மாங்குடி பாலாவின் படைப்புகள்
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே வணக்கம்!
உங்கள் பேராதரவு கண்டு எனக்கு சற்றே மயக்கம்!
அதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கலக்கம்!
அதனால் தான் இந்த தயக்கம்!
தயக்கம் நீங்கி எழுதவே இத்தனை நாள் சுணக்கம்!
பாரத நாடு பழம் பெரும் நாடு, நாம் அதன் புதல்வர் எனும் போது நமக்குள் ஒரு சக்தி பிறக்குது நம்மை அறியாமலே ஒரு சிலிர்ப்பு நம்முள்.
நம் முன்னோர் திறம் வியந்து அயல் நாட்டினர் வியக்கின்றனர். நமது ஞானிகளும் விஞ்ஞானிகளே என்று பாராட்டுகின்றனர். ஆனால் நாம நமது பழைய சம்பிரதாயங்களை மூடப்பழக்கங்கள் என்று உதவி முன்னேறி! விட்டோம் என்று கூறிக் கொள்கிறோம்.
கால மாற்றத்தால் சில கண் மூடத்தனங்களும் நம்முடன் அட்டையாய் ஒட்டிக் கொண்டது நிஜமே. ஆனாலும் களை எடுக்கிறேன் என்று பயிரையேக் கிள்ளி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
ஏன் இந்த அவலம்?
ஏன் என்ற கேள்வி கேட்க மறந்து விட்டோம் நாம். எதற்கு என்று அவர்கள் விளக்கவும் இல்லை. எனவேதான் இந்த குழப்பம் இதனை விளக்க ஒரு சுவாரஸ்யமான உதாரணம்:
குரு ஒருவர் சீடர்களுக்கு யாகம் நடத்துவது பற்றி விரிவாகப் பாடம் நடத்தினார். யாகத்தில் வார்க்கப்படும் நெய்யின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆசிரமப்பூனை நெய் பாத்திரத்தை வட்டமிட்டது. எனவே யாகம் ஆரம்பிக்கும் முன் பூனையை ஒரு தூணில் கட்டி போட்டுப் பின்னரே குரு யாகம் நடந்துவது பற்றி செயல் விளக்கம் கூறி வந்தார். ஒரு மாதம் பாடம் தொடர்ந்தது. பாடம் முடிந்ததும் ஒரு மாணவனிடம் யாகம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் குரு பூனையைப் பிடித்து எதிரில் இருக்கும் தூணில் கட்டி அதன்பின் பூனையின் எதிரே யாகம் தொடங்க வேண்டும்! இது எப்படி?
அந்த மாணவனின் நிலையே இன்று நம்மில் பலருக்கு காரணம் ஏன் என்ற கேள்வியை நாம் கேட்க மறந்த தன் விளைவு. எதற்கு என்று அவர்களும் விளக்காமல் பூடகமாகவே சொல்லி வைத்ததும் ஒரு தவறு.
எனவே நமது பழைய சம்பிரதாயங்கள், சடங்குகள் பற்றி ஏன்? எதற்கு என்று வரும் வாரங்களில் சற்றே அலசுவோம். பொறுமையுடன் காத்திருங்கள். ஏன் காத்திருப்பு என்று கேட்கிறீர்களா? என் பூனைத் தூக்கம் நீங்கி என்னைப் புதுப்பித்துக் கொள்ளவே இந்த அவகாசம்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-1
எந்த விஷயத்தையும் அதிகாலையில் தொடங்குவது அதிக நம்மை பயக்கும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்து இருக்கிறார்கள். அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்வார்கள். திருமணம் - புதுமனைபுகுவிழா இரண்டும் அதிகாலையில் செய்வது மிகவும் விசேஷம். எனவே நமது அலசலையும் அதிகாலையில் இருந்தே ஆரம்பிபோமா?
அப்படி என்ன சிறப்பு அதிகாலைக்கு?
ஓஸோன் நிரம்பிய தூயகாற்று, புறச் சலனங்கள் அதிகம் கிடையாது. எனவே எதிலும் இயல்பாக ஒன்றும் ஆற்றல் அதிகரிக்கிறது. எனவேதான் பாரதியும் காலை எழுந்ததும் படிப்பு என்று சொல்லிவைத்தான். பின்னர் யோக - உடற்பயிற்சி - நடைபயிற்சி - ஆலயவழிபாடு இத்யாதி - இத்யாதி.
ஆலயதரிசனத்திலும் உறைக்காலதரினம் என்ற அதிகாலை தரிசனம் வெகுசிறப்பு. தில்லையில் இந்த தரிசனம் வெகுஜனக் ஈர்ப்பு, இது ஆண்டுமுழுவதும். நடக்கும் அற்புத தரிசனம்.
ஆண்டுமுழுவதும் இல்லாவிட்டாலும் ஒருமாதம் மட்டுமானது அதிகாலை தரிசனம் செய்வது அவசியம். அது எந்த மாதம்? மார்கழிக்கும் மட்டுமே இந்த சிறப்பு. எனவேதான் அந்த மாதவன் சொல்லிவைத்தான் மாதங்களில் நான் மார்கழி என்று. இதையே சற்று மாற்றி 'மாதங்களில் அவள் மார்கழி' என்று கவிஞர் வர்ணிக்கிறார்.
மார்கழிப் பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவே மார்கழி பஜனை. திருப்பாவை - திருவெம்பாவை பாராயணம், பின்னர் மிளகுப் பொங்கல் - சுண்டல் போன்ற பனி எதிர்ப்பு உணவுகள். இந்த பனிக்காலம் பற்றி ஒரு நயமான விளக்கம்.
மன்னர் ஒருவன் அவையில் இருபுலவர்கள், அவர்களிடம் மன்னன் ஒரு கேள்வி கேட்கிறான். பனிக்காலம் இனிதா? கொடிதா?
ஒருவர் இனிது என்கிறார் - மற்றவர் கொடிது என்கிறார். இதில் எது சரியான விடை? அடுத்தவாரம் சொல்கிறேன்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே வணக்கம்!
உங்கள் பேராதரவு கண்டு எனக்கு சற்றே மயக்கம்!
அதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கலக்கம்!
அதனால் தான் இந்த தயக்கம்!
தயக்கம் நீங்கி எழுதவே இத்தனை நாள் சுணக்கம்!
பாரத நாடு பழம் பெரும் நாடு, நாம் அதன் புதல்வர் எனும் போது நமக்குள் ஒரு சக்தி பிறக்குது நம்மை அறியாமலே ஒரு சிலிர்ப்பு நம்முள்.
நம் முன்னோர் திறம் வியந்து அயல் நாட்டினர் வியக்கின்றனர். நமது ஞானிகளும் விஞ்ஞானிகளே என்று பாராட்டுகின்றனர். ஆனால் நாம நமது பழைய சம்பிரதாயங்களை மூடப்பழக்கங்கள் என்று உதவி முன்னேறி! விட்டோம் என்று கூறிக் கொள்கிறோம்.
கால மாற்றத்தால் சில கண் மூடத்தனங்களும் நம்முடன் அட்டையாய் ஒட்டிக் கொண்டது நிஜமே. ஆனாலும் களை எடுக்கிறேன் என்று பயிரையேக் கிள்ளி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
ஏன் இந்த அவலம்?
ஏன் என்ற கேள்வி கேட்க மறந்து விட்டோம் நாம். எதற்கு என்று அவர்கள் விளக்கவும் இல்லை. எனவேதான் இந்த குழப்பம் இதனை விளக்க ஒரு சுவாரஸ்யமான உதாரணம்:
குரு ஒருவர் சீடர்களுக்கு யாகம் நடத்துவது பற்றி விரிவாகப் பாடம் நடத்தினார். யாகத்தில் வார்க்கப்படும் நெய்யின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஆசிரமப்பூனை நெய் பாத்திரத்தை வட்டமிட்டது. எனவே யாகம் ஆரம்பிக்கும் முன் பூனையை ஒரு தூணில் கட்டி போட்டுப் பின்னரே குரு யாகம் நடந்துவது பற்றி செயல் விளக்கம் கூறி வந்தார். ஒரு மாதம் பாடம் தொடர்ந்தது. பாடம் முடிந்ததும் ஒரு மாணவனிடம் யாகம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் குரு பூனையைப் பிடித்து எதிரில் இருக்கும் தூணில் கட்டி அதன்பின் பூனையின் எதிரே யாகம் தொடங்க வேண்டும்! இது எப்படி?
அந்த மாணவனின் நிலையே இன்று நம்மில் பலருக்கு காரணம் ஏன் என்ற கேள்வியை நாம் கேட்க மறந்த தன் விளைவு. எதற்கு என்று அவர்களும் விளக்காமல் பூடகமாகவே சொல்லி வைத்ததும் ஒரு தவறு.
எனவே நமது பழைய சம்பிரதாயங்கள், சடங்குகள் பற்றி ஏன்? எதற்கு என்று வரும் வாரங்களில் சற்றே அலசுவோம். பொறுமையுடன் காத்திருங்கள். ஏன் காத்திருப்பு என்று கேட்கிறீர்களா? என் பூனைத் தூக்கம் நீங்கி என்னைப் புதுப்பித்துக் கொள்ளவே இந்த அவகாசம்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-1
எந்த விஷயத்தையும் அதிகாலையில் தொடங்குவது அதிக நம்மை பயக்கும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்து இருக்கிறார்கள். அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்வார்கள். திருமணம் - புதுமனைபுகுவிழா இரண்டும் அதிகாலையில் செய்வது மிகவும் விசேஷம். எனவே நமது அலசலையும் அதிகாலையில் இருந்தே ஆரம்பிபோமா?
அப்படி என்ன சிறப்பு அதிகாலைக்கு?
ஓஸோன் நிரம்பிய தூயகாற்று, புறச் சலனங்கள் அதிகம் கிடையாது. எனவே எதிலும் இயல்பாக ஒன்றும் ஆற்றல் அதிகரிக்கிறது. எனவேதான் பாரதியும் காலை எழுந்ததும் படிப்பு என்று சொல்லிவைத்தான். பின்னர் யோக - உடற்பயிற்சி - நடைபயிற்சி - ஆலயவழிபாடு இத்யாதி - இத்யாதி.
ஆலயதரிசனத்திலும் உறைக்காலதரினம் என்ற அதிகாலை தரிசனம் வெகுசிறப்பு. தில்லையில் இந்த தரிசனம் வெகுஜனக் ஈர்ப்பு, இது ஆண்டுமுழுவதும். நடக்கும் அற்புத தரிசனம்.
ஆண்டுமுழுவதும் இல்லாவிட்டாலும் ஒருமாதம் மட்டுமானது அதிகாலை தரிசனம் செய்வது அவசியம். அது எந்த மாதம்? மார்கழிக்கும் மட்டுமே இந்த சிறப்பு. எனவேதான் அந்த மாதவன் சொல்லிவைத்தான் மாதங்களில் நான் மார்கழி என்று. இதையே சற்று மாற்றி 'மாதங்களில் அவள் மார்கழி' என்று கவிஞர் வர்ணிக்கிறார்.
மார்கழிப் பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவே மார்கழி பஜனை. திருப்பாவை - திருவெம்பாவை பாராயணம், பின்னர் மிளகுப் பொங்கல் - சுண்டல் போன்ற பனி எதிர்ப்பு உணவுகள். இந்த பனிக்காலம் பற்றி ஒரு நயமான விளக்கம்.
மன்னர் ஒருவன் அவையில் இருபுலவர்கள், அவர்களிடம் மன்னன் ஒரு கேள்வி கேட்கிறான். பனிக்காலம் இனிதா? கொடிதா?
ஒருவர் இனிது என்கிறார் - மற்றவர் கொடிது என்கிறார். இதில் எது சரியான விடை? அடுத்தவாரம் சொல்கிறேன்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 2
என்ன யோசிச்சு முடிச்சுட்டீங்களா? பனிக்காலம் இனிதா என்னமுட்டாள்-தனம் இதுதானே நம்ம முடிவு?
இதையேதான் மன்னனும் கூறினான். தலைமைப் புலவர் சிரித்படி விளக்குகிறார். இல்லைமன்னா! பனிக்காலம் இனிது தான். அதாவது பனிக்கு ஆலம் எனும் விஷம் இனிது. அதாவது ஆலகால விஷத்தையும் விட பனி கொடிது என்று பொருள் என்கிறார்.
ஹி...ஹி...
அரசு எவ்வழி மக்கள் அவ்வழி என்பது தானே மரபு. அதனால் தான் மன்னனின் முடிவையே நாமும் சொன்னோம். என்ன? இவ்வளவு ஆழமா இறங்கி அலச ஆரம்பிச்சால் தமிழ் நயம் எனும் சூழலில் மாட்டிப்போமா?
அப்ப கொஞ்சம் மேலோட்டமாகவே அலசுவோம்!
மார்கழிப் பனியில் அதிகாலையில் எழுந்து குளித்து, முழுகிக் குனிந்து நிமிர்ந்து கோலம் போடும்போது அதுவே பெரிய உடற்பயிற்சி ஆகிறது. நம்பிக்கை இல்லைன்னா 'வேதம் புதிது' திரைப்படத்தில் அமலா கோலம் போடும் அழகைப் பாருங்கள் நம்பிக்கை வரும். உள்ளபடியே "பாரதிராஜர் உன்னதமான கலைஞன் தான். விரல்களை ஊன்றி குதிகாலை உயர்த்தி நெற்றியில் விழும் முடியை புறங்கையால் ஒதுக்கி அடடா அற்புதம். அந்தப் படத்தைப் பார்த்ததும் நம்ம பசங்க கோல (மயில்களின்) ரசிகர்கள் ஆகிவிட்டாங்க தெரியுமா?
