மகப்பேரு மருத்துவன்
கர்ப்பகரட்சிகாம்பிகை
வலி
நமது வலிமையைச் சோதிக்கும் சோதனைக் களம் வலி .சாதாரண காயங்கள் ஏற்படுத்தும் வழியைத் தாங்காது அலறுகிறோம் . நாம் மரணத்தின் தலை வாசலைத் தொடும் பிரசவ வலியை எப்படித் தாங்குகிறாள் பெண் . இது தாய்மைக்கே உரிய தனி வலி . பிரசவ வலியைத் தாங்கும் மன வலிமையே பின்னாளில் பிள்ளைகள் ஏற்படுத்தும் மனவலியைத் தாங்கும் பயிற்சிக் களம் ஆகிறது .
வயிற்றில் சிசு உதைப்பதைத் தாங்கிப் பழகுவதால் பின்னாளில் வளர்ந்த பிள்ளைi நெஞ்சில் எட்டி உதைப்பதை ஜீரணிக்க முடிகிறது. ஜீரணித்து அவளே ஷுணித்துப் போகவும் ஏதுவாகிறது . இப்படிப்பட்ட வலிமையான பிரசவ வலி ஏற்படும்போது அனைத்து வலியை உணர்ந்த தாய் வீட்டில் தாயின் அருகாமையில் இருந்தால் சற்றே ஆறுதல் தாய் அறியாத சூல் இல்லை என்ற பழமொழியே உண்டு .
தற்போது கணவன் உடன் இருக்க வேண்டும் எனும் புதிய அலை மேலை நாடுகளில் உருவாக்கி வருகிறது . இது வரவேற்கத் தக்கதே . வலியை உணராத கணவன் வலியின் அவலத்தை நேரில் காணமுடியும் அல்லவா ? அப்போது பெண்களின் கஷ்டத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிகும் அல்லவா ? ஆண்டவனையே அம்மையே அப்பா என அன்னையை முன்னிட்டுப் பாடிப் பரவுகின்றனர் அடியார்கள் முற்றும் துறந்த பட்டினத்தடிகள் கூட தாயின் இருதிச்சடங்கு செய்யத் தவறவில்லை.
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து தொந்தி சரியப் பெற்றெடுத்த அன்னை என்று பெருமைப்படுத்தப்படுகிறாள். இருந்தாலும் 'பெண்ணாகப் பிறந்தலே பெரும் பிழை' என்று கல்விப் பால் மறுத்து கள்ளிப் பால் தரும் அவலம் இன்னும் தொடர்கதை.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்
-குறள்
இறைவன் உறைவும் இடம் கருவறை. அந்தக் கருவறையைத் தன் உடலிலேயே கொண்டு இருக்கும் அன்னை ஓர் ஆலயம். ஆம்|.
விஞ்ஞானி மெய்ஞானி இருவருமே தாயின் கருவறையில் வாசம் செய்து வந்தவரே. ஆயினும் தாயின் வசம் கடைசி வரை உண்ர்பவர் ஒரு சிலரே .
கருவிலேயே கடவுள் பற்றி அறிந்தவர்களும் உண்டு. பிரகலாதன் கருவிலேயே ஹரி நாமம் ஜெபித்து தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டான்.அபிம்ன்யுவின் மகன் கண்ணனின் அறிவுரை கருவிலேயே கேட்டு அதற்கு இணையான உரை எது அன்ரு பரீட்சித்து, பரீட்சித்து அதன் காரணமாக் பரீட்சித்து என்றே பேர் பெற்றாள். எனவே தான் கருவறையே முதல் கலாசாலை என்கின்றனர்.
கருவுற்ற நாள் முதலாக உன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும் நானும்
கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தென்
என்று பாடிப் பவுகின்றனர். ஒரு சிலருக்குத் தான் கருவிலேயே திருவாகும் பாக்கியம் கிட்டுகிறது. அப்படித் திருவாகிய கருவைத் தாங்க்கும் தாயும் பாக்கியசாலியே. தாயின் சுவாசத்திற்கே தனி வாசம் உண்டு. அந்த வாசம் அனைவரும் நுகரத் தானே தாயும் ஆன தயாபரனைக் காண்போமா?திருச்சிராப்பள்ளி|.
தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் எனப் போற்றப்படும் நகர். இது தொழில் மட்டுமல்ல. அருள் நகரும் கூட. சீரங்கம்-திருவானைக்காவல்-சமயபுரம்-வயலூர் என அருகருகே அருள் மிகு ஆலயங்கள். கல்லணை-முக்கொம்பு எனச் சுற்றுலா மையமும் கூட. கைலாய பர்வதத்தின் சிகரங்களில் ஒன்று. எனவே திரிசிரபுரம் என்று பெயர் என்பர். 'சிரா' என்ற பெயர் வந்தது என்கிறார் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்.
