கவிஞர்களின் பார்வையில் காந்தி !
மாங்குடிபாலா
காந்தி
காந்தி என்று சொல்லிட -ஒரு
கந்தம் நம்மை இழுக்குது
காந்தம் நெஞ்சில் நிலவுது
சாத்வீகம் ஆனது உனது புரட்சி !
புரட்சி ஓன்று புரிந்திட்டாய்
கத்தியின்றி ரத்தமின்றி செய்த
சத்திய சோதனைப் புரட்சி -அது
சத்தியாகிரகம் வென்ற நிகழ்ச்சி !
நிகழ்ச்சி முடிந்த அரங்கினில்
நீண்டதிரை விழுவது போல்
நீயும் நித்திரை கூடிவிட்டாய்
நீண்ட சகாப்தம் படைத்திட்டாய் !
படைத்திட்ட நீ எம்மை
பதை பதைக்க வைத்து
பகைவனின் குண்டை மார்பில் ஏற்று
பகலவனே நீயும் மறைதிட்டாய் !
மறைந்திட்ட போதிலும்
மறையுமோ உன் புகழ்?என்றும்
மனசுக்குள் நின்றிட்டாய்
மனிதருள் தெய்வமாய்!
தெய்வமாய் நீ ஆன போதிலும்
நீள் உறக்கம் கண்ட போதிலும்
நீங்காத நினைவுகளாய் - என்றும்
நீளும் உன் புகழ்!