உடற்பயிற்சியோடு உள்ளத்திற்கும் கோலம் போடுவதால் பயிற்சி கிடைக்கிறது. எத்தனை புள்ளி எத்தனை வரிசை நேர்புள்ளியா, சந்து புள்ளியா,சைடு புள்ளி எத்தனை என்பது மனதில் பதிவாகி விடுகிறது. இது படக்காட்சியாக மாறி தரையில் கோலமாகப்படர்கிறது. இதன் மூலம் பெண்களின் மெமரிபவர் கூடுகிறது. (கோல புத்தகம் கையில் வைத்துப் போடுவர்கள் யோசிப்பார்களாக).
மேலும் அரிசி மாவினால் இடும் கோலம் பல ஜீவராசிகளுக்கு உணவாகிறது. கல்லுமாவில் கோலம் போடுபவர்கள் இது பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாக எறும்புகளுக்குக்கு இது வரப்பிரசாதம். எனவேதான் "எறும்பு தின்றால் கண் தெரியும்" என்றார்கள். அவ்வளவு புண்ணியம் பார்வைக் குறைவு ஏற்படாது என்ன அர்த்தத்தில் கூறியது இன்று அனர்த்தம் ஆகிவிட்டது. எறும்பு விழந்த காப்பியை என்ன சொல்லிக் குடுக்குறாங்க தெரியுமா? எறும்பு தின்றால் கண் தெரியும் அதனால அப்புடியே சாப்புடுங்க!
தப்பித் தவறி புள்ளி பிசகி விட்டால் அதனைக்கண்டு பிடித்து சரிசெய்த பின் ஏற்படும் "ரிலாக்ஸ்" இருக்கே அடடா அற்புதம், அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும், அதன் சுவை.
மனசுக்கு உற்சாகம் தர செயற்கை டென்ஷன் ஏற்படுத்தும், ஆறு வித்தியாயங்கள், குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்றவை நலன் பயக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த செயற்கை "டென்ஷன்" மூலம் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உண்மையான 'ரிஸ்க்' குகளை லாவகமாகக் கையாளும் திறன் அதிகரிக்கிறது என்கின்றனர். இதனை அன்றே செய்தனர் நம் பெண்கள் கோலமிடுவதன் மூலம் எனவே தான் பழைய தலைமுறைப் பெண்களுக்கு "டென்ஷன்" என்ற வார்த்தையே தெரியாமல் போயிற்று!
அத்தோடு கோலத்தில் ஏற்படும் சிக்கலைக் கண்டுபிடித்து சீர்செய்யும் பழக்கத்தின் காரணமாகக் பிற்காலத்தில் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் சரிசெய்யும் திறனும் அதிகரிக்கிறது.
எதோ என்னால் முடிஞ்ச பணி,
பனிக்காலம் இனிதா? கொடிதா? என்ற கேள்வியை முன் வைத்து உங்களுக்கு எல்லாம் ஒரு செயற்கை டென்ஷனை ஏற்படுத்தி ரிலாக்ஸ் செய்துவிட்டேன் தானே?
டென்ஷன் அடுத்தவாரமும் தொடரும்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் -3
கோலம் போட்டா பெண்களுக்கு மெமரிபவர் கூடும்னு எழுதுனதும் பசங்ககிட்ட இருந்து ஏகப்பட்ட போன் கால்கள். எங்களுக்கு மெமரிபவர் கூட என்ன செய்யணும் பாட்டி என்று கேட்டு கோலத்தாலயே தான் உங்கள் மெமரிபவரும் கூடும். எப்படின்னு கேட்கிறீங்களா?
இப்படித்தான் ஒரு இளைஞனுக்கு மெமரி பவரே கிடையாது. தமிழ் பாடல்களை நெட்ரு பண்ணித்தானே ஆகனும்! தமிழாசிரியர் இரண்டடி குறளை இருபது முறை நடத்திப் பார்த்துட்டார். அந்தப் பையனுக்கு திரும்ப சொல்லமுடியல இத்தனைக்கும் அது இன்பத்துப்பால் குறள்! ஆசிரியர் நீ சுத்த வேஸ்ட் நாலும் மூன்று ஏழு வார்த்தையைக் கூட மனப்பாடம் செய்யாத நீ எல்லாம் ஏன் படிக்கவர்றேன்னு வாரு வாருன்னு வாரிவிட்டார் வகுப்பே சிரிக்க அவன் நிலை குலைந்தான்.
மறுநாள் அதிகாலை எழுந்து உடுப்போட ஆரம்பித்தான். ஊஹீம் ஞாபகம் வருவேனா என்றது. வெறுத்துப்போய் பால்கனிப்பக்கம் எட்டிப் பார்க்கிறான். அப்படியே குதித்து விடுவோமா என்று யோசிக்கிறான்.
அப்ப எதிர் வீட்டுப்பெண் அழகான மயில் கோலம் போட்டு கிட்டு இருக்கா. அவள் கைவண்ணத்தில் வண்ணத் தோகையுடன் ஒயிலாக அமர்ந்து இருந்த மயில் கோலம்.
இவன் தொண்டையில் இருந்து முட்டி மோதி வெளி வருகிறது குறள். சரஸ்வதி சபதத்தில் ஊமை சிவாஜிக்குப் பேச்சு வந்து தட்டுத்தடுமாறி அம்மா அப்பா என்று ஆரம்பித்து மணிப்பிரவாளமாகப் பாடுவாரே அப்படி!
"அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாறுமென் நெஞ்சு".
இப்படியே கோலம் பற்றி தினமும் சர்வே எடுங்கள். கள ஆய்வு செய்யுங்கள் உங்கள் மெமரிபவரும் கூடும். அப்புறம் நீங்களும் 'பவர் ஸ்டார்' தான். ஹி ஹி இது எப்படி?! (பாட்டி சொல்லைத் தட்டாதே)
கோலம் போடும் முன் பசுஞ்சாணம் தெளிப்பது ஏன்? அது ஒரு பவர் ஃபுல் கிருமி நாசினி. இன்றைய டெட்டால் - பினாயில் போன்றவற்றுக்கு இணையான காசு செலவு இல்லாத கிருமி நாசினி. வாசலில் அதை மிதித்து வரும் போது வெளி உலகக் கிருமிகள் அங்கேயே ஒழிக்கப் படுகின்றன கொல்லைப் புற வாசலுக்கும் சாணம் தெளிப்பது உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்னே 'போபால்' என்னும் வட இந்திய நகரத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்னும் எச்சமாக தேங்கி நின்று பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நகரே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டது. வீதிக்கு பீதியுடன் ஓடி வந்த மக்கள் வெள்ளம். பல்வேறு உபாதைகளுக்கு ஆளாயிற்று.
ஆனால் ஒரு வீட்டில் மட்டும் இதன் தாக்கம் ஏதுமில்லை இந்த அசம்பாவிதத்தை உணரவுமில்லை. விடிந்த பின் தான் அவர்களுக்கு விபரமே தெரிய வந்தது. அவர்களுக்கு மட்டும் ஏன் பாதிப்பு இல்லை என ஆய்வு செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள் களம் இறங்கினர். அவர்கள் செய்த ஆய்வுகளின் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வீட்டில் அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அந்த வீட்டில் மட்டும் விஷவாயுவின் தாக்கம் இல்லை.
'அக்னி ஹோத்ரம்' என்பது பசுஞ்சாணத்தின் வரட்டியில் நெய் விட்டு தீமூட்டி சிறிது பச்சரியைத் தூவி செய்யும் ஒரு ஹோமம். அந்தப்புகை நச்சுப் புகையில் இருந்து சாத்து இருக்கிறது. நமக்கு மெய் சிலிர்க்கிறது. சரி எல்லோராலும் அக்னி ஹோத்ரம் செய்ய முடியுமா என்பது நமது கேள்வி.
பழைய நாட்களில் மார்கழி மாதம் கோலத்தின் மீது பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பரங்கிப் பூ சூட்டி அழகுபடுத்துவார்கள் மாலையில் அந்தப் பிள்ளையாரை பரங்கிப் பூவின் மீது வரட்டியாகத் தட்டி சேர்த்து வைப்பார்கள். அந்த வரட்டியை பொங்கலன்று அடுப்பெரிக்க உபயோகிப்பார்கள். பொங்கல் பானையை இறக்கி வைக்கும் போது நெய் கலந்த பொங்கலில் ஒரு கரண்டி அடுப்பில் போடுவார்கள். இது கட்டாயம். இது வேதம் படிக்காதவர்களும் கடைப்பிடித்த எளிமையான அக்னி ஹோத்ரம்!
அத்தோடு அன்று அடுப்பெரிக்க வரட்டியே பயன்பட்டது. தினமும் சமையல் முடிந்ததும் அக்னி பகவானுக்கு அர்ப்பணம் என்று சிறிது சாதத்தை அடுப்பில் இடுவதும் வழக்கமாக இருந்தது. இந்தப்புகை சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து மக்களைக் தாக்கும் கவசமாக அமைந்தது. மீதியை அடுத்தவாரம் அலசுவோம்!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-4
இப்படிப்பட்ட சாணத்தைத் தரும் பசுவைக் காமதேனு என்று அழைத்தார்கள். அதன் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொரு தேவதை குடியிருப்பதாக சொல்லிவைத்தார்கள்.
பசுவின் சிறப்பை விளக்க ஒரு சுவையானகதை;
இருமாணவர்கள் கல்விக் கேள்விகளில் சம அளவில் சிறந்து விளங்கினர். குருவுக்கு யாரை முதல் மாணவனாகத் தேர்வு செய்வது என்று குழப்பம் அந்த நாளிலும் "டை பிரேக்கர்!"
எனவே புதிதாக ஒரு டெஸ்ட் வைக்கிறார். யார் முதலில் இரண்டு பக்கமும் தலை உள்ள பசுவைக் கண்டு வணங்கி வருகிறார்களோ அவரே சிறந்த மாணவன் என்று அறிவிக்கிறார்.
ஒரு மாணவன் இரண்டு பக்கமும் பசுவிற்குத் தலை எப்படி இருக்கும் என்று ஒதுங்கிவிடுகிறான். ஆனால் இன்னொரு மாணவனோ பசுக் கூட்டங்களில் தனது தேடுதலைத் தொடர்கிறான். அவன் தேடியது கிடைத்து விட்டது! இரண்டு புறமும் தலை உள்ளப் பசுவைக் கண்டு விட்டான்! சுற்றி வந்து வணங்கினான். குருவிடம் கண்டகாட்சி பற்றிக் கூறி சிறந்த மாணவனாகத் தேர்வாகிறான். ஒதுங்கிய மாணவன் இது எப்படி சாத்தியம் என்று வினவ குரு விபரம் கூறுகிறார்.
பசு கன்று ஈனும் போது இருபுறமும் தலை இருக்கும் அதாவது பின்புறம் கன்றின் தலை வெளிப்படும் நிலை. அதுதான் இருபுறம் தலை உள்ள பசு. தற்போதும் பசு கன்று ஈனும் போது சுற்றி வந்து வணங்கும் வழக்கம் கிராமங்களில் உண்டு.
அப்படி என்ன சிறப்புத்தன்மைகள் பசுவிற்கு மட்டும். குழந்தைகளுக்கும்த் தாய்ப்பாலுக்கு அடுத்தபடி சிறந்த உணவு பசும் பால் மட்டுமே. அத்துடன் சாணம் சிறந்த கிருமி நாசினி.
இளம் சினைப் பசுவின் சிறுநீர் குழந்தைகளின் கக்குவான் இருமலுக்கு அந்நாளில் சிறந்த நிவாரணி. தற்போது கக்குவான் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டு விட்டது.
எனவே தான் வீட்டில் புண்ணியா தானம். கணபதி ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் செய்யும் போது பசுவின் சிறுநீரை வீடெங்கும் தெளிப்பது வழக்கம் மேலும் பூஜை முடிந்தது பஞ்சமகாவியம் என்ற பிரசாதம் வழங்குவதும் மரபு.
பஞ்சமகாவியம் என்றால் என்ன? பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் கோ என்றால் பசு என்று பொருள். பசுவிலிருந்து பெறப்படும்
1.பசுஞ்சாணம்
2.சிறுநீர்
3.தயிர்
4.பால்
5.நெய்
என்ற ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவையே பஞ்ச கோவியம். இன்று இதனை பயிருக்கு சிறந்த கிருமி நாசினியாகவும். உரமாகவும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் ஒரு வார இதழில் படித்த செய்தி. மெத்தப் படித்த இளைஞர் ஒருவர் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை எல்லாம் உதறி கோசாலை நடத்துகிறார்.
ஒரு நாட்டுப் பசுவின் மூலம் நாளொன்றுக்கு 500 ரூபாய் வருவாய் ஈட்டலாம் என்று விவரிக்கிறார். ஒரு லிட்டர் பசுவின் சிறுநீரை அயல் நாடுகள் 200 ரூபாய்க்கு வாங்குவதாகவும், அதனை எப்படி சேகரிப்பது எப்படி விற்பனை செய்வது என்றும் அவரே வகுப்பு எடுக்கிறார். விரும்புவோருக்கு பசுவை லாபகரமாக வளர்ப்பது எப்படி என்றும் கூறுகிறார். அவரே பசுவுக்கும் ஏற்பாடு செய்கிறார். போற போக்கைப் பார்த்தால் பசுவின் கழிவுகளுக்கு அயல்நாடுகள் காப்புரிமை பெற்றாலும் ஆச்சரியம் இல்லை! நாம் அதற்குள் முந்திக் கொள்ள வேண்டும்!
