மணி அடித்தால் ஓடி வரும் பியூன் நிலையே அம்மாவுக்கு. அது போல் அழைப்பு மணியும் வீட்டில் உண்டு. யாராவது வந்தால் மணியடிப்பார் காரணமே இல்லாமல். அம்மா ஓடி வந்து, ஏன்? என்று கேட்க வேண்டும். அம்மாவுக்கு வந்தவர்கள் எதிரிலேயே காரணமே இல்லாமல் அர்ச்சனை செய்து அனுப்புவார்."
"அத்தனையும் விழுங்கிக் கொண்டாள் அம்மா. எங்களுக்கும், அப்பாவுக்கும் எந்தவித குறையும் வைக்கவில்லை. அண்ணன் ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். திருமணமும் ஆகிவிட்டது. நாளை அவனுக்கு முதல் 'கல்யாண நாள்' அதற்காகத் தான் இன்று வருவதாக நேற்றே போன் செய்து விட்டான்."
போன் மணி அடிக்கிறது. அண்ணாகத் தான் இருக்க வேண்டும்.
"அம்மா, உனக்காக சமையல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, மதிய சாப்பாட்டுக்கு வந்து விடு என்று சித்தப்பா கூறுவது காதில் விழுகிறது. எனக்குத் தொண்டை அடைக்கிறது. அண்ணன் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கப் போறான். மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்கிறேன்."
"எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி வளைய வரும் அம்மா அதிர்ச்சியில் உறைந்த அந்த நாள்... பக்கத்துத் தெருவில் ஒரு விசேஷம் என்று சென்ற அம்மா திரும்பி வரும் போது... ஜானகி அக்காவும், அப்பாவும்... ஜானகியுமா இப்படி? அம்மா உறைந்து போனாள். அதற்காக இருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. எதுவுமே நடக்காத மாதிரி இருவரும் இருந்தனர்."
"அதன் பிறகு ஜானகி அக்கா வீட்டுக்கு வருவது இல்லை. இரண்டு பேரும் பக்கத்து டவுனுக்குச் சென்று தேர் திருவிழா, சினிமா என்று ஜோடியாக சுற்றுவார்கள். இது அக்கம், பக்கத்தில் கசிந்து, நக்கலாகப் பேசிப் பார்வையால் துளைக்கும் போது உடைந்து போன அம்மா உறைந்தும் போய் விட்டாள். இத்தனைக்கும் ஜானகி அக்கா தூரத்து உறவும் கூட. அவள் புருஷனும் எதுவும் கண்டு கொள்வதில்லை. காசு வந்தால் போதும் என்ற நினைப்பா? அல்லது அம்மாவைப் போல் தன் இரண்டு குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகக் கண்டும், காணாதது போல் இருக்கிறாரா? ஆண்டவனுக்கே வெளிச்சம்."
"வர வர அம்மா மவுனியாகி விட்டாள். ஒற்றைச் சொல்லிலே பதில் கூறும் திறன் அவளுக்கு மட்டுமே எப்படிச் சாத்தியமாகிறது. அடிக்கடி என்னிடம் புலம்புவாள். உன்னுடன் வந்து விடுகிறேன் என்று அவள் அரற்றும் போது மவுனகாக வெறிப்பேன். எனக்கும் ஆசை தான். அப்புறம் அண்ணனின் நிலை. இது அம்மாவுக்கும் புரியும். உன்
அண்ணனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு உன்னுடன் வந்து விடுகிறேன். இனிமேலும் உன் அப்பாவின் அட்டூழியத்தைப் பொறுக்கும் சக்தியில்லை என்று புலம்புவாள்."
எதிர்வீட்டு அக்கா நேற்று பால் கொடுக்க வரும் போதே அம்மாவுக்குக் கடுமையான நெஞ்சு வலி. பல்லைக் கடித்துக் கொண்டு எதுவுமே காட்டிக் கொள்ளாமல் அவளைப் போக்குக் காட்டி அனுப்பி விட்டாள் அம்மா. வலின்னு சொன்னா டாக்டரைக் கூப்பிட்டுப் பிழைக்க வச்சுட்டா என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு. நீ பார்த்துக்கிட்டு சும்மா இருந்தியான்னு கேட்கிறீங்களா?"
"அம்மா ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான். அதை யாராலும் மாற்ற முடியாது. திட்டவட்டமாகத் துல்லியமாக வியூகம் அமைப்பாள். நாளைக்கு அண்ணன் வந்ததும் அவன் கையால் போய்ச் சேரணும் என்று ஆசை. புருஷன் கையாலப் போய்ச் சேரக் கூடாது என்பது அவளுடைய இறுதி ஆசை".
"அண்ணன் வந்ததும், அவனைக் கேட்கணும். வெளிநாடு போவாதேன்னு அம்மா சொன்னாளேக் கேட்டியாண்ணு கதறணும். நீ இருந்தா இப்படி அம்மா அம்போன்னு போவாளான்னு அவன் சட்டையப் புடிச்சு உலுக்கணும்னு நினைக்கிறேன். இதோ அண்ணன் வந்து விட்டான் அண்ணியுடன். அவனால இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை"..
இரண்டு பிள்ளையப் பெத்தும் அம்மா இப்படி அம்போன்னு போயிட்டாங்களே என்று என் மீது சாய்ந்து அழுகிறான். நான் வழக்கம் போல் மவுனிக்கிறேன்.
"பாவம் அந்தம்மா மூத்த புள்ளையும் அமெரிக்கா போயிட்டு, சின்ன புள்ளையும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விஷக் காய்ச்சலில் செத்துப் போயிட்டு, தம்பி போட்டோவைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு அழுவதே அது தான் பெரியபுள்ள. யாரோ விளக்குகிறார்கள்."
"ம்... அந்தம்மா சின்ன புள்ளக்கிட்டப் போயிடணும்னு அடிக்கடி புலம்பும். நேத்து நல்லா நடமாடின மவராசி இதோ புறப்பட்டு விட்டாள். குரல்கள் கிசுகிசுக்கின்றன. ஒரே கூக்குரல்".
அம்மா புறப்பட்டு விட்டா பூவும், பொட்டுமாய், மாலையும், கழுத்துமாய். என்னிருப்பிடம் தேடி இதோ வந்து கொண்டு இருக்கிறாள். அம்மா... அம்மா... குரல் எழும்பாமல் விசிக்கிறேன்...
பாலசுந்தரி, மாங்குடி.
