சைவம் என்றால் என்ன ?
சைவம் என்றால் அசைவற்ற என்று ஒரு பொருள் உண்டு என்று மறைந்த வாரியார் சுவாமிகள் கூறி இருக்கிறார்கள்.
அதன் காரணமே அசைந்து இடம் பெயராத உணவுகளுக்கு சைவம் என்று பெயர் ,காய்கறி ,கீரை போன்றவை.
தானாகவே அசைந்து இடம் மாறும் தன்மை கொண்ட உணவுகள் அனைத்தும் அசைவம்.மீன் ,ஆடு,கோழி ,போன்றவை.
எனவே அசையாது நிலைத்து நீடு நிற்பவை சைவம் என்று கூறி வைத்தனர் நம்மவர்.இறைவன் அசைவற்று நிலைத்து நிற்பவன்.அனைத்தையும் அசைவிப்பவன் அவனே அதாவது டைரக்டர் .
அந்த டைரக்டரை இறைவன் என்றனர் மெய் ஞானிகள் இயற்கை என்றனர் விஞ்ஞானிகள்.
அஞ்ஞானிகளான நாம் அந்த டைரக்டருக்கு பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம் .பல் வேறு சமயங்களின் மூலம் அவனைக் காண முயல்கின்றோம் .
நதிகள் பிறக்குமிடம் பலவனாலும் எல்லா நதிகளும் கலக்குமிடம் கடல் ஆகும்.அதுபோலவே சமயங்கள் பல அனாலும் எல்லா சமயங்களும் சங்கமிக்கும் இடம் இறை -இயற்க்கை .
அசைவற்ற இறைவன் எப்படி எல்லாவற்றையும் அசைய வைக்கிறான் என்பதை A.P ,நாகராஜன் அவர்கள் தனது திருவிளையாடல் படத்தில் அற்புதமாக விளக்கி இருப்பர் ஒரு பாடல் காட்சியில்
.
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்
அறிவாய் மனிதா!
ஆம்,அசைவற்ற அவனே அனைத்தையும் அசைத்து வைப்பவன் .அவனுடைய இ யக்கதால் தான் அகிலமே இயங்குகிறது.அதனை சக்தி படைத்தவன் இறைவன்.அந்த சக்தியை காட்டமுடியாது உணரமட்டுமே முடியும்.அதை இனம் கண்டு உணரும் முயற்சியே நமது தேடல்கள்.
குடும்ப தலைவன் ஒருவன்தான்.அவனுக்கு கணவன் -தகப்பன் -மகன்-சகோதரன்-பேரன் என்று பலபெயர்கள்.அதாவது ஒருவனுக்கு பல உறவுப் பெயர்கள் அது போல ஒரே இறைவனுக்குப் பலபெயர்கள்.சரி அவனை எப்படி தேடுவது?
அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தேடினால் கிடைப்பான்? எதை விளக்க ஒரு சுவையான கதை.முனிவர் ஒருவர் காட்டில் நெடுநாட்கள் தவமிருந்தார் .நரசிம்மரை காண உடல் மெலிந்து நடை தளர்ந்து ஆண்டுகள் ஓடின .அவனை காண முடியவில்லை.வேடன் ஒருவன் இ வரை வெகு நாட்களாக கவனித்து கொண்டிருந்தான்.ஏன் சாமி உனக்கு என்ன கஷ்டம் ?சிங்கமுகமும் மனித உடலும் உள்ள ஒருவரை காண ஆசை அது தன என் கஷ்டம்!கவலை படாதே சாமி எந்த காட்டில் எனக்கு தெரியாத இடமே இல்லை .மாலைக்குள் அந்த மிருகத்தை உன் முன்னே கட்டி இ ழுத்து வருகிறேன்.
முனிவர் சிறித்து கொள்கிறார்.
என் கண்ணுக்குத் தெரியாதவன் இந்த வேடன் கண்ணில் அகபடுவானா?தேடி திரியட்டும். மாலையும் வந்தது மாதவன் வரவில்லை.வேடன் சூளுரைக்கிறான் முனிவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி அவருடைய கஷ்டத்தை போக்கணும்.உடனே வா இல்லாடி இந்த மலை உச்சியில் இருந்து விழுந்து சாவேன்.
அசைக்கமுடியாத இறைவன் அசைந்து அசைந்து அசைந்து ஓடிவருகிறான்.அவனைக் காடு கொடியினால் கட்டி இழுத்து வந்து முனிவர் முன்னே நிறுத்துகிறான்.முனிவர் தன தவறு உணர்கிறான் .கருணையே வடிவானக் கடவுளை தன கருணையால்கட்டிபோட்டுவிட்டான் வேடன்.அசைக்கமுடியதை அசைக்கமுடியாத நம்பிக்கையின் மூலம் வேடன் கண்டுவிட்டான்.
இந்த (அசைக்க முடியாத) சைவநம்பிக்கை இறை தேடலுக்கும் வேண்டும். இரை தேடலுக்கும் வேண்டும்.வாங்க எல்லாத்தையும் அசைச்சுப் பார்த்துடுவோம்.
மாங்குடி பாலா
மனம்
இதன் ஆற்றல் அளப்பரியது .எனவேதான் 'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கவேண்டம்' என்று பெரியவர்கள் கூறினார்கள். மேலும் ' எண்ணம் போல் வாழ்வு ' என்றும் சொல்லி வைத்தார்கள்.
நமது பாட்டி தாத்தக்கள் கூறுவார்கள்.'வாஸ்து' புருஷன் என்ற தேவதை நிலைப்படியில் எப்போதும் உறங்கிக்கொண்டே இருக்கும்.நாம் எதை எண்ணுகிறோமோ, சொல்கிறோமோ அப்படியே ஆகுக எண்டு ஆசிர்வதிக்கும்.எனவே பகைவரை கூட நல்லயிரு என்று சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் .
இதனையே இன்றைய உளவியல் நிபுணர்களும் ஆமோதித்தார்கள். நமது ஆழ்மனதிற்கு சிந்திக்கும் திறன் கிடையாது.நமது கட்டளையை நிறைவேற்றும் திறன் மட்டுமே கொண்டது.எனவே ஆக்கபூர்வமான சிந்தனைகளில் மனதை நிரப்புங்கள்,வெற்றி நிச்சயம் என்கிறார்கள். இதனை கடை பிடிக்க மறந்தால்தான் நாட்டிலும் ,வீட்டிலும் பல குழப்பங்கள்.
ஆண்டு முப்பது கோடி ஜனங்களில் முப்பதாயிரம் தவறுகள்.இன்று நூறு கோடி ஜனங்களில் தவறுகள் லட்சங்கள் என் ஆகிவிட்டது. இதை ஊதி ஊதி பெரிதுபடுத்தும் ஊடகங்கள்.இதை பார்த்து 'வெள்ளைக்காரன் காலத்தில் நாடு எப்படி இருந்தது?'என்று கூசாமல் கமண்ட் அடித்தல் நாடு எப்படி முன்னேறும்.
பகவா ன் கிர்ஷ்ணன் அன்றே கீதையில் சொல்லி வைத்தான்.'எதுவாக நினைக்கிறயோ அதுவாகவே நீ ஆவாய் என' எதை வள்ளுவனும் வழிமொழிகிறான்.
'எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பேரின்'
எனவே இனியாவது நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.நாடும் வீடும் நலம் பெரும்.