மேலும் திருத்துறைப் பூண்டியை அருத்த கட்டி மேடு என்னும் கிராமத்து விவசாயி ஒருவர் பஞ்சகோவியம் உபயோகித்து நமது பழைய மரபு சார்ந்த நெல் வகைகளில் உயர் விளைச்சல் காண்கிறார். ஒரேதூரில நூற்றுக்கும் மேற்பட்ட கதிர்கள் வெளிவரும் சாதனையையும் கண்டு இருக்கிறார். இதுபற்றி பயிற்சியும் மேற்கொள்கிறார். இப்படி இடையில் நாம் மறந்த பசுவின் பெருமையை மீட்டுத் தந்த இவர்களுக்கு நமது நன்றி.
அர்த்தமுள்ளசம்பிரதாயங்கள் - 5
பசுஞ்சாணத்தின் மேன்மை சொல்லிமாளாது. சொல்லில் அடங்காது. பசுஞ்சாணத்தின் சாம்பல் தான் திருநீறு என்று பெயர் பெறுகிறது. சைவசமயத்தின் புனித சின்னமாகவும் இது கருதப்படுகிறது. சிவன் ராத்திரி அன்று விபூதி மூட்டம் இடும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் உண்டு. அந்த மூட்டம் புகையும் சிறந்த கிருமி விரட்டி.
மேலும் பழங்காலத்தில் தற்போது உள்ளது போல் கொசு விரட்டி கிடையாது. கொசு வலை நாகரீகமும் கிடையாது. இவர்கள் எப்படி கொசுவை சமாளித்தார்கள். வரட்டியை மூட்டம் போட்டு அத்துடன் நொச்சி இலை, வேப்ப இலை, வேப்பம்பூ, மாம்பூ என சீசனுக்குத் தகுந்தாற் போல் சேர்த்துக் கொள்வார்கள். இப்படிப் பல வகைகளிலும் பசுவின் பயன்பாடு முன் நிறுத்தப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோவில் ஆலயத்தில் திருநீறு கலந்த திருச்சாந்து உருண்டை என்ற அருட் பிரசாதம் வழங்குவார்கள். இது தீராத நோயையும் தீர்த்து வைக்கும். இது பற்றித் "தஞ்சைத் தரணியிலே" என்ற எனது புத்தகத்தில் "பிணிதீர்க்கும் பெம்மான்" என்ற கட்டுரையில் விபரமாகக் காணலாம். எனவேதான் சம்பந்தர் பாடினார்.
மந்திரமாவது நீறுவானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைபங்கன் திருவாலவாயான் திருநீறே. அத்துடன் திருநீற்றை ஏன் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பூசுகிறார்கள்.
1. நெற்றி
2. தோள்பட்டை
3. முழங்கை
4. மணிக்கட்டு
5. மார்பு
இந்த இடங்களில் நீர் கோர்த்துவிடும். அதன் காரணமாக வலி ஏற்படும். இந்த இடங்களில் "ஜாயிண்ட்"களில் தங்கும் அதிகப்படியான நீரை இந்த விழதி
உறிஞ்சிடும். எனவேதான் குழந்தைகளுக்கு, குழந்தை பெற்றவனுக்கு. நோய்வாய் பட்டவர்களுக்கு தலைக்கு ஊற்றியதும் உச்சியில் திருநீற்றை அழுத்தித் தேய்ப்பது வழக்கம். இதன் காரணமாக மண்டையில் நீர் தேங்குவது தவிர்க்கப்படும். மேலும் சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்துத் திணறும் போது வரட்டியின் சாம்பலை மூட்டையாகட்டித் தலையணையாக உபயோகிப்பது வழக்கம். திணறல் குறைந்து சளிமுறிந்து வெளியேறிவிடும்.
ஆனால் இன்று நாகரீகம் காரணமாக முகப்பவுடரைக் குழைத்துப் பட்டை போட்டுக் கொள்கிறார்கள் தன்னைப் பக்திமான்களாகக் காட்டிக் கொள்ள!
சைவ சமயம் திருநீற்றை முன்னிலைப்படுத்துவது யாவரும் இறுதியில் பிடிசாம்பல் ஆவது உறுதி என்று உணர்த்தவே. வைணவ சமயம் திருமண்ணை முன்னிறுத்துவதும் அந்த வகையில்தான். எல்லோரும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாவது திண்ணம் என்று தான் திருமண் உணர்த்துகிறது.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 6
அடிபட்டு ரத்தக்கட்டு ஏற்பட்டால் பசுஞ்சாணத்தை நன்கு பிசைந்து உருண்டையாக்கி விறகு அடுப்பில் போட்டு எரிக்க வேண்டும். உருண்டையில் ஆவி பறக்க சூடு வரும் போது அதை ஒரு காட்டன் துணியில் சுற்றி ஒற்றடம் கொடுத்தால் ரத்தகட்டுக் கரையும். செப்டிக் ஆகாது. இது இன்றும் கிராமங்களில் நடக்கும் எளிய வைத்திய முறை.
மேலும் பசுவின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் "கோரோசனை" பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாகும். சில குழந்தைகள் பிறக்கும் போது பிரசவக் கழிவுகளைக் குடித்து விடும். இது நெஞ்சில் கபமாக்கட்டித் தொந்தரவு கொடுக்கும். இதற்கு அற்புத மருந்து கோரோசனை. இது குடித்த அழக்குகளை மலத்தின் வழியே வெளியேற்றிவிடும். மேலும் குரல் நாண்களை வலுப்படுத்தி நல்ல குரல் வளம் கூட்டும்எனவே தான் ஆணித்தரமாகப் பேசுபவர்களை கோரோசனை நிறைய குடித்தவர்கள் என்று கூறுவது வழக்கம்.
மேலும் இன்று பெரியம்மை தடுக்கப்பட்டமைக்குத் காரணம் பசுக்களே. அம்மைக் கிருமிகளை பசுவின் கன்றுகளுக்குச் செலுத்தி அந்த அம்மைக்கோப்புளத்தில் இருந்து பெறப்படும் மருந்தே அம்மைப்பால் என்னும், அம்மைநோய் தடுப்புமருந்து.
மேலும் பழங்காலத்தில் குழந்தை பிறந்ததும் கையாந்தரைசாறு எடுத்து வீட்டிலேயே கண்மை தயாரிப்பார்கள். அதில் பசு வெண்ணை இட்டுக் குழைத்து உபயோகிப்பார்கள். இதனால் குழந்தைகளின் கண்களில் தீட்சண்யமான பார்வை கிட்டும் கண் நோய்கள் தவிர்க்கப்படும்.
இறந்தும் பசுக்களின் பயன்பாடு அதிகம். இதன் தோல் இசைக்கருவிகளுக்கும் பயன்படுகிறது. காலணி-பர்ஸ்-பெல்ட் தோல்பை என பலவற்றிலும் இதன் பயன்பாடுஅதிகம். இதன் கொம்புகள் சீப்பு சின்னஞ் சிறிய சிமிழ்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன. இது தவிர ஆன்மீகத்திலும் பசுக்களின் ஆதிக்கம் உண்டு.
நாம் ஆண்டவனையே மாடு மேய்க்கும் சிறுவனாக உருவகப் படுத்தியவர்கள் கோபாலன் என்று கூறி வழிபட்டவர்கள். மேலும் திருவிழாக்களில் 'வெண்ணைத் தாழி'
என்று ஒருசிறப்பு வழிபாடும் உண்டு வைணவ சம்பிரதாயத்தில்.
சைவ சமயத்தில் அன்னையே பசுவாகப் பிறந்து இறைவனை வழிபட்டதாகப் பல்வேறு தலவரலாறுகள் கூறுகின்றன. எனவேதான் பாரதியும்
"பாலைப்பொழிந்துதரும் அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா"
என்று பாப்பாவின் மனதிலேயே பசுவை இடம் பிடிக்க வைத்தான்.
இறந்தவர்களை எரியூட்டிய பின் மறுநாள் 'பால் ஒளி' என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. பசுவில் கைகளை நனைத்துப் பின் எரிந்த சாம்பலைக் கலைத்து எலும்புகளை பொறுக்கிச் சிலசடங்குகள் செய்து பின் நீரில் இடுவார்கள். பாலில் கை நனைப்பது ஏன்?
எறிந்த பிணத்திலிருந்து ஏதும் கிருமிகள் தொற்றாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. டெட்டால் போன்று கிருமி நாசினியாகப் பயன்பாடும் உண்டு. மேலும் "எட்டு" என்று ஒரு சடங்கு செய்வார்கள். அன்று மிளகைப் பால்விட்டு அரைத்துப் பாலில் கரைத்து படையில் செய்து அந்தப்பாலை ரத்த்சம்பந்தம் உள்ள அனைவரும் தேய்த்து முழுக வேண்டும் என்பது சம்பிராயம் இது ஏன்?
ரத்த உறவுகல் அதிகம் சோக வசப்பட்டு சரியாக உண்ணாமல், உறங்காமல் மன இறுக்கத்திற்கு ஆளாகித் தவிப்பர். அதைத் தவிர்த்து மூளைக் கொதிப்பை மாற்றி மனதை "ரிலாக்ஸ்" செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்துடன் மனமும் உடலும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல மாற ஆரம்பிக்கும். இத்தகைய அதிசய சக்தி கொண்டது இந்த மிளகுப்பால். நம் முன்னோர்கள் எத்தனை அரிய கண்டு பிடிப்பாளிகள்!
இதை ஒட்டிய ஒரு அருமையான சம்பிரதாயங்கள் கோ பூஜை. அதனை அடுத்தவாரம் பார்ப்போம்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 7
கோ பூஜை
மணிவிழா, கிருகப்பிரவேசம் போன்ற விழாக்களில் இது கண்டிப்பாக உண்டு. அத்துடன் வீடு கட்ட மனைபோடும் போது முதல் நாள் அந்த மனையில் பசுவையும், கன்றையும் கட்டிவைப்பது வழக்கம். மேலும் புதுமனை புகுவிழாவில் முதலில் பசுவையும் கன்றையும் வீட்டிற்குள் பிரவேசிக்க வைப்பார்கள். அப்போது சிறு நீர் இட்டு சாணம் போட்டால் நல்ல சகுனம் என்று சொல்வது வழக்கம்.
இவையெல்லாம் மறை முகமான சுற்றுச் சூழல் பராமரிப்பே. அதாவது தற்போது பலர் கூடும் இடங்களில் 'ப்ளீச்சிங்' பவுடர் தெளிப்பது போன்று அந்த நாளைய "ப்ளீச்சிங்' தெளிப்பே இவை எனவேதான் இத்தனை சிறப்பு வாய்ந்த பசுவிற்காக ஒரு தினத்தையே ஒதுக்கினார்கள். அதாவது மாட்டுப்பொங்கல். இன்று பல தினங்கள் அனுசரிப்புகளுக்கு முன்னோடி இந்த மாட்டுப் பொங்கல் எனலாம்! நம்மவர் எங்கும் எப்போதும் முன்னோடியே!
இப்படிப்பட்ட பசுக்களைப் போஷிக்க பல்வேறு நலத்திட்டங்களும் கண்டார்கள். சாலை ஓரத்தில் பசுக்கள் சொறிந்து கொள்வதற்காக நடுகல் நடுவது. நல்ல வீரியம் மிக்கக் காளைகளை வளர்த்து இலவசமாக இனப்பெருக்கம் செய்ய வழங்குவது என்பது பெரும் பணக்காரர்களின் பங்களிப்பு இதில் கணிசமானது.
மேலும் கறவை நின்ற மாடுகளை போஷிக்கும் விதமாக கிடைசேர்ப்பது. அதாவது. கோடைகாலத்தில் அறுவடை முடிந்ததும், கறவை இல்லாப் பசுக்களையும் - கன்றுகளையும் இலவசமாக மேய்த்து ஆற்றில் தண்ணீர் வந்ததும் அவர் அவரிடம் ஒப்புவிப்பது. இதில் மாடு கருவுறும். கன்றுகளும் வளர்ந்து கருவுறத் தயாராகும். இதன் மூலம் கிடைசேர்ப்பவருக்கு வருமானம். அத்தோடு இது நிலங்களுக்கு சரியான இயற்கை உரமாகவும் அமைந்தது. இப்போது இவை எல்லாம் கனவாய், கதையாய் மாறிவிட்டது.
சுக்கிரன் பரிகாரத் தலமான கஞ்சனூரில் பசுவிற்கும் புல் கொடுப்பது என்ற ஒரு பரிகார சம்பிரதாயமே உண்டு.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 8
சாணத்திற்கு அடுத்தபடியான வி.ஐ.பி மஞ்சள். இந்த மஞ்சளின் மகிமை சொல்லத் தரமன்று. பெண்களின் முக்கிய முகப்பூச்சு. சருமரோக நிவாரணி. வலி நீக்கி என பல பரிணாமங்கள் இதற்கு.
எனவேதான் அம்மை நோய் கண்டவருக்கு மஞ்சளும், வேப்பிலையும் அரைத்துப்பூசி குளிக்கச் செய்வர், மேலும் அம்மை நோய் கண்டவருக்கு வெந்நீர் குளியல் கூடாது. எனவே காலையே ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை நிறைத்துவேப்பிலை போட்டு வெய்யிலில் வைத்து விடுவார்கள். சூரியனின் கதிர்கள் நீரில் ஊடுறுவி தண்ணீர் சற்றே வெது வெதுப்பாக மாறும், கூடவே வேப்பிலையின் சாரமும் இறங்கு ஒரு டெட்டால் குளியலுக்கு இணையான குளியலை சம்பிரதாயம் என்ற போர்வையில் செய்து வைத்தார்கள்.