பல் துலக்கி முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்து குங்குமம் வைத்த கமலம் அதிர்ந்தாள். ஒரு காதில் கம்மலைக் காணோம். அரைப்பவுனில் புஷ்பராக கம்மல். ராசியான கம்மல் ஒற்றைக் கம்மலின் விலையே பத்தாயிரம் இருக்கும். இரவு படுக்கும் போது கூட நன்கு திருகிவிட்டுத்தான் படுத்தாள். பாத்ரூம் கூட போகவில்லை. ஹாலில் சோபாவில்தான் படுத்து இருந்தாள். அப்படியானால் ஹாலில்தான் விழுந்து இருக்க வேண்டும். ஹாலுக்கு விரைந்தாள். அதற்குள் வேலைக்கார பெண் ராதா ஹாலைப் பெருக்கித் துடைத்துக் கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
சோபாவில் கம்மல் இல்லை. மகனையும், மருமகளையும் கேட்டாள். நன்றாக தேடிப்பாருங்கள் என்று அவர்களும் பதட்டத்துடன் வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அங்குலம், அங்குலமாக தேடிவிட்டனர். எங்கும் கம்மல் இல்லை. 'இந்த வேலைக்கார குட்டிதான் எடுத்து இருக்கணும். நேற்று அவ அம்மாவுக்கு உடம்புக்கு முடியல.ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு அழுதுகிட்டு இருந்தா' என்றவளை இடைமறித் தான் கமலத்தின் மகன்.
'அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதம்மா. இங்கதான் விழுந்திருக்கும். நல்லா தேடிப் பாருங்க' என்றான்.
'உங்க ஆபிஸ் ஸ்வீப்பரோட பொண்ணு. நல்லா படிப்பா. இப்ப லீவுல இருக்கிறா. நம்மோட சம்பளம் அவ படிப்பு செலவுக்கு ஆகும்னு நீதான் வேலைல சேர்த்த. அவ, அவ வேலையை காட்டிட்டா. இப்ப நான் என் வேலையை காட்டறேன், என்று ஆவேசத்துடன் விளக்கு மாற்றை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள் கமலம்.
மகனும், மருமகளும் தடுக்க தடுக்க ஆவேசத்துடன் கொல்லைப்புறம் சென்றவள் அங்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை ஓங்கி உதைத்தாள்.
'எங்கடி கம்மல்?'
'எந்தக் கம்மல்மா?'
"நீ இப்படியெல்லாம் கேட்டா சரிபட மாட்டா. இதோ இப்பவே போலீசுக்கு போன் பண்றேன்' என்றபடி முந்தானையை உதறி திரும்ப 'சிலீங்' என்ற சப்தத்துடன் கம்மல் முந்தானை மடிப்பிலிருந்து கீழே விழுந்தது.
கூனிக் குறுகினாள் கமலம்.
அதுவரை அழுதுகொண்டிருந்த அந்த சிறுமி, நிமிர்ந்து எழுந்தாள்.
'இனிமே வேலைக்கு வரமாட்டேம்மா' என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு யாருடைய அழைப்பையும் பொருட்படுத்தாமல் வெளியேறினாள்.
மரவல்லி மரம்
கே.பாலசுந்தரி
வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற கதை
'இன்னும் ஒரு ஆ...வாங்கிக்க கண்ணு.'
'வேண்டாம்' என்று இடமும் வலமுமாகத் தலையை பலமாக ஆட்டினாள் குழந்தை. 'இப்ப காக்கா வந்து ஆ... வாங்கிக்குமாம், என்று சரசு கண்ணை மூடிக்கொள்ளப் பூஞ்சிட்டாய் வாய் திறக்கும் குழந்தை. உதட்டோரம் வழியும் சாதத்தை சரசுவின் தோளில் உரசித் துடைக்கும் குழந்தை. மேனி சிலிர்க்கிறது. மதியம் சாதத்தை மோர் விட்டுக் குழையப் பிசைந்து இரண்டு சொட்டு வற்றல் குழம்பு கலந்த கலவை. அப்படி இப்படி போக்குக் காட்டி சாதம் ஊட்டிவிட்டாள்.
கோடையின் புழுக்கம் உள்ளே உட்கார முடியவில்லை. மங்களூர் ஓட்டின் தாக்கம். மதியம் தகித்த வெய்யிலை உள் வாங்கி இரவில் மெல்லமெல்ல வெளியிடும் வெளிப்பாடு. ஓர் இலை கூட அசையவில்லை.
பனியில் நனைந்த ரோஜாவாய் குழந்தையின் முகத்தில் வியர்வைத் துளிகள். முந்தானையால் மெல்ல ஒற்றி எடுக்கிறாள். மடியிலேயே குழந்தை உறங்கி விட்டாள். நாளையைப் பற்றிய கவலை இல்லாத நிம்மதியான உறக்கம். சாதம் ஊட்டிய கை காய்ந்துவிட்டது. உள்ளே போய்விட்டால் குழந்தை புழுக்கம் தாங்கமாட்டாள். அவசியம் என் செல்லக்குட்டிக்கு ஃபேன் வாங்கணும். எண்ணியபடியே குழந்தையைக் கீழே கிடத்தினாள்.
மரத்துப் போன கால்களை மாற்றிப் போட்டு அமர்ந்து வானத்தையே வெறித்தாள். கோடைகால வானம் நிர்மலமாக, துடைத்து விட்ட மொசைக் தரையாக... இடையிடையே வாரிச் சுருட்டிக்கொண்டு விரையும் வெண்மேகங்கள், எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த ஓட்டம். இலக்கில்லாமல் விரையும் மேகங்கள். எத்தனை எத்தனை உருவங்கள். யானை, மாடு, தேர், மலை பற்பல உருவெடுக்கும் மேகங்கள். பின்னர் பழைய உருவங்கள் சிதைந்து புதிய வடிவெடுக்கும் மேகங்கள். ஒரு துணுக்கில் இருந்து பிரிந்து இன்னொரு துணுக்கில் இணையும் அதிசயம். அவள் வாழ்வைப் போல.
குப்பென்று ஒரு வாசம். மல்லிகையா? இல்லை முல்லையா? இல்லை இரண்டும் கலந்த கலவையா? அனுமானிக்க முடியாத அற்புத வாசம். மெல்லமெல்லத் தவழ்ந்து வந்து நெஞ்சை நிறைக்கும் வாசம். எங்கிருந்து இந்த மணம்? கண்கள் அலை பாய்ந்தது, தெருவிளக்கின் வெளிச்சத்தில். ஆங்... கண்டுபிடிச்சுட்டேன்.. மனதில் உற்சாகத்துள்ளல்.
முதல் முதலாய்ப்பூத்துக் குலுங்கும் மரமல்லிகை. வெள்ளை நிற சீரியல் பல்புகளைச் செண்டாய்ச் கட்டியது போல கொத்தாய் தொங்கும் பூங்கொத்து. கையகலக் கொத்து. சற்றே நெகிழ்ந்த மொட்டில் இருந்து கசியும் மணம். அவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே மெல்ல மெல்ல இதழ்விரிந்துச் சிரிக்கும் அதிசயம். கண்ணைச் சுருக்கி கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கிறாள் சரசு. கிளையெங்கும் மொட்டுகள் நன்கு படர்ந்த கிளையில் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடும் மொட்டுகள். இதை இத்தனை நாட்கள் கவனிக்கவே இல்லையே. அதிசயிக்கிறாள்.
