கவிஞர்களின் பார்வையில் நேரு !
மாங்குடிபாலா
அன்னை தெரசா
உன்னைப் போல் பெருசா
சாதித்தவர் யாருமில்லை-யர்ருக்கும் அது
சாத்யம் இல்லை!
நோயாளிகளை நேசித்தாய் உன்னை
நோபல் பெற்ற உன்
நோ-பல் பொக்கைவாய் புன்சிரிப்பு
அன்னை மேரியின் ஆசிர்வதிப்பு!
அயர்லாந்தில் கண்ணியாஸ்திரி ஆன -நீ
அயராது சேவை செய்து
ஆக்கிரமித்தாய் எம் இதயத்தை. இதயத்தை
ஆக்கிரமித்த உன்னை காலன்
ஆக்கிரமித்தது அக்கிரமம்
மண்ணுலகில் உந்தன் பணிகள் முடிந்ததென
விண்ணுலகில் சேவை புரிய
விரைந்தாயோ நீயும்தான்
பேருக்கு ஆசைப்படாத நீ -பல
பேருக்கு ஆதரவுக்கரம் நீட்டினாய் ஊருக்கு உழைத்து
உலகுக்கே அன்னையாய் உயர்ந்த - நீ
கன்னி மேரியா ?
கருணை மேரியா?