மேலும் பயறு தேங்காய் கலந்த பொங்கல் - வெங்காயம் கலந்த தயிர்சாதம் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். இவை எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகள். மேலும் உள்புண்ணை ஆற்றும் ஆற்றல் மிகுந்தவை இந்த உணவுகள்.
மேலும் ஆரத்தி கரைப்பது என்று ஒரு வழக்கம். மஞ்சள் பொடியில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் விட்டுக் கரைத்து அந்த நீரை தாம்பாளத்தில் இட்டு விழா நாயகர் நாயகியை சுற்றி வாசல் எதிரே கொட்டுவார்கள். இதுவும் சாணம் தெளிப்பது போல் ஒரு கிருமி நாசினி தெளிப்பே!
வளைகாப்பு காது குத்து போன்ற வைபவங்களுக்கு மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல் சூட்டி வணங்குவது உண்டு. அருகம்புல் ஒரு அற்புத மூலிகை. மஞ்சளும் சாணமும் அருகம்புல்லும் இணையும் போது அதன் ஆற்றல் அதிகரிக்கிறது.
மேலும் பொங்கல் பானைவைக்கும் போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் சூட்டுவது வழக்கம் ஏன்?
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 9
சாணத்தை நிழலில் வைத்தால் புழு புழுக்கும். ஆனால் அருகம்புல் செருகிய சாணத்தில் புழு உண்டாவதில்லை. இது பிள்ளையார் மகிமை மட்டுமல்ல. அருகம் புல்லின் மகிமையும் கூட. இதன் வீரியம் ஒரு ஆண்டு மட்டுமே. எனவேதான் முதல் ஆண்டு பிடித்தப் பிள்ளையாரை நீரில் கரைத்துப் புதுப் பிள்ளையாரை நடுவீட்டில் மாடத்தில் வைப்பது. இது இடைவிடாது தனது ஆற்றலை வெளியிட்டு சுற்றுச் சூழல் நலம் காக்கும்.
எனவேதான் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்ற வாழ்த்து ஏற்பட்டது. ஆலமரம் அடிமரம் இற்றுப் போனாலும் விழுதுகள் தாங்கிப் பிடிக்கும். அது போல் விழுதாகக் குடும்பத்தைத் தாங்க வேண்டும் என்றே இந்த வாழ்த்து.
அருகம் புல் ஒவ்வொரு கணுவிலும் வேர் பிடிக்கும் குணம் கொண்டது இடையே வெட்டுப்பட்டாலும். கணுவில் இருந்து துளிர்த்து தழைக்கும் அது போல் எந்த இடர் வந்து சிதைத்தாலும் சிதையாமல் குடும்பத்தைக் காக்கும் குணம் வேண்டும் என்றே இந்த வாழ்த்தின் உட்பொருள்.
எனவேதான் அருகம் புல் ஜீஸ் என்று ஒரு புதிய அலை இன்று வீசுகிறது. மேலும் பெண் வயதுக்கு வந்ததும் அருகம்புல்லை நல்ல எண்ணையில் தோய்த்து உச்சியில் வருகுவது என்ற சம்பிரதாயம் ஏற்பட்டது. எது ஏன்?
புதிய மாற்றம் காரணமாக உடல்ரீதியாக, மனரீதியாக பல சிக்கல்கள் பெண்ணுக்கு ஏற்படும். அதைச் சமன் செய்யவே இந்த ஏற்பாடு. மேலும் அம்மிக் குழவியை சுற்றித் தூளியில் இட்டு ஆட்டுவது போன்றவை மறைமுக "செக்ஸ்" கல்வியே. இதை தற்போது பள்ளியில் போதிக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் சம்பிரதாயம் என்ற போர்வையில் ஈஸியாக ஊட்டினர். எனவே பெண் வயதுக்கு வந்ததும் தலைசுற்றாமல் நிலைப்படி தாண்டக் கூடாது என்று ஒரு பிட்டைப் போட்டு வைத்தனர்.
மேலும் உளுந்து சளி இது இடுப்பு எலும்பை வலுப்படுத்தி பிரசவத்தை எளிதாக்க கட்டாயம் செய்து கொடுத்தார்கள் மஞ்சள் பொடி கலந்து துவரம் பருப்பு சேர்த்துப் பொங்கல் என்ற சத்துணவு வழங்கப்பட்டது. இன்று இதை எல்லாம் மறந்து புதுமை என்ற போர்வையில் செயல்படுகிறோம்! பின்னர் அவதியும் படுகிறோம்!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 10
அண்மையில் விகடனில் ஒரு செய்தி படித்தேன் உலகெங்கும் புற்று நோயின் தாக்குதல் அதிகரிப்பு. இதில் இந்தியாவும் விலக்கு அல்ல. இருந்தாலும் மலக்குடல் புற்று நோய் மட்டும் இந்தியாவில் அதிகம் இல்லை. இது ஏன் என்று மேலை நாடுகள் ஆய்வு செய்யக் களம் இறங்கின! மஞ்சளின் மகிமை காரணமாக மலக்குடல் புற்றுத் தாக்கம் குறைவு என்பதே ஆய்வின் முடிவு! புற்று நோய் மட்டுமல்ல மேலும் 250 நோய்களுக்கான எதிர்ப்புத் திறன் மஞ்சளில் உண்டு என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
நிறமியாக சேர்க்கும் மஞ்சளுக்கு இத்தனை மகிமை. இதை உணர்ந்த நம்பவர் மருந்தையே உணவாகக் கண்ட திறன் நம்மை வியக்க வைக்கிறது. இனிமேலாவது நிறத்திற்கு செயற்கைப் பவுடரை உபயோகிப்பது தவிர்த்து மஞ்சளை உபயோகிப்போமா?
மேலும் அந்தக் காலத்தில் பிரசவித்தப் பெண்களுக்கு மூன்று நாட்கள் மஞ்சளை அரைத்துக் கொடுப்பது வழக்கம். இது புண் ஆற்றும் திறன் கொண்டது. இதனால் பிரசவத்தில் ஏற்படும் உள் - மற்றும் வெளிப் புண்கள் எளிதில் ஆறியது. அடி பட்டால் மஞ்சளை அரைத்து சூடு செய்து பற்று போட்டால் வலி வீக்கம் போயே போச்சு. சளி பிடித்தால் இந்தப் பற்றையே முகத்தில் பூசி வர சளி முறிந்து வெளியாகும் சளி இருமல் இருந்தாலும் மஞ்சளும் மிளகும் சேர்த்துப் பசும்பாலில் இட்டுக் காய்ச்சி சாப்பிட இருமல் குறையும்.
குழந்தை பிறந்ததும் அந்த அறையில் பெரிய தாம்பாளத்தில் மஞ்சள் கரைத்த நீரை ஊற்றி வைப்பது வழக்கம். நடுவில் அடுப்புக்கரி ஒரு துண்டு வைப்பது வழக்கம். ஏன் என்று கேட்டால் திருஷ்டிகழிய என்று பதில் வரும் கூலாக.
மேலும் ஒரு இரும்புப் பொருளையும். வாருகோலையும் வைப்பார்கள். இது ஏன் என்று கேட்டால் பேய் பிசாசு அண்டாமல் இருக்க என்று பதில் வரும். இதில் மறைந்து நிற்கும் உண்மையான காரணத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-11
மஞ்சள் நீர் கிருமி நாசினியாகச் சுற்றுச்சூழல் மாசுகள் தாக்காமல் இருக்க.காற்றினிலேய்ருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சவும், கழிவுகளின் வாடையைத் தவிர்க்கவும். உதரணமாக "ப்ரிஜ்ஜில்" கெட்ட வாடை வீசினால் ஒரு கரித்துண்டு வைப்போம் அல்லவா அது போல!! இரும்புப் பொருள் கற்றில் கலந்து வரும் காந்த அலைகளில் இருந்து காக்க, துடைப்பம் பூச்சி பொட்டு வந்தால் சட்டெனப் போட்டு தள்ள!
அத்துடன் கர்பிணிப் பெண்களுக்கு பலகாரம் செய்து எடுத்துப் போகும் போது கரித்துண்டும்,இரும்புத்துண்டும் வைப்பது இதற்காகதான் பிஸ்கட்,முறுக்கு,சிப்ஸ் இவற்றுடன் ஒரு கரித்துண்டு போட்டு வைத்தால் சீக்கிரம் நமத்துப் போகது.
அத்துடன் குழந்தைக்கு நறுக்கு மருந்து கொடுக்கும் போது பயந்து விட்டால் கொழமோர் காய்ச்சிக் கொடுக்கும் போதும் ஒருஇரும்புக் கரண்டி காம்பை நங்கு பழுக்க சூடு செய்து அதை அவற்றில் முக்கி புகையப் புகைய கொடுப்பார்கள் கேட்டால் சொர் என்ற சத்தத்தில் பேய் பிசாசு ஒடிவிடும் என்று கூறி வைத்தார்கள், நாம் நக்கலாக சிரித்து வைப்போம் குழந்தைக்கு கொடுக்கும் மருந்தில் இரும்பு சத்து சேர்ந்தால் கூடுதல் பலன் எனவே இந்த ஏற்பாடு.
குழந்தை பிறந்த பதினோறாம் நாள் அன்று ராஜகீரை என்ற முருங்கைகீரைப் பொரியலை புழுங்கல் அரிசி சாதத்தில் கலந்து நல்லெண்ணை விட்டு கலந்து,அதை சுற்றி கொழுக்கட்டை மாவில் 15 விளக்குகள் செய்து வேக வைத்து நல்லெண்ணை விட்டு ஏற்றி சாதத்தை சுற்றிலும் வைத்து படயல் செய்து வழங்குவார்கள்.
முதலில் பிள்ளை பெற்றவள் சாப்பிட பிறகு குழந்தைகலுக்கு கொடுப்பார்கள் தற்காலம் ஒலிம்பிக் ஜோதி ஏற்றுவது போல! ஒளீமயமான எதிர்காலம் குழந்தைக்கு அமைய வேண்டும் என்பதற்கானப் புறக்காரணிகள் இவை. அத்தோடு ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்கும் பயிற்சியும் இதன் மூலம் வழங்கினார்கள்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-12
முருங்கைக் கீரை ஏன்?
அதிக சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடத் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இரும்புச்சத்து நிறைந்த இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட பிரசவத்தால் ஏற்பட்ட சக்தி இழப்பு துரிதமாக சமன் செய்யப்படும்.
அத்துடன் முருங்கைக் காய் பத்திய சாப்பாட்டுக்குப் பிரதான மானது என்றும் வைத்தார்கள். முருங்கைப் பூ நல்ல ஆண்மை ஊக்கி(வயாகரா) [பார்க்க பாக்கியராஜின் முந்தான முடிச்சு] இவை எல்லாம் அந்தக் காலத்தில் உண்வின் மூலமாகவே சமன் செய்யப்பட்டது. தற்காலத்தில் "செமன்" டெஸ்ட் செய்து உயிர் அணுக்கள் குறைவு என்று ஆய்வு செய்து மருத்துவம் செய்கிறார்கள். இதை எளிதில் பாட்டாகக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லி வைத்தார்கள்.
சிறு குழந்தைகலுக்கு ஒரு விளையாட்டுப் பாடல் ஒன்று உண்டு. தற்கால 'மியூசிக் சேர்' போன்ற விளையாட்டு அது பாடலின் முடிவில் சின்ன பொண்ணே காலைமடக்கு என்று சொல்வார்கள். குழந்தை உடனே காலை மடக்க வேண்டும். இந்த விளையாட்டு மூலம் குழந்தைக்கு மூளைத்திறன் எப்படி இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. குழந்தைக்கு பாடல் அமைத்தவர்கள் முருங்கை பூவின் திறத்தையும் அதிலேயே கூறி வைத்தார்கள். இதோ அந்தப்பாடல்.
பெரியவர்: ஒரு பட்டினம் திருபட்டினம்
ஒரியா மங்கலம் பண்னண்டு ஆனை
செக்கு திரும்பி மாடுகன்று
வார வேளை மஞ்சத்தண்ணி கரைக்கிறவேளை
ஒப்பன் பேரு என்ன?
குழந்தை: முருங்கைப் பூ
பெரியவர்: முருங்கைப்பூவும் தின்னாராம்
முன்னாம் தண்ணியும் குடிச்சாராம்
நண்டு சுட்ட கரையிலே
குண்டுமணி கூத்தாடுது
சின்னப் பொண்ணே காலை மடக்கு!
என்று பாடி முடிக்கையில் யார் முன்னதாகக் காலை நீட்டி மடக்குகிறார் என்பதே போட்டி இதன் மூலம் பேச்சுப் பயிற்சி, கற்றல் பயிற்சி, கூடவே " பிசியோதெரபி" பயிற்சி ஒரு கல்லில் மூன்று மாங்காய்!!
அடுத்து வளர் இளம் பெண் பருவத்திலும் முருங்கையின் மகத்துவம் போதிக்கப் படுகிறது, எப்படி?
புதைக் காய் ஆட்டம் என்று ஒரு விளையாட்டு, ஏழு கற்களை வைத்து விளையாடும் விளையாட்டு, அதில் ஒரு பாடல்
பெண் 1: ஏழைப் பெண்ணே ஜானகி
என்னகறி சமைச்சே
பெண் 2: பல்லில்லா கிழவனுக்கு
முள்ளில்லா முருங்கை
கிள்ளிப் போட்டு சமைச்சேன், நான்
கிள்ளிப் போட்டு சமைச்சேன்.