இந்த மரமல்லிகைக்கு ஒரு தனிச் சிறப்பு. விதைபோட வேண்டாம். கிளை ஊன்ற வேண்டாம். வேரில் தலை நீட்டும் குருத்துகள் தானாகவே தளதளவென வளர்ந்து பூத்துக் குலுங்கும் அதிசயம். இந்தமரம் மூணாவது வீட்டு மரத்தின் வேரில் முளைத்த மரம். அடுத்த வீட்டில் புகுந்து என் வீட்டில் தலை நீட்டி இரண்டு வருடம் ஆகி இருக்குமா? கண்களை மூடித் தூணில் சரிந்தாள். கை அனிச்சையாய் மடியில் இருக்கும் லட்சுமியைத் தட்டிக்கொடுக்க மனது பத்து ஆண்டுகளுக்கு முன்னே பாய்ந்து ஓடி நின்றது.
அப்பா பிரபல கொத்தனார். சின்ன வயதிலேயே அம்மா போய்ச் சேர்த்துவிட அப்பா மறுமணம் செய்து கொள்ளவில்லை. மகளுக்காகவே வாழ்ந்த அப்பா. சரசு ஒரே மகள். பேரழகி இல்லைவிட்டாலும் அவலட்சணமும் இல்லை. மாநிறம். மாறாத புன்னகை. அளவான உடல்வாகு. வீட்டுக் காரியங்களைச் சுத்தமாகச் செய்யும் சுறுசுறுப்பு. தாயில்லாப் பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஏங்கி நின்ற அப்பாவுக்கு, உடன் வேலை செய்யும் சரவணனை மிகவும் பிடித்துப்போய் விட்டது. சரசுவுக்கும் தான். வாட்டசாட்டமான உருவம். சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாதுர்யம். சரசுவுக்கு உலகே தன் காலடியில் என்று நெஞ்சு கொள்ளாத பெருமை. சொல்லிக் கொள்வது போல் உறவு ஏதும் இல்லை என்றதால் சரவணன் வீட்டோடு மாப்பிள்ளை ஆனான்.
அப்பாவுக்கு கழுத்தில் தலைநிற்காத பெருமை, தன்னைப் போலவே மருமகனும் கொத்தனார், அத்தோ வீட்டோடு மாப்பிள்ளை, எனவே மகள் பிரிவு இல்லை என்று போவோர் வருவோரிடம் பீற்றிக்கொள்வார். அத்துடன் மகள் மூன்ரு மாத கர்ப்பம் என்றதும் ஆகாசத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளக் குதித்த அப்பா. அந்தப் பூரிப்புடனே படுத்தவர், எழுந்திருக்காமல் தூக்கத்திலேயே மரணித்த அப்பா. ஒருவாறாக ஜீரணித்துத் தெளிந்தவளுக்குப் பேரிடி. சரவணன் கூட வேலை செய்யும் பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பது தெரிந்தது. கேட்டவளுக்கு அடி உதை. அத்தோடு வீட்டைத் தன் பேரில் எழுதிக்கொடு பேங்கில் லோன்போட்டு மாடி வீடு கட்டப்போகிறேன், என்று அவளை நெருக்க ஆரம்பித்தான். அதற்கும் சரி என்று தலை ஆட்டிவைத்தாள்.
பின்னர் தான் உண்மை தெரிந்தது. இடத்தை யாருக்கோ விலைபேசி அட்வான்ஸ் வாங்கி சின்ன வீட்டுக்குச் செலவு செய்து இருப்பது. கையெழுத்து போட மறுத்தவளை அடித்து ஓங்கி வயிற்றில் உதைந்து தாலியையும் பறித்துச் சென்றவன் தான். அந்த உதையில் கரு கலைய உறைந்து உடைந்து நின்றவளுக்கு ஒரே ஆதரவு, புதிதாக எதிர் வீட்டுக்குக் குடிவந்த பேங்க்காரங்க வீட்டு விஜயா அம்மா.
சிண்டும் சிமிழுமாக மூன்று குழந்தைகள். ஆபீஸ் செல்லும் கணவன். ஙை,ஙை என்று அழும் கைக்குழந்தையுடன் திண்டாடிய விஜயாம்மா. கருவும் கலைந்து கணவனும் பிரிந்த சரசு; இருவரையும் இணைத்த இறைவனின் கருணை. சரசுவுக்குப் புதியதோர் உலகம் தெரிய ஆரம்பித்தது. அவர் வீட்டில் ஒருத்தி ஆனாள். புதியவர்கள் வந்தால் உறவா? என்று கேட்கும்படி ஒன்றிவிட்டாள். குழந்தைகளைக் கவனித்து, துணி துவைத்து, பாத்திரம் தேய்த்து கடைக்குப் போய் வந்து அனைத்தும் சரசு தான். மூன்று வேளை சாப்பாடு, பண்டிகைக்குப் புதுப்புடவை, அவ்வப்போது பழம் புடவை வேறு என்ன வேண்டும். எனவே சம்பளம் இருநூறு ரூபாயை வாங்குவதே இல்லை.
ஒண்டிக்கட்டை. ஒண்டிக்கொள்ளச் சொந்தக்குடிசை. எனவே செலவுக்கு என்ன வேலை. அப்படியே அவள் பெயரில் வங்கியில் போட்டு வைத்தார்கள். பத்தாண்டுகள் ஓடிவிட்டன.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகி டவுனுக்குப் போய் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வேலைகள் வெகுவாகக் குறைந்தன. விஜயாம்மாவுக்குப் பேச்சுத்துணையாக சினேகிதியாக நின்றவளின் மனதில் எதுவோ நிரடல். ஒரு வெறுமை. ஐந்தாம் வகுப்பு படித்த அவளுக்கு அம்மா வீட்டில் வாங்கும் புத்தகம் எல்லாம் அத்துபடி. படித்ததை அம்மாவுடன் அசைபோடுவது இருவருக்குமே பேரானந்தம்.
இதற்குள் சரவணன் பழையவளை விட்டு விலகி புதியவள் ஒருத்தியுடன் வாழ்வதாகக் கேள்வி. கணவனை இழந்த கைக்குழந்தைக்காரியாம். விஜயாம்மாதான் சொன்னார்.