அதாவது ஏழைகலுக்கும் சக்தி அளிக்கும் முருங்கை என்பது மறை முகமாக வலியுருத்தபட்டது.தற்போது கீரை சாப்பிடுவது கெளரவம் என்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறோம்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-13
திருமணத்தின் போது பாலிகை வளர்ப்பு என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. நவதானியங்களை ஜந்து நாட்கள் முன்னரே ஊறப் போட்டு வளர்ப்பார்கள் அதற்கு தூப தீபம் காட்டுவார்கள் விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சடங்கே இது, இதனைத் தென் மாவட்டங்களில் "முளைப்பாரி" என்னும் பெரு விழாவாக இன்றும் ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடு வார்கள் . தீபாவளி , பொங்கல் பண்டிகைகளை விட முக்கிய விழா அது,
அத்தோடு திருமணத்தின் போது அரசாணிக்கால் நடுவது என்று ஒரு சம்பிரதாயம். அதாவது பூவரசன் கிளை ஒன்று இது ஆண் ஒதியன் கிளை இது பெண் இதில் ஒதியன் பலகை குளிச்சியானது, வளைந்து கொடுக்கும் தன்மையுடையது. எனவே அது பெண் என்று கூறி வைத்தார்கள் இந்த இரண்டு கிளைகளையும் பந்தலில் நாட்டி மஞ்சள் குங்குமம் சந்தனம் பூசி பூச்சூட்டி பட்டு கட்டி பூசித்தப்பிறகே திருமண சடங்குகள் ஆரம்பம். திருமணம் முடிந்தபின்னர் இந்த இரண்டு கிளைகளையும் நட்டு மணமக்கள் நீர் ஊற்றி நன்கு பராமரிக்க வேண்டும் . மரம் செழித்தால் தான் வாழ்க்கை செழிக்கும் என்று ஒரு பிட்டையும் போட்டார்கள் ஏன்??
அந்த காலத்திலேயே மரம் வளர்ப்பு பற்றி அரசின் ஆனையே இது. மரம் வளர மழை பெருகும், சுற்றுச் சூழல் சிறக்கும் என்றே இந்த ஏற்பாடுகள். ஆண்மகன் பூவரசன் மரம் போல் உறுதியாக நிமிர்ந்து நிற்க வேண்டும்,பெண் குளிந்த பேச்சுடன் வளைந்து கொடுத்து நீக்கு போக்குடன் இல்லறம் காண வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். அடுத்து மெட்டி போடுவது ! ஏன்? பின்னர் கூறுகிறேன்..
அடுத்து நலுங்கு.இது தம்பதிகள் பேசிப் பழகவும் கூச்சம் தெளியவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும் செய்த ஏற்பாடு. ஆனால் இன்று இதுவே போட்டி மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் ஜ. பி .எல் கிரிக்கெட் ஆட்டமென உசுப்பேற்றப் படுகிறது!!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-14
அடுத்து கட்டுசாதம்!!
பத்து பசையோடு போனால் தான் உறவு ஒட்டும் என்று கூறி வைப்பார்கள். உண்மையில் இதன் பிண்ணனி என்ன?
அந்த காலத்தில் வாகன வசதியும் ஒட்டல் வசதியும் இல்லை எனவே வழியில் சாப்பாட்டுக்கு வழி செய்யும் வகையில் கட்டுசாதம் என்ற சம்பிரதாயம். கூடவே பலகாரச்சீர். இன்று ப்ளேனில் சென்றால் கூட இது தொடரும் அதிசயம், அர்த்தம் புரியாது அனைவரும் மேற்கொல்லும் சம்பிரதாயம் இது, மணமகன் வீட்டில் ஆடம்பரமாக டின்னர் ஏற்பாடு செய்யும் போது இந்த கட்டு சாதக் கூடை வேஸ்டாகக் குப்பைக்குப் போகிறது.
அதற்கு பதிலாக அந்தக் கட்டுசாதத்தை ஏதாவது அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லத்திற்கு வழங்கலாம் அல்லவா?சிந்திப்போமா? அடுத்து காலில் விழுந்தால் பெண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் தனியே பணம் வைத்துக் கொடுப்பது மொய் அல்லாது ஏன் என்றால் புது மணமக்களின் பக்கெட்மணிக்காக ஏற்பட்ட சம்பிரதாயமிது!!
தற்போது அதையும் கணக்கு போட்டு பெரிசுகள் வசூலிக்கும் அவலம். தற்போதும் சில குடும்பங்களில் ஒரு பழக்கம் உண்டு குறிப்பாக இது கிராமத்தில் இன்றும் நடைபெறுகிறது.. பெண்ணுக்கு கிடைக்கும் பணத்தை அப்படியே ஒரு ஆட்டுகுட்டியோ, அல்லது கன்றுக்குட்டியோ பணத்திற்கு ஏற்ப வாங்கிக் கொடுத்துவிடுவது அதன் முலம் வரும் வருமானம் பெண்ணின் சொந்த செலவுக்கு மட்டுமே, எவ்வளவு உயர்ந்த சிந்தனை.
அடுத்து பெண், மாப்பிள்ளை சாப்பிட பணம் வைப்பது ,கூடவே தோழர், தோழிகலுக்கும்!நானும் தோழி தோழர் என்று கூறி முறையில்லாதவர்கள் கூட முறையற்ற வழியில் பணம் பறிப்பது தன்னுடைய கெளரவத்தை நிலை நாட்டுவதாகக் கூறிக்கொண்டு அகெளரவத்தை அரங்கேற்றும் இவர்கள் இன்றும் இருக்கிறார்கள்!!
என்ன யோசிச்சு முடிச்சுட்டீங்களா? பனிக்காலம் இனிதா என்னமுட்டாள்-தனம் இதுதானே நம்ம முடிவு?
இதையேதான் மன்னனும் கூறினான். தலைமைப் புலவர் சிரித்படி விளக்குகிறார். இல்லைமன்னா! பனிக்காலம் இனிது தான். அதாவது பனிக்கு ஆலம் எனும் விஷம் இனிது. அதாவது ஆலகால விஷத்தையும் விட பனி கொடிது என்று பொருள் என்கிறார்.
ஹி...ஹி...
அரசு எவ்வழி மக்கள் அவ்வழி என்பது தானே மரபு. அதனால் தான் மன்னனின் முடிவையே நாமும் சொன்னோம். என்ன? இவ்வளவு ஆழமா இறங்கி அலச ஆரம்பிச்சால் தமிழ் நயம் எனும் சூழலில் மாட்டிப்போமா?
அப்ப கொஞ்சம் மேலோட்டமாகவே அலசுவோம்!
மார்கழிப் பனியில் அதிகாலையில் எழுந்து குளித்து, முழுகிக் குனிந்து நிமிர்ந்து கோலம் போடும்போது அதுவே பெரிய உடற்பயிற்சி ஆகிறது. நம்பிக்கை இல்லைன்னா 'வேதம் புதிது' திரைப்படத்தில் அமலா கோலம் போடும் அழகைப் பாருங்கள் நம்பிக்கை வரும். உள்ளபடியே "பாரதிராஜர் உன்னதமான கலைஞன் தான். விரல்களை ஊன்றி குதிகாலை உயர்த்தி நெற்றியில் விழும் முடியை புறங்கையால் ஒதுக்கி அடடா அற்புதம். அந்தப் படத்தைப் பார்த்ததும் நம்ம பசங்க கோல (மயில்களின்) ரசிகர்கள் ஆகிவிட்டாங்க தெரியுமா?
உடற்பயிற்சியோடு உள்ளத்திற்கும் கோலம் போடுவதால் பயிற்சி கிடைக்கிறது. எத்தனை புள்ளி எத்தனை வரிசை நேர்புள்ளியா, சந்து புள்ளியா,சைடு புள்ளி எத்தனை என்பது மனதில் பதிவாகி விடுகிறது. இது படக்காட்சியாக மாறி தரையில் கோலமாகப்படர்கிறது. இதன் மூலம் பெண்களின் மெமரிபவர் கூடுகிறது. (கோல புத்தகம் கையில் வைத்துப் போடுவர்கள் யோசிப்பார்களாக).
மேலும் அரிசி மாவினால் இடும் கோலம் பல ஜீவராசிகளுக்கு உணவாகிறது. கல்லுமாவில் கோலம் போடுபவர்கள் இது பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாக எறும்புகளுக்குக்கு இது வரப்பிரசாதம். எனவேதான் "எறும்பு தின்றால் கண் தெரியும்" என்றார்கள். அவ்வளவு புண்ணியம் பார்வைக் குறைவு ஏற்படாது என்ன அர்த்தத்தில் கூறியது இன்று அனர்த்தம் ஆகிவிட்டது. எறும்பு விழந்த காப்பியை என்ன சொல்லிக் குடுக்குறாங்க தெரியுமா? எறும்பு தின்றால் கண் தெரியும் அதனால அப்புடியே சாப்புடுங்க!
தப்பித் தவறி புள்ளி பிசகி விட்டால் அதனைக்கண்டு பிடித்து சரிசெய்த பின் ஏற்படும் "ரிலாக்ஸ்" இருக்கே அடடா அற்புதம், அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும், அதன் சுவை.
மனசுக்கு உற்சாகம் தர செயற்கை டென்ஷன் ஏற்படுத்தும், ஆறு வித்தியாயங்கள், குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்றவை நலன் பயக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்த செயற்கை "டென்ஷன்" மூலம் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உண்மையான 'ரிஸ்க்' குகளை லாவகமாகக் கையாளும் திறன் அதிகரிக்கிறது என்கின்றனர். இதனை அன்றே செய்தனர் நம் பெண்கள் கோலமிடுவதன் மூலம் எனவே தான் பழைய தலைமுறைப் பெண்களுக்கு "டென்ஷன்" என்ற வார்த்தையே தெரியாமல் போயிற்று!
அத்தோடு கோலத்தில் ஏற்படும் சிக்கலைக் கண்டுபிடித்து சீர்செய்யும் பழக்கத்தின் காரணமாகக் பிற்காலத்தில் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எளிதில் சரிசெய்யும் திறனும் அதிகரிக்கிறது.
எதோ என்னால் முடிஞ்ச பணி,
பனிக்காலம் இனிதா? கொடிதா? என்ற கேள்வியை முன் வைத்து உங்களுக்கு எல்லாம் ஒரு செயற்கை டென்ஷனை ஏற்படுத்தி ரிலாக்ஸ் செய்துவிட்டேன் தானே?
டென்ஷன் அடுத்தவாரமும் தொடரும்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் -3
கோலம் போட்டா பெண்களுக்கு மெமரிபவர் கூடும்னு எழுதுனதும் பசங்ககிட்ட இருந்து ஏகப்பட்ட போன் கால்கள். எங்களுக்கு மெமரிபவர் கூட என்ன செய்யணும் பாட்டி என்று கேட்டு கோலத்தாலயே தான் உங்கள் மெமரிபவரும் கூடும். எப்படின்னு கேட்கிறீங்களா?
இப்படித்தான் ஒரு இளைஞனுக்கு மெமரி பவரே கிடையாது. தமிழ் பாடல்களை நெட்ரு பண்ணித்தானே ஆகனும்! தமிழாசிரியர் இரண்டடி குறளை இருபது முறை நடத்திப் பார்த்துட்டார். அந்தப் பையனுக்கு திரும்ப சொல்லமுடியல இத்தனைக்கும் அது இன்பத்துப்பால் குறள்! ஆசிரியர் நீ சுத்த வேஸ்ட் நாலும் மூன்று ஏழு வார்த்தையைக் கூட மனப்பாடம் செய்யாத நீ எல்லாம் ஏன் படிக்கவர்றேன்னு வாரு வாருன்னு வாரிவிட்டார் வகுப்பே சிரிக்க அவன் நிலை குலைந்தான்.
மறுநாள் அதிகாலை எழுந்து உடுப்போட ஆரம்பித்தான். ஊஹீம் ஞாபகம் வருவேனா என்றது. வெறுத்துப்போய் பால்கனிப்பக்கம் எட்டிப் பார்க்கிறான். அப்படியே குதித்து விடுவோமா என்று யோசிக்கிறான்.
அப்ப எதிர் வீட்டுப்பெண் அழகான மயில் கோலம் போட்டு கிட்டு இருக்கா. அவள் கைவண்ணத்தில் வண்ணத் தோகையுடன் ஒயிலாக அமர்ந்து இருந்த மயில் கோலம்.
இவன் தொண்டையில் இருந்து முட்டி மோதி வெளி வருகிறது குறள். சரஸ்வதி சபதத்தில் ஊமை சிவாஜிக்குப் பேச்சு வந்து தட்டுத்தடுமாறி அம்மா அப்பா என்று ஆரம்பித்து மணிப்பிரவாளமாகப் பாடுவாரே அப்படி!
"அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாறுமென் நெஞ்சு".