'பக்கத்து டவுனல தான் உன் புருஷன் குடித்தனம் நடத்துறானாம். ஐயா நேத்துப் பார்த்தாராம். போய் என்னன்னு கேளுடி. பள்ளிக் கூடம் புதுசாக் கட்டுறாங்கயில்ல, அங்கதான் வேலை செய்யுறானாம். இப்படி எத்தனை நாளைக்குத் தனி மரமாவே நிப்ப. உனக்குன்னு ஒரு குழந்தை குடும்பம்னு பிடிப்பு வேணாமா?'
கோபமாக வெடித்தார் விஜயாம்மா.
அவசரமாக இடைமறித்தாள் சரசு.
'வேணாம்மா. முன்ன என்ன பாவம் செஞ்சேனோ இந்த மனுஷன் வாச்சு இருக்கார். கொடுமைக்கார புருஷனா ஆனாலும் ஒரு விதவைக்கு வாழ்வு தந்து இருக்கார். அதைக் கெடுக்க விரும்பலைம்மா. அன்னிக்குப் படிச்சோமே பாரதிதாசன் கவிதைகள். வேரில் பழுத்த பலா ஒண்ணு கோரிக்கையற்றுக் கிடக்குதுன்னு.அந்தப் பலாவைக் கோரி பெற்றுக்கிட்டார் அவர். அதை தட்டிப்பறித்து நான் வாழவிரும்பல.'
படபடவென்று கைதட்டல். பேங்க் ஐயாதான்.
'சூப்பர்மா அசத்திட்ட, இருந்தாலும் உனக்கு கடைசி காலத்துல வயசான காலத்துல ஆதரவு? பொருளாதாரம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அதனால் பேங்க்ல இருக்கும் உன் சம்பளம் பணத்துல ஒரு கறவைமாடு வாங்கு. நாங்களே பாலை வாங்கிக்கிறோம். அக்கம் பக்கத்துல வாடிக்கை புடிச்சுத் தாரேன். அதோட எங்க பேங்க இருக்கும் சைக்கிள் ஷெட்டை ஓட்டுக்கட்டடமாக மாத்தப் போறாங்க. பழைய ஓட்டுக் கூரையை காண்ட்ராக்ட் காரரிடம் சொல்லி குறைஞ்ச விலையில் உனக்கு வாங்கித்தரேன். கூரையை ஓடா மாத்திடலாம். பணம் பத்தலனா பேங்ல லோன் போட்டுத்தர்றேன். மாட்டை இன்ஷீர் பண்ணித்தர்றேன். என்ன சரியா?'
தலையாட்டினாள்.
கனவு போல இருக்கிறது. கூரை வீடு ஓட்டு வீடாச்சு. ஒரு மாடு இரண்டு மாடு ஆச்சு. கடனும் அடைச்சாச்சு. மெதுவாக நிம்மதிப் பெருமூச்சு விடலானாள். அந்த நிம்மதியும் கலைந்தது.
அன்று தான் இந்த மரமல்லிக் கன்றை அடையாளம் கண்டாள் சரசு. விஜயாம்மா தான் கூறினார். மூணாவது வீட்டு மரத்தில் கிளைத்த வேரில் இருந்து வெடித்த குருத்து இது என்று. சீமக் கருவேல முட்களை வெட்டிச் செடியின் சுற்றிலும் நட்டுவைத்தாள். ஒரு செம்பு தண்ணீரும் ஊற்றி நிமிரும் போது.
'இங்க சரசுங்கறது?'
கேள்வியுடன் வந்தவர் போலீஸ்கார். 'நான் தாங்க!' என்று கூறுவதற்குள் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
'வேறு ஒருத்தரும் இல்லையா?'
அவர் கேட்கும் போதே அவளுக்குக் குலை நடுங்கியது. ஓடிப்போய் பேங்க் ஐயாவை அழைத்துவந்தாள்.
விஷயம் இதுதான். குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடித்திருக்கிறான் சரவணன். அம்மிக் கல்லில் தலைமோதி அங்கேயே மண்டையைப் போட்டுவிட்டாள் மகராசி. லாக்கப்பில் சரவணன். விலாசம் தேடி சேதி சொல்ல வந்திருக்கும் காக்கி. பேங்க் ஐயாவுடன் ஓடினாள் சரசு. லாக்கப்பில் கைகட்டி குத்திட்டு விட்டத்தை வெறித்தபடியே, சரவணன். கண்களில் வழியும் கண்ணீர் துடைக்கவும் தோன்றாத பரப்பிரம்மமாய்.
'தூக்கோ ஆயுளோ உறுதி. கேஸ் வலுவா இருக்கு!' இன்ஸ்பெக்டர் கூற விக்கித்து நின்றாள் சரசு. சரவணனிடம் எந்தவிதச் சலனமும் இல்லை, இவளைக் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.
'அப்புறம் அந்தக் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுகிறோம்.'
இன்ஸ்பெக்டர் கூறிக்கொண்டே போகத் திடுக்கிட்டாள் சரசு. பெண் போலீஸ் தந்த பாலை பாட்டிலில் உறிஞ்சியபடியே திகில் உறைந்த விழிகளுடன் அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. கலைந்த தலை. கண்ணும் மூக்கும் வழிந்து காய்ந்த முகத்திலும் ஒரு களை. அந்த வண்டுக் கண்கள் அவளிடம் ஏதோ கூறுவது போல் ஒரு பிரமை. வராந்தாவிலேயே உட்கார்ந்து கிடந்தாள் சரசு. அனாதை ஆரமத்திலிருந்து உரியவர்கள் வர ஒப்படைத்தார்கள் குழந்தையை. போக மறுத்து அடம் பிடித்து அழுது புரண்டாள் குழந்தை. அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. சரசுவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பிரவாகம் ஊற்றாகப் பீறிட்டது. சட்டென பேங்க் ஐயாவிடம் தன் கோரிக்கையை வைத்தாள். இது சாத்திரத்தால முடியாததை, சத்தியமா நான் இதைச் சாதித்துக் காட்டுறேன் ஐயா, நீங்க தான் ஏற்பாடு செய்யணும் என்று கண்ணீருடன் கை குவித்தாள். அந்தப் பிஞ்சு தன் அழுகையை மறந்து இவளையே கண்கொட்டாமல் கவனித்தது.
ஆச்சு யார் யாரிடமோ பேசினார் பேங்க் ஐயா. முறைப்படி சட்டப்படி குழந்தை சரசுவிடம் தத்து கொடுக்கப்பட்டது. மௌனமாகக் கைகுவித்தான் சரவணன். குழந்தையை ஐயா அம்மா இருவர் காலடியிலும் கிடத்தி தானும் விழுந்தவளைத் தாங்கிப்பிடித்தாள் விஜயா அம்மா. ஆதரவாகத் தோளில் சாய்ந்தாள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் சரசுவின் காலிடுக்கில் குழந்தை ஒடுங்கி நின்றாள்.