இப்படியே கோலம் பற்றி தினமும் சர்வே எடுங்கள். கள ஆய்வு செய்யுங்கள் உங்கள் மெமரிபவரும் கூடும். அப்புறம் நீங்களும் 'பவர் ஸ்டார்' தான். ஹி ஹி இது எப்படி?! (பாட்டி சொல்லைத் தட்டாதே)
கோலம் போடும் முன் பசுஞ்சாணம் தெளிப்பது ஏன்? அது ஒரு பவர் ஃபுல் கிருமி நாசினி. இன்றைய டெட்டால் - பினாயில் போன்றவற்றுக்கு இணையான காசு செலவு இல்லாத கிருமி நாசினி. வாசலில் அதை மிதித்து வரும் போது வெளி உலகக் கிருமிகள் அங்கேயே ஒழிக்கப் படுகின்றன கொல்லைப் புற வாசலுக்கும் சாணம் தெளிப்பது உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்னே 'போபால்' என்னும் வட இந்திய நகரத்தில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதன் தாக்கம் இன்னும் எச்சமாக தேங்கி நின்று பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நகரே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டது. வீதிக்கு பீதியுடன் ஓடி வந்த மக்கள் வெள்ளம். பல்வேறு உபாதைகளுக்கு ஆளாயிற்று.
ஆனால் ஒரு வீட்டில் மட்டும் இதன் தாக்கம் ஏதுமில்லை இந்த அசம்பாவிதத்தை உணரவுமில்லை. விடிந்த பின் தான் அவர்களுக்கு விபரமே தெரிய வந்தது. அவர்களுக்கு மட்டும் ஏன் பாதிப்பு இல்லை என ஆய்வு செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள் களம் இறங்கினர். அவர்கள் செய்த ஆய்வுகளின் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வீட்டில் அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்தார்கள். எனவே அந்த வீட்டில் மட்டும் விஷவாயுவின் தாக்கம் இல்லை.
'அக்னி ஹோத்ரம்' என்பது பசுஞ்சாணத்தின் வரட்டியில் நெய் விட்டு தீமூட்டி சிறிது பச்சரியைத் தூவி செய்யும் ஒரு ஹோமம். அந்தப்புகை நச்சுப் புகையில் இருந்து சாத்து இருக்கிறது. நமக்கு மெய் சிலிர்க்கிறது. சரி எல்லோராலும் அக்னி ஹோத்ரம் செய்ய முடியுமா என்பது நமது கேள்வி.
பழைய நாட்களில் மார்கழி மாதம் கோலத்தின் மீது பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பரங்கிப் பூ சூட்டி அழகுபடுத்துவார்கள் மாலையில் அந்தப் பிள்ளையாரை பரங்கிப் பூவின் மீது வரட்டியாகத் தட்டி சேர்த்து வைப்பார்கள். அந்த வரட்டியை பொங்கலன்று அடுப்பெரிக்க உபயோகிப்பார்கள். பொங்கல் பானையை இறக்கி வைக்கும் போது நெய் கலந்த பொங்கலில் ஒரு கரண்டி அடுப்பில் போடுவார்கள். இது கட்டாயம். இது வேதம் படிக்காதவர்களும் கடைப்பிடித்த எளிமையான அக்னி ஹோத்ரம்!
அத்தோடு அன்று அடுப்பெரிக்க வரட்டியே பயன்பட்டது. தினமும் சமையல் முடிந்ததும் அக்னி பகவானுக்கு அர்ப்பணம் என்று சிறிது சாதத்தை அடுப்பில் இடுவதும் வழக்கமாக இருந்தது. இந்தப்புகை சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து மக்களைக் தாக்கும் கவசமாக அமைந்தது. மீதியை அடுத்தவாரம் அலசுவோம்!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-4
இப்படிப்பட்ட சாணத்தைத் தரும் பசுவைக் காமதேனு என்று அழைத்தார்கள். அதன் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொரு தேவதை குடியிருப்பதாக சொல்லிவைத்தார்கள்.
பசுவின் சிறப்பை விளக்க ஒரு சுவையானகதை;
இருமாணவர்கள் கல்விக் கேள்விகளில் சம அளவில் சிறந்து விளங்கினர். குருவுக்கு யாரை முதல் மாணவனாகத் தேர்வு செய்வது என்று குழப்பம் அந்த நாளிலும் "டை பிரேக்கர்!"
எனவே புதிதாக ஒரு டெஸ்ட் வைக்கிறார். யார் முதலில் இரண்டு பக்கமும் தலை உள்ள பசுவைக் கண்டு வணங்கி வருகிறார்களோ அவரே சிறந்த மாணவன் என்று அறிவிக்கிறார்.
ஒரு மாணவன் இரண்டு பக்கமும் பசுவிற்குத் தலை எப்படி இருக்கும் என்று ஒதுங்கிவிடுகிறான். ஆனால் இன்னொரு மாணவனோ பசுக் கூட்டங்களில் தனது தேடுதலைத் தொடர்கிறான். அவன் தேடியது கிடைத்து விட்டது! இரண்டு புறமும் தலை உள்ளப் பசுவைக் கண்டு விட்டான்! சுற்றி வந்து வணங்கினான். குருவிடம் கண்டகாட்சி பற்றிக் கூறி சிறந்த மாணவனாகத் தேர்வாகிறான். ஒதுங்கிய மாணவன் இது எப்படி சாத்தியம் என்று வினவ குரு விபரம் கூறுகிறார்.
பசு கன்று ஈனும் போது இருபுறமும் தலை இருக்கும் அதாவது பின்புறம் கன்றின் தலை வெளிப்படும் நிலை. அதுதான் இருபுறம் தலை உள்ள பசு. தற்போதும் பசு கன்று ஈனும் போது சுற்றி வந்து வணங்கும் வழக்கம் கிராமங்களில் உண்டு.
அப்படி என்ன சிறப்புத்தன்மைகள் பசுவிற்கு மட்டும். குழந்தைகளுக்கும்த் தாய்ப்பாலுக்கு அடுத்தபடி சிறந்த உணவு பசும் பால் மட்டுமே. அத்துடன் சாணம் சிறந்த கிருமி நாசினி.
இளம் சினைப் பசுவின் சிறுநீர் குழந்தைகளின் கக்குவான் இருமலுக்கு அந்நாளில் சிறந்த நிவாரணி. தற்போது கக்குவான் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்டு விட்டது.
எனவே தான் வீட்டில் புண்ணியா தானம். கணபதி ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் செய்யும் போது பசுவின் சிறுநீரை வீடெங்கும் தெளிப்பது வழக்கம் மேலும் பூஜை முடிந்தது பஞ்சமகாவியம் என்ற பிரசாதம் வழங்குவதும் மரபு.
பஞ்சமகாவியம் என்றால் என்ன? பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் கோ என்றால் பசு என்று பொருள். பசுவிலிருந்து பெறப்படும்
1.பசுஞ்சாணம்
2.சிறுநீர்
3.தயிர்
4.பால்
5.நெய்
என்ற ஐந்து பொருட்களின் கூட்டுக்கலவையே பஞ்ச கோவியம். இன்று இதனை பயிருக்கு சிறந்த கிருமி நாசினியாகவும். உரமாகவும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் ஒரு வார இதழில் படித்த செய்தி. மெத்தப் படித்த இளைஞர் ஒருவர் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை எல்லாம் உதறி கோசாலை நடத்துகிறார்.
ஒரு நாட்டுப் பசுவின் மூலம் நாளொன்றுக்கு 500 ரூபாய் வருவாய் ஈட்டலாம் என்று விவரிக்கிறார். ஒரு லிட்டர் பசுவின் சிறுநீரை அயல் நாடுகள் 200 ரூபாய்க்கு வாங்குவதாகவும், அதனை எப்படி சேகரிப்பது எப்படி விற்பனை செய்வது என்றும் அவரே வகுப்பு எடுக்கிறார். விரும்புவோருக்கு பசுவை லாபகரமாக வளர்ப்பது எப்படி என்றும் கூறுகிறார். அவரே பசுவுக்கும் ஏற்பாடு செய்கிறார். போற போக்கைப் பார்த்தால் பசுவின் கழிவுகளுக்கு அயல்நாடுகள் காப்புரிமை பெற்றாலும் ஆச்சரியம் இல்லை! நாம் அதற்குள் முந்திக் கொள்ள வேண்டும்!
மேலும் திருத்துறைப் பூண்டியை அருத்த கட்டி மேடு என்னும் கிராமத்து விவசாயி ஒருவர் பஞ்சகோவியம் உபயோகித்து நமது பழைய மரபு சார்ந்த நெல் வகைகளில் உயர் விளைச்சல் காண்கிறார். ஒரேதூரில நூற்றுக்கும் மேற்பட்ட கதிர்கள் வெளிவரும் சாதனையையும் கண்டு இருக்கிறார். இதுபற்றி பயிற்சியும் மேற்கொள்கிறார். இப்படி இடையில் நாம் மறந்த பசுவின் பெருமையை மீட்டுத் தந்த இவர்களுக்கு நமது நன்றி.
அர்த்தமுள்ளசம்பிரதாயங்கள் - 5
பசுஞ்சாணத்தின் மேன்மை சொல்லிமாளாது. சொல்லில் அடங்காது. பசுஞ்சாணத்தின் சாம்பல் தான் திருநீறு என்று பெயர் பெறுகிறது. சைவசமயத்தின் புனித சின்னமாகவும் இது கருதப்படுகிறது. சிவன் ராத்திரி அன்று விபூதி மூட்டம் இடும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் உண்டு. அந்த மூட்டம் புகையும் சிறந்த கிருமி விரட்டி.
மேலும் பழங்காலத்தில் தற்போது உள்ளது போல் கொசு விரட்டி கிடையாது. கொசு வலை நாகரீகமும் கிடையாது. இவர்கள் எப்படி கொசுவை சமாளித்தார்கள். வரட்டியை மூட்டம் போட்டு அத்துடன் நொச்சி இலை, வேப்ப இலை, வேப்பம்பூ, மாம்பூ என சீசனுக்குத் தகுந்தாற் போல் சேர்த்துக் கொள்வார்கள். இப்படிப் பல வகைகளிலும் பசுவின் பயன்பாடு முன் நிறுத்தப்பட்டது.
வைத்தீஸ்வரன் கோவில் ஆலயத்தில் திருநீறு கலந்த திருச்சாந்து உருண்டை என்ற அருட் பிரசாதம் வழங்குவார்கள். இது தீராத நோயையும் தீர்த்து வைக்கும். இது பற்றித் "தஞ்சைத் தரணியிலே" என்ற எனது புத்தகத்தில் "பிணிதீர்க்கும் பெம்மான்" என்ற கட்டுரையில் விபரமாகக் காணலாம். எனவேதான் சம்பந்தர் பாடினார்.
மந்திரமாவது நீறுவானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைபங்கன் திருவாலவாயான் திருநீறே. அத்துடன் திருநீற்றை ஏன் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பூசுகிறார்கள்.
1. நெற்றி
2. தோள்பட்டை
3. முழங்கை
4. மணிக்கட்டு
5. மார்பு
இந்த இடங்களில் நீர் கோர்த்துவிடும். அதன் காரணமாக வலி ஏற்படும். இந்த இடங்களில் "ஜாயிண்ட்"களில் தங்கும் அதிகப்படியான நீரை இந்த விழதி
உறிஞ்சிடும். எனவேதான் குழந்தைகளுக்கு, குழந்தை பெற்றவனுக்கு. நோய்வாய் பட்டவர்களுக்கு தலைக்கு ஊற்றியதும் உச்சியில் திருநீற்றை அழுத்தித் தேய்ப்பது வழக்கம். இதன் காரணமாக மண்டையில் நீர் தேங்குவது தவிர்க்கப்படும். மேலும் சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்துத் திணறும் போது வரட்டியின் சாம்பலை மூட்டையாகட்டித் தலையணையாக உபயோகிப்பது வழக்கம். திணறல் குறைந்து சளிமுறிந்து வெளியேறிவிடும்.
ஆனால் இன்று நாகரீகம் காரணமாக முகப்பவுடரைக் குழைத்துப் பட்டை போட்டுக் கொள்கிறார்கள் தன்னைப் பக்திமான்களாகக் காட்டிக் கொள்ள!
சைவ சமயம் திருநீற்றை முன்னிலைப்படுத்துவது யாவரும் இறுதியில் பிடிசாம்பல் ஆவது உறுதி என்று உணர்த்தவே. வைணவ சமயம் திருமண்ணை முன்னிறுத்துவதும் அந்த வகையில்தான். எல்லோரும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாவது திண்ணம் என்று தான் திருமண் உணர்த்துகிறது.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 6
அடிபட்டு ரத்தக்கட்டு ஏற்பட்டால் பசுஞ்சாணத்தை நன்கு பிசைந்து உருண்டையாக்கி விறகு அடுப்பில் போட்டு எரிக்க வேண்டும். உருண்டையில் ஆவி பறக்க சூடு வரும் போது அதை ஒரு காட்டன் துணியில் சுற்றி ஒற்றடம் கொடுத்தால் ரத்தகட்டுக் கரையும். செப்டிக் ஆகாது. இது இன்றும் கிராமங்களில் நடக்கும் எளிய வைத்திய முறை.
மேலும் பசுவின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் "கோரோசனை" பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாகும். சில குழந்தைகள் பிறக்கும் போது பிரசவக் கழிவுகளைக் குடித்து விடும். இது நெஞ்சில் கபமாக்கட்டித் தொந்தரவு கொடுக்கும். இதற்கு அற்புத மருந்து கோரோசனை. இது குடித்த அழக்குகளை மலத்தின் வழியே வெளியேற்றிவிடும். மேலும் குரல் நாண்களை வலுப்படுத்தி நல்ல குரல் வளம் கூட்டும்எனவே தான் ஆணித்தரமாகப் பேசுபவர்களை கோரோசனை நிறைய குடித்தவர்கள் என்று கூறுவது வழக்கம்.
மேலும் இன்று பெரியம்மை தடுக்கப்பட்டமைக்குத் காரணம் பசுக்களே. அம்மைக் கிருமிகளை பசுவின் கன்றுகளுக்குச் செலுத்தி அந்த அம்மைக்கோப்புளத்தில் இருந்து பெறப்படும் மருந்தே அம்மைப்பால் என்னும், அம்மைநோய் தடுப்புமருந்து.
மேலும் பழங்காலத்தில் குழந்தை பிறந்ததும் கையாந்தரைசாறு எடுத்து வீட்டிலேயே கண்மை தயாரிப்பார்கள். அதில் பசு வெண்ணை இட்டுக் குழைத்து உபயோகிப்பார்கள். இதனால் குழந்தைகளின் கண்களில் தீட்சண்யமான பார்வை கிட்டும் கண் நோய்கள் தவிர்க்கப்படும்.
இறந்தும் பசுக்களின் பயன்பாடு அதிகம். இதன் தோல் இசைக்கருவிகளுக்கும் பயன்படுகிறது. காலணி-பர்ஸ்-பெல்ட் தோல்பை என பலவற்றிலும் இதன் பயன்பாடுஅதிகம். இதன் கொம்புகள் சீப்பு சின்னஞ் சிறிய சிமிழ்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன. இது தவிர ஆன்மீகத்திலும் பசுக்களின் ஆதிக்கம் உண்டு.
நாம் ஆண்டவனையே மாடு மேய்க்கும் சிறுவனாக உருவகப் படுத்தியவர்கள் கோபாலன் என்று கூறி வழிபட்டவர்கள். மேலும் திருவிழாக்களில் 'வெண்ணைத் தாழி'
என்று ஒருசிறப்பு வழிபாடும் உண்டு வைணவ சம்பிரதாயத்தில்.
சைவ சமயத்தில் அன்னையே பசுவாகப் பிறந்து இறைவனை வழிபட்டதாகப் பல்வேறு தலவரலாறுகள் கூறுகின்றன. எனவேதான் பாரதியும்
"பாலைப்பொழிந்துதரும் அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா"
என்று பாப்பாவின் மனதிலேயே பசுவை இடம் பிடிக்க வைத்தான்.
இறந்தவர்களை எரியூட்டிய பின் மறுநாள் 'பால் ஒளி' என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. பசுவில் கைகளை நனைத்துப் பின் எரிந்த சாம்பலைக் கலைத்து எலும்புகளை பொறுக்கிச் சிலசடங்குகள் செய்து பின் நீரில் இடுவார்கள். பாலில் கை நனைப்பது ஏன்?
எறிந்த பிணத்திலிருந்து ஏதும் கிருமிகள் தொற்றாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. டெட்டால் போன்று கிருமி நாசினியாகப் பயன்பாடும் உண்டு. மேலும் "எட்டு" என்று ஒரு சடங்கு செய்வார்கள். அன்று மிளகைப் பால்விட்டு அரைத்துப் பாலில் கரைத்து படையில் செய்து அந்தப்பாலை ரத்த்சம்பந்தம் உள்ள அனைவரும் தேய்த்து முழுக வேண்டும் என்பது சம்பிராயம் இது ஏன்?
ரத்த உறவுகல் அதிகம் சோக வசப்பட்டு சரியாக உண்ணாமல், உறங்காமல் மன இறுக்கத்திற்கு ஆளாகித் தவிப்பர். அதைத் தவிர்த்து மூளைக் கொதிப்பை மாற்றி மனதை "ரிலாக்ஸ்" செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்துடன் மனமும் உடலும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல மாற ஆரம்பிக்கும். இத்தகைய அதிசய சக்தி கொண்டது இந்த மிளகுப்பால். நம் முன்னோர்கள் எத்தனை அரிய கண்டு பிடிப்பாளிகள்!
இதை ஒட்டிய ஒரு அருமையான சம்பிரதாயங்கள் கோ பூஜை. அதனை அடுத்தவாரம் பார்ப்போம்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 7
கோ பூஜை
மணிவிழா, கிருகப்பிரவேசம் போன்ற விழாக்களில் இது கண்டிப்பாக உண்டு. அத்துடன் வீடு கட்ட மனைபோடும் போது முதல் நாள் அந்த மனையில் பசுவையும், கன்றையும் கட்டிவைப்பது வழக்கம். மேலும் புதுமனை புகுவிழாவில் முதலில் பசுவையும் கன்றையும் வீட்டிற்குள் பிரவேசிக்க வைப்பார்கள். அப்போது சிறு நீர் இட்டு சாணம் போட்டால் நல்ல சகுனம் என்று சொல்வது வழக்கம்.
இவையெல்லாம் மறை முகமான சுற்றுச் சூழல் பராமரிப்பே. அதாவது தற்போது பலர் கூடும் இடங்களில் 'ப்ளீச்சிங்' பவுடர் தெளிப்பது போன்று அந்த நாளைய "ப்ளீச்சிங்' தெளிப்பே இவை எனவேதான் இத்தனை சிறப்பு வாய்ந்த பசுவிற்காக ஒரு தினத்தையே ஒதுக்கினார்கள். அதாவது மாட்டுப்பொங்கல். இன்று பல தினங்கள் அனுசரிப்புகளுக்கு முன்னோடி இந்த மாட்டுப் பொங்கல் எனலாம்! நம்மவர் எங்கும் எப்போதும் முன்னோடியே!
இப்படிப்பட்ட பசுக்களைப் போஷிக்க பல்வேறு நலத்திட்டங்களும் கண்டார்கள். சாலை ஓரத்தில் பசுக்கள் சொறிந்து கொள்வதற்காக நடுகல் நடுவது. நல்ல வீரியம் மிக்கக் காளைகளை வளர்த்து இலவசமாக இனப்பெருக்கம் செய்ய வழங்குவது என்பது பெரும் பணக்காரர்களின் பங்களிப்பு இதில் கணிசமானது.
மேலும் கறவை நின்ற மாடுகளை போஷிக்கும் விதமாக கிடைசேர்ப்பது. அதாவது. கோடைகாலத்தில் அறுவடை முடிந்ததும், கறவை இல்லாப் பசுக்களையும் - கன்றுகளையும் இலவசமாக மேய்த்து ஆற்றில் தண்ணீர் வந்ததும் அவர் அவரிடம் ஒப்புவிப்பது. இதில் மாடு கருவுறும். கன்றுகளும் வளர்ந்து கருவுறத் தயாராகும். இதன் மூலம் கிடைசேர்ப்பவருக்கு வருமானம். அத்தோடு இது நிலங்களுக்கு சரியான இயற்கை உரமாகவும் அமைந்தது. இப்போது இவை எல்லாம் கனவாய், கதையாய் மாறிவிட்டது.
சுக்கிரன் பரிகாரத் தலமான கஞ்சனூரில் பசுவிற்கும் புல் கொடுப்பது என்ற ஒரு பரிகார சம்பிரதாயமே உண்டு.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 8
சாணத்திற்கு அடுத்தபடியான வி.ஐ.பி மஞ்சள். இந்த மஞ்சளின் மகிமை சொல்லத் தரமன்று. பெண்களின் முக்கிய முகப்பூச்சு. சருமரோக நிவாரணி. வலி நீக்கி என பல பரிணாமங்கள் இதற்கு.
எனவேதான் அம்மை நோய் கண்டவருக்கு மஞ்சளும், வேப்பிலையும் அரைத்துப்பூசி குளிக்கச் செய்வர், மேலும் அம்மை நோய் கண்டவருக்கு வெந்நீர் குளியல் கூடாது. எனவே காலையே ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை நிறைத்துவேப்பிலை போட்டு வெய்யிலில் வைத்து விடுவார்கள். சூரியனின் கதிர்கள் நீரில் ஊடுறுவி தண்ணீர் சற்றே வெது வெதுப்பாக மாறும், கூடவே வேப்பிலையின் சாரமும் இறங்கு ஒரு டெட்டால் குளியலுக்கு இணையான குளியலை சம்பிரதாயம் என்ற போர்வையில் செய்து வைத்தார்கள்.
மேலும் பயறு தேங்காய் கலந்த பொங்கல் - வெங்காயம் கலந்த தயிர்சாதம் நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். இவை எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகள். மேலும் உள்புண்ணை ஆற்றும் ஆற்றல் மிகுந்தவை இந்த உணவுகள்.
மேலும் ஆரத்தி கரைப்பது என்று ஒரு வழக்கம். மஞ்சள் பொடியில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் விட்டுக் கரைத்து அந்த நீரை தாம்பாளத்தில் இட்டு விழா நாயகர் நாயகியை சுற்றி வாசல் எதிரே கொட்டுவார்கள். இதுவும் சாணம் தெளிப்பது போல் ஒரு கிருமி நாசினி தெளிப்பே!
வளைகாப்பு காது குத்து போன்ற வைபவங்களுக்கு மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல் சூட்டி வணங்குவது உண்டு. அருகம்புல் ஒரு அற்புத மூலிகை. மஞ்சளும் சாணமும் அருகம்புல்லும் இணையும் போது அதன் ஆற்றல் அதிகரிக்கிறது.
மேலும் பொங்கல் பானைவைக்கும் போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் சூட்டுவது வழக்கம் ஏன்?
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 9
சாணத்தை நிழலில் வைத்தால் புழு புழுக்கும். ஆனால் அருகம்புல் செருகிய சாணத்தில் புழு உண்டாவதில்லை. இது பிள்ளையார் மகிமை மட்டுமல்ல. அருகம் புல்லின் மகிமையும் கூட. இதன் வீரியம் ஒரு ஆண்டு மட்டுமே. எனவேதான் முதல் ஆண்டு பிடித்தப் பிள்ளையாரை நீரில் கரைத்துப் புதுப் பிள்ளையாரை நடுவீட்டில் மாடத்தில் வைப்பது. இது இடைவிடாது தனது ஆற்றலை வெளியிட்டு சுற்றுச் சூழல் நலம் காக்கும்.
எனவேதான் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்ற வாழ்த்து ஏற்பட்டது. ஆலமரம் அடிமரம் இற்றுப் போனாலும் விழுதுகள் தாங்கிப் பிடிக்கும். அது போல் விழுதாகக் குடும்பத்தைத் தாங்க வேண்டும் என்றே இந்த வாழ்த்து.
அருகம் புல் ஒவ்வொரு கணுவிலும் வேர் பிடிக்கும் குணம் கொண்டது இடையே வெட்டுப்பட்டாலும். கணுவில் இருந்து துளிர்த்து தழைக்கும் அது போல் எந்த இடர் வந்து சிதைத்தாலும் சிதையாமல் குடும்பத்தைக் காக்கும் குணம் வேண்டும் என்றே இந்த வாழ்த்தின் உட்பொருள்.
எனவேதான் அருகம் புல் ஜீஸ் என்று ஒரு புதிய அலை இன்று வீசுகிறது. மேலும் பெண் வயதுக்கு வந்ததும் அருகம்புல்லை நல்ல எண்ணையில் தோய்த்து உச்சியில் வருகுவது என்ற சம்பிரதாயம் ஏற்பட்டது. எது ஏன்?
புதிய மாற்றம் காரணமாக உடல்ரீதியாக, மனரீதியாக பல சிக்கல்கள் பெண்ணுக்கு ஏற்படும். அதைச் சமன் செய்யவே இந்த ஏற்பாடு. மேலும் அம்மிக் குழவியை சுற்றித் தூளியில் இட்டு ஆட்டுவது போன்றவை மறைமுக "செக்ஸ்" கல்வியே. இதை தற்போது பள்ளியில் போதிக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் சம்பிரதாயம் என்ற போர்வையில் ஈஸியாக ஊட்டினர். எனவே பெண் வயதுக்கு வந்ததும் தலைசுற்றாமல் நிலைப்படி தாண்டக் கூடாது என்று ஒரு பிட்டைப் போட்டு வைத்தனர்.
மேலும் உளுந்து சளி இது இடுப்பு எலும்பை வலுப்படுத்தி பிரசவத்தை எளிதாக்க கட்டாயம் செய்து கொடுத்தார்கள் மஞ்சள் பொடி கலந்து துவரம் பருப்பு சேர்த்துப் பொங்கல் என்ற சத்துணவு வழங்கப்பட்டது. இன்று இதை எல்லாம் மறந்து புதுமை என்ற போர்வையில் செயல்படுகிறோம்! பின்னர் அவதியும் படுகிறோம்!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள் - 10
அண்மையில் விகடனில் ஒரு செய்தி படித்தேன் உலகெங்கும் புற்று நோயின் தாக்குதல் அதிகரிப்பு. இதில் இந்தியாவும் விலக்கு அல்ல. இருந்தாலும் மலக்குடல் புற்று நோய் மட்டும் இந்தியாவில் அதிகம் இல்லை. இது ஏன் என்று மேலை நாடுகள் ஆய்வு செய்யக் களம் இறங்கின! மஞ்சளின் மகிமை காரணமாக மலக்குடல் புற்றுத் தாக்கம் குறைவு என்பதே ஆய்வின் முடிவு! புற்று நோய் மட்டுமல்ல மேலும் 250 நோய்களுக்கான எதிர்ப்புத் திறன் மஞ்சளில் உண்டு என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
நிறமியாக சேர்க்கும் மஞ்சளுக்கு இத்தனை மகிமை. இதை உணர்ந்த நம்பவர் மருந்தையே உணவாகக் கண்ட திறன் நம்மை வியக்க வைக்கிறது. இனிமேலாவது நிறத்திற்கு செயற்கைப் பவுடரை உபயோகிப்பது தவிர்த்து மஞ்சளை உபயோகிப்போமா?