'சரசு! நீ சாதாரணப் பெண் அல்ல தெய்வம். வசதி படைச்சவங்களுக்குத் தோணாத தைரியம் உனக்கு வாய்ச்சிருக்கு. புள்ளையை நல்லாப் படிக்க வைச்சு ஆளாக்கு'.
'பேர் என்ன கண்ணு?' என்று கேட்க லட்சுமி என்றது மழலையில். பகபகவென சரித்தாள் சரசு.
'என்னடி சிரிப்பு உனக்கு இந்த நிலைமையிலும்?'
தொண்டையடைக்கக் கேட்டார் விஜயா அம்மா.
'இல்ம்மா படிக்காத என் பெயர் சரசு. அப்பன் ஆத்தா இல்லாத அடுத்த வேளை பாலுக்கு வழியில்லாத இவள் பெயர் லட்சுமி. அதான் சிரிப்புவந்துட்டு'.
'இப்பவாவது சரின்னு சொல்லு. கணவனால் கைவிடப்பட்டவள்ன்னு உனக்கு அரசு உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?
என்ற பேங்க் ஐயாவை அவசரமாக இடைமறித்தாள் சரசு.
'வேண்டாம்யா. புருஷனே தாலிய அறுத்துக்கிட்டு உறவையும் அறுத்துக்கிட்டுப் போனவர்தானே. அவரைக் காட்டிப் பென்ஷன் எதுக்குய்யா? உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு. அதோட இந்தப் பிஞ்சு பொக்கிஷமாக் கிடைச்சிருக்கு. இது போறும்யா. என் புருஷனாலதான் இந்தப் பிஞ்சு பெத்தவளை இழந்து நிர்க்கதியா நிக்குது. என்புருஷன் செஞ்ச பாவத்துக்கு இது கூட நான் செய்யலன்னா நானும் என் புருஷன் மாதிரி ஒரு மிருகம் தான். அப்புறம் என் புருஷனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கூடப் பொறந்த பொறப்பா நீங்களும் அம்மாவும்!
பேசிக் கொண்டே போனவளை கண்ணீர்கசிய ஏறிட்டனர்பேங்க் ஐயாவும் அம்மாவும்.
'ஐயா வந்து... வந்து ஒரு உதவி. உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்க? அதனாலதான் திரும்பத் திரும்ப உங்களையே உதவி கேட்குறேன்.'
தொண்டையடைக்கக் கேவினாள்.
சொல்லும்மா என்ன செய்யணும். உன் அளவு எங்களுக்குப் பரந்த மனசு இல்லாட்டாலும், உனக்கு உதவியாக நிற்க நாங்கதான் குடுத்து வைச்சிருக்கணும். எதா இருந்தாலும் தைரியமாகக் கேளு ஊக்கப்படுத்தினார்.
'ஐயா உங்க பேங்கில கூட்டிப் பெருக்குற ஆயா பிள்ளை ஊட்டோட அடுத்தமாசம் பட்டணத்துக்குப் போவுதாம். அந்த வேலையை எனக்கு...
இழுத்தவளை இடைமறித்தார் ஐயா.
'சரி. உனக்குத் தான் அந்தவேலை'.
'அப்புறம் உங்க பேங்ல ஒரு இருவது பேர் வேலை பாக்கிறாங்கல்ல, ஆமாம். அவுங்க எல்லாம் ரெண்டு வேளையும் டீயும், வடையும் சாப்புடுவாங்கல்ல? அதை நானே செஞ்சு குடுக்குறேன்யா. சாப்புட்டுப் பார்க்கட்டும். புடிச்சா வாங்கிகிடட்டும். கட்டாயமில்லையா...'
என்றாள் கைகளைப் பிசைந்தவாறே.
'கட்டாயம் வாங்குவாங்க, உன் கைமணம்தான் எனக்குத் தெரியுமே? எனக்குக் கூட இது தோணலபாரு. சரசுகிட்ட சரஸ்வதியே குடியேறி ஐடியாகக் குடுக்கிறான்னு நினைக்கிறேன்'
விஜயாம்மா கூற உனக்கு கூட ஐடியா தோணுதே என்று ஐயா கிண்டலடிக்க. சரசு இப்ப செம பிசி.
கறவை மாடு கவனித்து இரண்டு வேளையும் சுடச்சுட டீயும் பஜ்ஜியும் வடையும் போண்டாவுமாக அசத்துகிறாள். அதைச் சாப்பிடுவதற்காகவே யாரும் லீவு போடுவதில்லை என்று ஐயா சொல்வார். வசூல் பணத்தை ஐயாவே லட்சுமியின் பெயரில் பேங்கில் போட்டு விடுவார். கூட்டிப் பெருக்கும் சம்பளம் ஐயா வீட்டு சம்பளம் இரண்டையும் சேர்த்து அம்மாவே மொத்தமா மளிகைச் சாமான் வாங்கித்தர பம்பரமாய்ச் சூழலும் சரசு, நித்தியப்படி வண்டி ஓடுவது வழக்கம் போல் ஐயாவீட்டு சாப்பாட்டில். குழந்தைக்குத் துணி எடுப்பது அம்மாவேதான். அவருடைய சொந்தச் செலவில்.
டாண்டாண் என எதிர்வீட்டுக் கடிகாரம் பத்துமுறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பத்து மணி ஆச்சா? காலையில் நிறையவேலை இருக்கு, என் செல்லத்தைப் பள்ளியில் சேர்க்கணும் பக்கத்துத் தெரு மில் தொழிலாளிகள் பத்துபேருக்கு மதியம் சாம்பார்சாதம் தயிர்சாதம் செய்து தரணும்; இது புது வாடிக்கை. என் புள்ளய கலெக்டருக்குப் படிக்க வைக்கணும், அதற்கு இப்பவே நிறைய உழைக்கணும். கணிசமாக் காசு சேர்க்கணும்.... வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மலடாய் நின்ற வெண்மேகங்கள் கருக்கொண்டு கருமேகமாய்ச் சூழ பளீரென மின்னல் வெட்டியது. கொட்டும் முரசாய் இடி.
சத்தம் கேட்டு நடுங்கும் லட்சுமியை மார்போடு அணைத்து உள்ளேசென்று பாய்விரித்துக் கிடத்தினாள். சாப்பிடத் தோன்றாது கை அலம்பி லட்சுமியின் அருகே படுத்தாள்.
பனியில் நனைந்த ரோஜாவாய் சில்லிட்ட பட்டுப்பாதங்களைக் கண்ணில் ஒற்றிகொண்டாள். அவள் களைப்புப் பறந்தது. சின்னத் தூறலாய் ஆரம்பித்த மழைச் சாரலோடு மரமல்லியின் மணம் வீட்டுக்குள்ளேயும் ஜன்னல் வழிவந்து நாசியில் நுழைந்து இதயத்தை நிறைத்தது.
உறங்கும் லட்சுமியை மார்போடு அணைத்துக் கொண்டாள் சரசு. இரண்டு அனாதைகளை இணைத்து உறவுப்பாலம் அமைத்த இறைவனுக்கு நன்றி கூறி நிம்மதியாய்க் கண் மூடினாள். மரமல்லிகையின் மணமும் நித்ராதேவியும் ஒரு சேரத் தழவினர் சரசுவை.
ஒரு மரணத்தின் கதை
அமரர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை
கே.பாலசுந்தரி
கனத்த அமைதி.
இரும்புத்திரை போர்த்தியது போன்ற அமைதி. வருவோரும், போவரும் ஜே, ஜேன்னு கூட்டம். இருவராக, நால்வராகக் கும்மலாக என்று பிரித்து நின்று பேசும் கூட்டம். தங்கள் ஆதங்கம் அனைத்தையும் பேசிப் பேசியேத் தீர்க்கும் கூட்டம். இதமான முல்லை மலர் வாசம். கூடவே சந்தன ஊதுவத்தியின் மணம், நேற்று அம்மா தகதகவென்று தேய்த்து வைத்தக் குத்துவிளக்கு; அம்மாவைப் போலவே முத்துப் போல் சுடர் விட்டு எரிகிறது மூலையில் என் வயிறு எரிகிறது.
குளு குளு பிரீசரில் அம்மா. இத்தனை நாட்கள் உள்ளுக்குள் வெந்து புழங்கிய அம்மாவுக்கு இதமான ஒத்தடமோ இந்தக் குளுமை. வாய் விட்டு அழாமல் மவுனிகிறேன். வெளியே லேசான தூறல். வானமும் அழுகிறதோ அம்மாவுக்காக?
யாரோ தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
காதைத் தீட்டிக் கொல்கிறேன். "என்னவோ ஒரேடியா நிலையா நின்னா, இப்ப பொசுக் குன்று போயிட்டா. போறச்ச என்னத்த வாரிக் கட்டிக்கிட்டுப் போனா. மணி மணியா ரெண்டு பெத்தா. அதுகளோடு இருந்து பேரன், பேத்தின்னு கொஞ்சி அனுபவிக்கக் குடுத்து வச்சிருக்கணும்...ம்ம்...முதல்ல யார் பார்த்தது?"
"நான்தான்...எதிர் வீட்டு லட்சுமி அக்கா."
"நேத்து சாயங்காலம் நாலு மணி இருக்கும். நான் பால் கொண்டாந்தேன். பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க, எனக்குக் கூட குத்தாங்க. அந்தப் பூ அப்படியே தலையில இருக்கு அதுக்குள்ள... தொண்டையைச் செறுமிக் கொண்டு தொடர்கிறாள் அக்கா. கடைசி ஊட்டுக்குப் பால் குடுத்துட்டு அம்மாக்கிட்ட லோட்டா வாங்க வந்தேன், பூ மேலேயே படுத்துக்கிட்டு இருந்தாங்க... நான் குடுத்துட்டுப் போன பாலை பூனைக் குடிச்சிக்கிட்டு இருக்கு. நான் பதறிப் போய் அம்மா, அம்மான்னு கூப்பிட்டேன். பதிலே இல்லை. அக்கம் பக்கத்துல சொல்லி டாக்டரை கூப்பிட்டு வந்தோம். அரைமணி நேரம் ஆச்சுன்னுட்டார் என்று நாற்பது இரண்டாவது முறையாக புலம்பினாள் லட்சுமி அக்கா. அக்காவின் குரலில் அம்மாவின் இழப்பன் தாக்கத்தை விட, தான் தான் முதலில் பார்த்து என்ற பரபரப்பு..."
"சரி புருஷன் எப்ப வந்தார்?"
"ராத்திரி பத்து மணிக்கு. போன இடம் தெரிஞ்சாத் தானே சேதி சொல்லலாம் பொண்டாட்டி கிட்டயே எங்க போறேன்னு சொல்லமாட்டார். எப்ப வருவேன்னும் சொல்ல மாட்டார். அப்படி ஒரு குணம். பாவம், அது தான் வேளா வேளைக்கு ஆக்கி வைச்சுக்கிட்டுக் காத்து இருக்கும்." பக்கத்து வீட்டு செண்பகாவின் புலம்பல்.
"புருஷன் வரும் முன்னரே தெரிஞ்ச வரைக்கும் அவுங்க உறவுக்காரங்க எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன். முப்பது வருஷமாத் தாயா புள்ளையா பழக்கம், அதனால அவங்க உறவுக்காரங்க விலாசம் தெரியும். புள்ள அமெரிக்காவுல இருந்து வந்துக்கிட்டு இருக்கு. நாளைக்கு முதல் திருமண நாள். அதுக்காக கிளம்பினது நல்லதாப் போச்சு. அம்மா நெஞ்சு நல்லா வெந்துடும்." பக்கத்து வீட்டுக்காரர் யாரிடமோ சொல்லிக் கொண்டே போனார்.
அது சரி இந்தம்மா புருஷன் யாரு?
"வாசல்ல கால் மேலக் கால் போட்டுக்கிட்டு கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்து இருக்காறே அவுரு தான் .சென்ட் வாசம் ஆளைத் தூக்குதே அவரா?" என்றபடி பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"இருக்கும் போதே நல்ல அமுக்குணி புருஷனப் பக்தி வாயத் திறக்கமாட்டா. உல வாய மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இவளுக்குப் புருஷனக் கையிலப் போட்டுக்குத் தெரியல...
"ஆம்புள்ளன்னா அப்படி, இப்படி இருப்பான் தான். அதுக்காக மூஞ்சியைத் தூக்கி வைச்சிக்கிட்டா. இப்படி உங்களுக்குள்ள நல்ல ஒத்துமை இல்லாமப் போச்சுதே... பேசாம என் பொண்ணையும் கட்டிக்கண்ணு சொன்னேன். கேட்டானா? இவ சம்மதிக்கமாட்டான்னு பயந்தான். போன மாசம் தான் எம்பொண்ணைக் கட்டிக்குடுத்தேன். போனது தான் போனா ரெண்டு மாசம் முன்னாடி போயிருக்கக்கூடாது..."
போறச்சயும் அமுக்குனியா அனாதை மாதிரிப் பொசுக்குன்னு போயிட்டா. நான் தான் இனிமே தம்பியப் பாத்துக்கணும் என்று இனிமே இங்கேயே தங்கப் போறேன் என்று மறைமுகமாய் கூறிக் கொண்டிருந்தாள் பெரிய அத்தை."