மேலும் அந்தக் காலத்தில் பிரசவித்தப் பெண்களுக்கு மூன்று நாட்கள் மஞ்சளை அரைத்துக் கொடுப்பது வழக்கம். இது புண் ஆற்றும் திறன் கொண்டது. இதனால் பிரசவத்தில் ஏற்படும் உள் - மற்றும் வெளிப் புண்கள் எளிதில் ஆறியது. அடி பட்டால் மஞ்சளை அரைத்து சூடு செய்து பற்று போட்டால் வலி வீக்கம் போயே போச்சு. சளி பிடித்தால் இந்தப் பற்றையே முகத்தில் பூசி வர சளி முறிந்து வெளியாகும் சளி இருமல் இருந்தாலும் மஞ்சளும் மிளகும் சேர்த்துப் பசும்பாலில் இட்டுக் காய்ச்சி சாப்பிட இருமல் குறையும்.
குழந்தை பிறந்ததும் அந்த அறையில் பெரிய தாம்பாளத்தில் மஞ்சள் கரைத்த நீரை ஊற்றி வைப்பது வழக்கம். நடுவில் அடுப்புக்கரி ஒரு துண்டு வைப்பது வழக்கம். ஏன் என்று கேட்டால் திருஷ்டிகழிய என்று பதில் வரும் கூலாக.
மேலும் ஒரு இரும்புப் பொருளையும். வாருகோலையும் வைப்பார்கள். இது ஏன் என்று கேட்டால் பேய் பிசாசு அண்டாமல் இருக்க என்று பதில் வரும். இதில் மறைந்து நிற்கும் உண்மையான காரணத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-11
மஞ்சள் நீர் கிருமி நாசினியாகச் சுற்றுச்சூழல் மாசுகள் தாக்காமல் இருக்க.காற்றினிலேய்ருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சவும், கழிவுகளின் வாடையைத் தவிர்க்கவும். உதரணமாக "ப்ரிஜ்ஜில்" கெட்ட வாடை வீசினால் ஒரு கரித்துண்டு வைப்போம் அல்லவா அது போல!! இரும்புப் பொருள் கற்றில் கலந்து வரும் காந்த அலைகளில் இருந்து காக்க, துடைப்பம் பூச்சி பொட்டு வந்தால் சட்டெனப் போட்டு தள்ள!
அத்துடன் கர்பிணிப் பெண்களுக்கு பலகாரம் செய்து எடுத்துப் போகும் போது கரித்துண்டும்,இரும்புத்துண்டும் வைப்பது இதற்காகதான் பிஸ்கட்,முறுக்கு,சிப்ஸ் இவற்றுடன் ஒரு கரித்துண்டு போட்டு வைத்தால் சீக்கிரம் நமத்துப் போகது.
அத்துடன் குழந்தைக்கு நறுக்கு மருந்து கொடுக்கும் போது பயந்து விட்டால் கொழமோர் காய்ச்சிக் கொடுக்கும் போதும் ஒருஇரும்புக் கரண்டி காம்பை நங்கு பழுக்க சூடு செய்து அதை அவற்றில் முக்கி புகையப் புகைய கொடுப்பார்கள் கேட்டால் சொர் என்ற சத்தத்தில் பேய் பிசாசு ஒடிவிடும் என்று கூறி வைத்தார்கள், நாம் நக்கலாக சிரித்து வைப்போம் குழந்தைக்கு கொடுக்கும் மருந்தில் இரும்பு சத்து சேர்ந்தால் கூடுதல் பலன் எனவே இந்த ஏற்பாடு.
குழந்தை பிறந்த பதினோறாம் நாள் அன்று ராஜகீரை என்ற முருங்கைகீரைப் பொரியலை புழுங்கல் அரிசி சாதத்தில் கலந்து நல்லெண்ணை விட்டு கலந்து,அதை சுற்றி கொழுக்கட்டை மாவில் 15 விளக்குகள் செய்து வேக வைத்து நல்லெண்ணை விட்டு ஏற்றி சாதத்தை சுற்றிலும் வைத்து படயல் செய்து வழங்குவார்கள்.
முதலில் பிள்ளை பெற்றவள் சாப்பிட பிறகு குழந்தைகலுக்கு கொடுப்பார்கள் தற்காலம் ஒலிம்பிக் ஜோதி ஏற்றுவது போல! ஒளீமயமான எதிர்காலம் குழந்தைக்கு அமைய வேண்டும் என்பதற்கானப் புறக்காரணிகள் இவை. அத்தோடு ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்கும் பயிற்சியும் இதன் மூலம் வழங்கினார்கள்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-12
முருங்கைக் கீரை ஏன்?
அதிக சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடத் தாய்ப்பால் நன்கு சுரக்கும். இரும்புச்சத்து நிறைந்த இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட பிரசவத்தால் ஏற்பட்ட சக்தி இழப்பு துரிதமாக சமன் செய்யப்படும்.
அத்துடன் முருங்கைக் காய் பத்திய சாப்பாட்டுக்குப் பிரதான மானது என்றும் வைத்தார்கள். முருங்கைப் பூ நல்ல ஆண்மை ஊக்கி(வயாகரா) [பார்க்க பாக்கியராஜின் முந்தான முடிச்சு] இவை எல்லாம் அந்தக் காலத்தில் உண்வின் மூலமாகவே சமன் செய்யப்பட்டது. தற்காலத்தில் "செமன்" டெஸ்ட் செய்து உயிர் அணுக்கள் குறைவு என்று ஆய்வு செய்து மருத்துவம் செய்கிறார்கள். இதை எளிதில் பாட்டாகக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லி வைத்தார்கள்.
சிறு குழந்தைகலுக்கு ஒரு விளையாட்டுப் பாடல் ஒன்று உண்டு. தற்கால 'மியூசிக் சேர்' போன்ற விளையாட்டு அது பாடலின் முடிவில் சின்ன பொண்ணே காலைமடக்கு என்று சொல்வார்கள். குழந்தை உடனே காலை மடக்க வேண்டும். இந்த விளையாட்டு மூலம் குழந்தைக்கு மூளைத்திறன் எப்படி இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. குழந்தைக்கு பாடல் அமைத்தவர்கள் முருங்கை பூவின் திறத்தையும் அதிலேயே கூறி வைத்தார்கள். இதோ அந்தப்பாடல்.
பெரியவர்: ஒரு பட்டினம் திருபட்டினம்
ஒரியா மங்கலம் பண்னண்டு ஆனை
செக்கு திரும்பி மாடுகன்று
வார வேளை மஞ்சத்தண்ணி கரைக்கிறவேளை
ஒப்பன் பேரு என்ன?
குழந்தை: முருங்கைப் பூ
பெரியவர்: முருங்கைப்பூவும் தின்னாராம்
முன்னாம் தண்ணியும் குடிச்சாராம்
நண்டு சுட்ட கரையிலே
குண்டுமணி கூத்தாடுது
சின்னப் பொண்ணே காலை மடக்கு!
என்று பாடி முடிக்கையில் யார் முன்னதாகக் காலை நீட்டி மடக்குகிறார் என்பதே போட்டி இதன் மூலம் பேச்சுப் பயிற்சி, கற்றல் பயிற்சி, கூடவே " பிசியோதெரபி" பயிற்சி ஒரு கல்லில் மூன்று மாங்காய்!!
அடுத்து வளர் இளம் பெண் பருவத்திலும் முருங்கையின் மகத்துவம் போதிக்கப் படுகிறது, எப்படி?
புதைக் காய் ஆட்டம் என்று ஒரு விளையாட்டு, ஏழு கற்களை வைத்து விளையாடும் விளையாட்டு, அதில் ஒரு பாடல்
பெண் 1: ஏழைப் பெண்ணே ஜானகி
என்னகறி சமைச்சே
பெண் 2: பல்லில்லா கிழவனுக்கு
முள்ளில்லா முருங்கை
கிள்ளிப் போட்டு சமைச்சேன், நான்
கிள்ளிப் போட்டு சமைச்சேன்.
அதாவது ஏழைகலுக்கும் சக்தி அளிக்கும் முருங்கை என்பது மறை முகமாக வலியுருத்தபட்டது.தற்போது கீரை சாப்பிடுவது கெளரவம் என்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறோம்.
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-13
திருமணத்தின் போது பாலிகை வளர்ப்பு என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. நவதானியங்களை ஜந்து நாட்கள் முன்னரே ஊறப் போட்டு வளர்ப்பார்கள் அதற்கு தூப தீபம் காட்டுவார்கள் விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு சடங்கே இது, இதனைத் தென் மாவட்டங்களில் "முளைப்பாரி" என்னும் பெரு விழாவாக இன்றும் ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடு வார்கள் . தீபாவளி , பொங்கல் பண்டிகைகளை விட முக்கிய விழா அது,
அத்தோடு திருமணத்தின் போது அரசாணிக்கால் நடுவது என்று ஒரு சம்பிரதாயம். அதாவது பூவரசன் கிளை ஒன்று இது ஆண் ஒதியன் கிளை இது பெண் இதில் ஒதியன் பலகை குளிச்சியானது, வளைந்து கொடுக்கும் தன்மையுடையது. எனவே அது பெண் என்று கூறி வைத்தார்கள் இந்த இரண்டு கிளைகளையும் பந்தலில் நாட்டி மஞ்சள் குங்குமம் சந்தனம் பூசி பூச்சூட்டி பட்டு கட்டி பூசித்தப்பிறகே திருமண சடங்குகள் ஆரம்பம். திருமணம் முடிந்தபின்னர் இந்த இரண்டு கிளைகளையும் நட்டு மணமக்கள் நீர் ஊற்றி நன்கு பராமரிக்க வேண்டும் . மரம் செழித்தால் தான் வாழ்க்கை செழிக்கும் என்று ஒரு பிட்டையும் போட்டார்கள் ஏன்??
அந்த காலத்திலேயே மரம் வளர்ப்பு பற்றி அரசின் ஆனையே இது. மரம் வளர மழை பெருகும், சுற்றுச் சூழல் சிறக்கும் என்றே இந்த ஏற்பாடுகள். ஆண்மகன் பூவரசன் மரம் போல் உறுதியாக நிமிர்ந்து நிற்க வேண்டும்,பெண் குளிந்த பேச்சுடன் வளைந்து கொடுத்து நீக்கு போக்குடன் இல்லறம் காண வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். அடுத்து மெட்டி போடுவது ! ஏன்? பின்னர் கூறுகிறேன்..
அடுத்து நலுங்கு.இது தம்பதிகள் பேசிப் பழகவும் கூச்சம் தெளியவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும் செய்த ஏற்பாடு. ஆனால் இன்று இதுவே போட்டி மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் ஜ. பி .எல் கிரிக்கெட் ஆட்டமென உசுப்பேற்றப் படுகிறது!!
அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்-14
அடுத்து கட்டுசாதம்!!
பத்து பசையோடு போனால் தான் உறவு ஒட்டும் என்று கூறி வைப்பார்கள். உண்மையில் இதன் பிண்ணனி என்ன?
அந்த காலத்தில் வாகன வசதியும் ஒட்டல் வசதியும் இல்லை எனவே வழியில் சாப்பாட்டுக்கு வழி செய்யும் வகையில் கட்டுசாதம் என்ற சம்பிரதாயம். கூடவே பலகாரச்சீர். இன்று ப்ளேனில் சென்றால் கூட இது தொடரும் அதிசயம், அர்த்தம் புரியாது அனைவரும் மேற்கொல்லும் சம்பிரதாயம் இது, மணமகன் வீட்டில் ஆடம்பரமாக டின்னர் ஏற்பாடு செய்யும் போது இந்த கட்டு சாதக் கூடை வேஸ்டாகக் குப்பைக்குப் போகிறது.
அதற்கு பதிலாக அந்தக் கட்டுசாதத்தை ஏதாவது அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லத்திற்கு வழங்கலாம் அல்லவா?சிந்திப்போமா? அடுத்து காலில் விழுந்தால் பெண்ணுக்கும்,மாப்பிள்ளைக்கும் தனியே பணம் வைத்துக் கொடுப்பது மொய் அல்லாது ஏன் என்றால் புது மணமக்களின் பக்கெட்மணிக்காக ஏற்பட்ட சம்பிரதாயமிது!!
தற்போது அதையும் கணக்கு போட்டு பெரிசுகள் வசூலிக்கும் அவலம். தற்போதும் சில குடும்பங்களில் ஒரு பழக்கம் உண்டு குறிப்பாக இது கிராமத்தில் இன்றும் நடைபெறுகிறது.. பெண்ணுக்கு கிடைக்கும் பணத்தை அப்படியே ஒரு ஆட்டுகுட்டியோ, அல்லது கன்றுக்குட்டியோ பணத்திற்கு ஏற்ப வாங்கிக் கொடுத்துவிடுவது அதன் முலம் வரும் வருமானம் பெண்ணின் சொந்த செலவுக்கு மட்டுமே, எவ்வளவு உயர்ந்த சிந்தனை.
அடுத்து பெண், மாப்பிள்ளை சாப்பிட பணம் வைப்பது ,கூடவே தோழர், தோழிகலுக்கும்!நானும் தோழி தோழர் என்று கூறி முறையில்லாதவர்கள் கூட முறையற்ற வழியில் பணம் பறிப்பது தன்னுடைய கெளரவத்தை நிலை நாட்டுவதாகக் கூறிக்கொண்டு அகெளரவத்தை அரங்கேற்றும் இவர்கள் இன்றும் இருக்கிறார்கள்!!