"ஆ...ன்னா ஊ...ன்னா புருஷன் கிட்டக் கோவிச்சுக்கிட்டு பையத் தூக்கிட்டு, இங்க வந்து டேரா போடும் அத்தை. போகும் போது அரிசி, பருப்பு, பணம், துணிமணி என்று தேத்திக்கிட்டுப் போகும் அத்தை, எவ்வளவு சுலபமா அம்மாவைப் பக்தி விமர்சிக்கிறா... அனாதை மாதிரி செத்துக் கிடந்தாள்ன்னு, நான் இருப்பது கண்ணு தெரியலியா?"
அடுத்து சித்தப்பா...
"ம்...என்னமோப் போய் சேந்துட்டாங்க... தான் என்னவோ நிரந்தம் மாதிரியும், எல்லாத்தையும் விடாது அனுபவிக்கப் போறது மாதிரியும் ஓடி ஓடி சேத்து வைச்சாங்க... இப்ப என்ன ஆச்சு? எல்லாம் செல்லரிச்சுப் போச்சு,"என்று பெரிய அத்தையிடம் நன்கு விசிறி விட்டு அண்ணனைப் பார்க்கப் போனார்.
"என்ன குறை வச்சேண்டா உன் அண்ணிக்கு? சம்பாரிச்ச அத்தனையும் குடும்பத்துக்கே கொட்டி அழுதேன். கடங்காரி கொஞ்ச நாளா அடிக்கடி நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு இருந்தா. டாக்டர் கிட்டக் காட்டினதும், 'ஹார்ட் அட்டாக்' பெட்டுல சேர்க்கணும், ஓய்வா இருக்கணும், கடுமையா வேலை செய்யக்கூடாது, அதிர்ச்சி கூடாதுன்னார்..."
"காசு கறக்க டாக்டர் அப்படித்தான் சொல்வார்... அதுக்காக பெட்ல சேர்த்தா யார் பார்க்கறது. எனக்கு யார் சமைச்சுப் போடறது. அதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது வேலையைப் பாருண்னேன். வேலைக்குக் கூட ஆள் வச்சேன். ஆறு மாசம் ஆனதும் வேணாம்முன்னுட்டா. அவளும் நின்னுட்டா..."
அவளாகவா நின்னாள்?
அப்பாவின் வாரிசு வேலைக்காரியின் வயிற்றில் வளர ஆரம்பிச்சதும், அக்கம் பக்கம் புகைய ஆரம்பிச்சது. அவசரமாக அவளை அசலூருக்குக் கூட்டிப் போய் சுத்தம் பண்ணி வேற ஒருத்தனுக்குக் கட்டி வச்சது அப்பா தானே?
அதில் இருந்து தான் அம்மா ஒதுங்க ஆரம்பித்தாள். ஒடுங்கவும் ஆரம்பித்தாள். அப்பா, சித்தாப்பாவிடம் தொடர்கிறார்...
"நேத்து கூட என்னவோ உடம்பு முடியலன்னு சொல்லிக்கிட்டு, ஒரு ரசத்தை வைச்சு சாதம் போட்டா... இந்த சோத்த எவன் தின்பான்னு விசிறி அடிச்சுட்டு டவுனுக்குக் கிளம்பினேன். ராத்திரிக்காவது அடையும், அவியலும் செஞ்சுவை ஒண்ணும் ஆயிடாதுன்னு சொல்லிட்டுப் போனேன்."
"என் குணம் அறிஞ்சு, அடைக்கு அரைச்சு வச்சுட்டு அவியலுக்கு நறுக்கி வச்சு இருக்கா... நல்ல பசியோடு வந்தேன். அடையத் திங்க விடாம செத்து வச்சு இருக்கா பழிக்காரி. அம்மா போனதை விட அடை தின்னாதது தான் அவருக்குப் பெரிசாப்பட்டது. திட்டம் போட்டே இப்படிப் பொசுக்குன்னு போய் என்னைப் பழி ஆளாக்கிட்டா... நமக்குன்னு ஒரு கவுரவம் இருக்குல்ல. அதைக் காப்பாத்தணும். இதுவரைக்கும் யார் வீட்டிலும் நடக்காத வகையில் காரியத்தைச் செய்யணும்... என்று மூக்கைச் சிந்தியபடியே உறுமினார்."
தேவார கோஷ்டி, அதிர்வேட்டு, மதியத்துக்கு வடை பாயசத்தோடு சாப்பாடு, ஒண்ணுலயும் குறை வைக்கக் கூடாது என்று சத்தமாக உறுமியபடியே கட்டளையிட்டார். பத்தாயிரம் ரூபாய் தூக்கிப் போட்டார் சித்தாப்பாவிடம். மவுனமாக லிஸ்ட் போட ஆரம்பித்தார் சித்தப்பா.
"அக்கா, நீங்க இவ்வளவு சீக்கிரமாப் போயிட்டீங்களே... உள்ளே சிரித்து, வெளியே அழும் ஜானகி அக்கா. அப்பாவின் நண்பருடைய மனைவி. அம்மா ஊரில் இல்லாத நாட்கள் இருவருக்கும் திருநாளே. அதற்காகவே அம்மாவை அடிக்கடி ஊருக்குத் துரத்தும் அப்பா. நாள் கிழமைக்கு, ஊருக்கு போனாலும் தான் மட்டும் தங்கி விடுவார். நாலு நாள் கழிச்சு வா, உடனே வந்து நிக்காதே என்று மறைமுக மிரட்டல். மீறி வந்து விட்டால் அடி, உதை."
"இந்தக் கூத்து எல்லாம் அண்ணனுக்குத் தெரியாது. அவன் அப்பாவி. ஜானகி அக்காவை தன் பெண்ணைப் போலவே நேசித்தாள் அம்மா. பார்த்துப் பார்த்து காஃபியும், டிபனும் கொடுப்பாள். தனக்குப் பெண் இல்லாத குறையை, அவளை அலங்கரித்து நிறைவேற்றிக் கொள்வாள். அவள் குழந்தைகளையும், தன் பேரக் குழந்தைகள் மாதிரிக் கொஞ்சி மகிழ்வாள். அவள் ஜானகி அக்காவிடம் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை."
"தான் அழகு, அறிவு ஜீவி, கை நிறைய சம்பளம், பெரிய பதவி என்ற அகங்காரம் அப்பாவுக்கு. அம்மாவைத் தனக்கு சரியான. இணை இல்லை என்ற இறுமாப்புடனே விமர்சிப்பார். வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னே, எடுத்து எறிந்து பேசும் அலட்சியம். தன் அழகுக்கும், அறிவுக்கும், பதவிக்கும் அத்தனைப் பெண்களுமே தன் காலடியில் என்ற மமதை அவருள்."
இந்த விஷயத்தில் அவர் ஒரு சமதர்மவாதி. சாதி, இனம், உறவு என்ற பேதமில்லாமல் அவரது லீலைகளில் ஒரு சமத்துவம். அம்மாவை தன் மனைவியாகத் தன்னில் ஒரு பாதியாக என்றுமே நினைத்தது இல்லை. கொத்தடிமை என்ற நினைப்பு. எங்கும் எப்போதும் தனக்கே முதலிடம், தனக்குப் பின் தான் பிள்ளைகள் கூட என்ற இறுமாப்பு. சுருக்காக கூறினால், மணி அடித்தால் ஓடி வரும் பியூன் நிலையே அம்மாவுக்கு. அது போல் அழைப்பு மணியும் வீட்டில் உண்டு. யாராவது வந்தால் மணியடிப்பார் காரணமே இல்லாமல். அம்மா ஓடி வந்து, ஏன்? என்று கேட்க வேண்டும். அம்மாவுக்கு வந்தவர்கள் எதிரிலேயே காரணமே இல்லாமல் அர்ச்சனை செய்து அனுப்புவார்."
"அத்தனையும் விழுங்கிக் கொண்டாள் அம்மா. எங்களுக்கும், அப்பாவுக்கும் எந்தவித குறையும் வைக்கவில்லை. அண்ணன் ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். திருமணமும் ஆகிவிட்டது. நாளை அவனுக்கு முதல் 'கல்யாண நாள்' அதற்காகத் தான் இன்று வருவதாக நேற்றே போன் செய்து விட்டான்."
போன் மணி அடிக்கிறது. அண்ணாகத் தான் இருக்க வேண்டும்.
"அம்மா, உனக்காக சமையல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, மதிய சாப்பாட்டுக்கு வந்து விடு என்று சித்தப்பா கூறுவது காதில் விழுகிறது. எனக்குத் தொண்டை அடைக்கிறது. அண்ணன் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கப் போறான். மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்கிறேன்."
"எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி வளைய வரும் அம்மா அதிர்ச்சியில் உறைந்த அந்த நாள்... பக்கத்துத் தெருவில் ஒரு விசேஷம் என்று சென்ற அம்மா திரும்பி வரும் போது... ஜானகி அக்காவும், அப்பாவும்... ஜானகியுமா இப்படி? அம்மா உறைந்து போனாள். அதற்காக இருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. எதுவுமே நடக்காத மாதிரி இருவரும் இருந்தனர்."
"அதன் பிறகு ஜானகி அக்கா வீட்டுக்கு வருவது இல்லை. இரண்டு பேரும் பக்கத்து டவுனுக்குச் சென்று தேர் திருவிழா, சினிமா என்று ஜோடியாக சுற்றுவார்கள். இது அக்கம், பக்கத்தில் கசிந்து, நக்கலாகப் பேசிப் பார்வையால் துளைக்கும் போது உடைந்து போன அம்மா உறைந்தும் போய் விட்டாள். இத்தனைக்கும் ஜானகி அக்கா தூரத்து உறவும் கூட. அவள் புருஷனும் எதுவும் கண்டு கொள்வதில்லை. காசு வந்தால் போதும் என்ற நினைப்பா? அல்லது அம்மாவைப் போல் தன் இரண்டு குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகக் கண்டும், காணாதது போல் இருக்கிறாரா? ஆண்டவனுக்கே வெளிச்சம்."
"வர வர அம்மா மவுனியாகி விட்டாள். ஒற்றைச் சொல்லிலே பதில் கூறும் திறன் அவளுக்கு மட்டுமே எப்படிச் சாத்தியமாகிறது. அடிக்கடி என்னிடம் புலம்புவாள். உன்னுடன் வந்து விடுகிறேன் என்று அவள் அரற்றும் போது மவுனகாக வெறிப்பேன். எனக்கும் ஆசை தான். அப்புறம் அண்ணனின் நிலை. இது அம்மாவுக்கும் புரியும். உன்
அண்ணனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு உன்னுடன் வந்து விடுகிறேன். இனிமேலும் உன் அப்பாவின் அட்டூழியத்தைப் பொறுக்கும் சக்தியில்லை என்று புலம்புவாள்."
எதிர்வீட்டு அக்கா நேற்று பால் கொடுக்க வரும் போதே அம்மாவுக்குக் கடுமையான நெஞ்சு வலி. பல்லைக் கடித்துக் கொண்டு எதுவுமே காட்டிக் கொள்ளாமல் அவளைப் போக்குக் காட்டி அனுப்பி விட்டாள் அம்மா. வலின்னு சொன்னா டாக்டரைக் கூப்பிட்டுப் பிழைக்க வச்சுட்டா என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு. நீ பார்த்துக்கிட்டு சும்மா இருந்தியான்னு கேட்கிறீங்களா?"
"அம்மா ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான். அதை யாராலும் மாற்ற முடியாது. திட்டவட்டமாகத் துல்லியமாக வியூகம் அமைப்பாள். நாளைக்கு அண்ணன் வந்ததும் அவன் கையால் போய்ச் சேரணும் என்று ஆசை. புருஷன் கையாலப் போய்ச் சேரக் கூடாது என்பது அவளுடைய இறுதி ஆசை".
"அண்ணன் வந்ததும், அவனைக் கேட்கணும். வெளிநாடு போவாதேன்னு அம்மா சொன்னாளேக் கேட்டியாண்ணு கதறணும். நீ இருந்தா இப்படி அம்மா அம்போன்னு போவாளான்னு அவன் சட்டையப் புடிச்சு உலுக்கணும்னு நினைக்கிறேன். இதோ அண்ணன் வந்து விட்டான் அண்ணியுடன். அவனால இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை"..
இரண்டு பிள்ளையப் பெத்தும் அம்மா இப்படி அம்போன்னு போயிட்டாங்களே என்று என் மீது சாய்ந்து அழுகிறான். நான் வழக்கம் போல் மவுனிக்கிறேன்.
"பாவம் அந்தம்மா மூத்த புள்ளையும் அமெரிக்கா போயிட்டு, சின்ன புள்ளையும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விஷக் காய்ச்சலில் செத்துப் போயிட்டு, தம்பி போட்டோவைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு அழுவதே அது தான் பெரியபுள்ள. யாரோ விளக்குகிறார்கள்."
"ம்... அந்தம்மா சின்ன புள்ளக்கிட்டப் போயிடணும்னு அடிக்கடி புலம்பும். நேத்து நல்லா நடமாடின மவராசி இதோ புறப்பட்டு விட்டாள். குரல்கள் கிசுகிசுக்கின்றன. ஒரே கூக்குரல்".
அம்மா புறப்பட்டு விட்டா பூவும், பொட்டுமாய், மாலையும், கழுத்துமாய். என்னிருப்பிடம் தேடி இதோ வந்து கொண்டு இருக்கிறாள். அம்மா... அம்மா... குரல் எழும்பாமல் விசிக்கிறேன்...