எது உண்மையோ நாம் அறியோம். மகேந்திர பல்லவன் அமைத்தக் குடவரைக் கோயில் எனக் கல்வெட்டு கூறுகின்றது. இரும்பு, மரம், செங்கல் இன்றி ஆண்டவனுக்குப் பல ஆலயம் அமைத்தவன் என இவனது மெய்கீர்த்தி கூறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் அம்பாரியுடன் யானை படுத்து இருப்பது போன்ற தோற்றம். மலையே ஆனை முகத்தோனின் உருவில்.எனவேதான் உச்சியில் பிள்ளையார் கோவிலோ? யோசித்தபடியே உள்ளே நுழைகிறோம்.
உள்ளே...
புதியதோர் உலகம். மலையைக் குடைந்து ஒரு மாபெரும் கோவில். எத்தனை சிற்ப வேலைப்பாடுகள். இதனைக் காணும் போது பார்த்தென் - ரசித்தென் -இனித்தென் -மகிழ்ச்சியில் திளைத்தென். ஒரு படித் தென் நான் குடிதென் எனும் பாடல் நம் நினைவுக்கு வருகிறது. மாலை மயங்குகின்ற் நெரம்.
மலைக்கோட்டையைக் கலைக் கோட்டையாய்க் காட்சி அளிக்கிறது. நமக்குத் தல புராணம் மனக்கண்ணில் தெரிகிறது.
பூம்புகார் வணிகன் இரத்தின குப்தன். இவன் மகள் இரத்னாவதியை சிராப்பள்ளி மணமுடிக்கிறான். இரத்னாவதி மலைக்கோவில் செவ்வந்த்நாதர் பக்தை. தினமும் அவரைத் தரிசித்து அவர் அருளலே தாய்மை நிலை எய்துகிறாள். பேறு காலம் நெருங்கியது. தாய் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வருகிறாள். மகள் பிரசவ காலத்தில் உடனிருக்க ஓடி வருகிறாள். காவிரியில் நீர் பெருக தாயின் கண்களில் செந்நீர் பெருகுகிறது. பிரசவ வலி கண்ட மகள் தாய் வராமல் தவிக்கிறாள். செவ்வந்தி நாதரைக் கூவி அழைக்கிறாள்.
இறைவன் சேயின் அழைப்பு கேட்டு தாயாய் உருமாறி உரிய பொருட்களுடன் ஓடி வந்து தாதியாய் பணிவிடை செய்கிறான். ஏழு நாட்கள் தாயையும் சேயையும் பேணிக் காக்கிறான்.
குழவி ஈன்றவட்கு அருமருந்து
எண்ணையும் கொடுத்தே
ஏலுதினத்து அழகு இழைத்திடும்
செயல் எல்லாம் இயற்றி
அழகு தொட்டினுள் துயிற்றி
அங்குஒரு மதி அளவாம்
மழு களிற்றினை முருகவெள்
எனும்படி வளர்ந்தால் -செவ்வத்திப் புராணம்
பின்னர் உண்மைத் தாய் காவிரி நீர் வடிய வருகிறாள். மகள் திகைக்கிறாள். செவ்வத்தி நாதர் மட்டுவார் குழலியுடன் இடா வாகனத்தில் காட்சி தாயும் மகளும் கசிசின்றனர். நாமுந்தான். இதனை,
தாயுமாய் எனக்கே
தலைக் கண்ணுமாய்ப்
பேயணையும்
ஆண்ட பெருந்தகை
என்று பாடி கசிகிறார் நாவுக்கரசர்.அது முதல் செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற பெயர் பெறுகிறார்.
தாயின் கனிவு கொண்ட இவர் தந்தையின் கண்டிப்பும் கொண்டவர். தண்டிக்கவும் தயங்காதவர். கருணை மாரி பொழியும் இவர் மண் மாரி பெய்யச் செய்தார் என வரலாறு கூறுகிறது.
நாகலோகத்தில் இருந்து செவ்வந்தி மலர் கொணர்ந்து செவ்வந்தி நாதனைப் பூசித்து வருவார் சாரமா முனிவர். அம்மலரின் வாசம் கண்டு தன் வசம் இழக்கிறான் உறையுர் சோழன்.இறைவனுக்குச் சூட்ட வேண்டிய மலரைக் கவர்ந்து தன் மனைவிக்கு சூடிடுகிறான். மக்கள் தவறு செய்தால் மன்னன் நீதி வழங்க வேண்டும் என்பது நியதி. மன்னனே தவறு செய்தால் மகேசன் தானே நீதி வழங்குவது மரபு. எனவே மலைக் கோவில் தனில் வாழும் மகேசனிடம் முறையிடுகிறார் முனிவர். இறைவன் சினந்து உறையூர் பக்கம் திரும்பி நின்று கோபத்தால் சிவக்க உறையூர் மண்மாரி பெய்தது என்கிறது தல வரலாறு. நந்தி துவார பால்கர்- பரிவார தேவதைகள் எல்லாம் கோவிலின் கிழக்கில் இருக்க தாயுமானவர் மட்டும் மேற்கே பார்த்தபடி இன்றும் காட்சி அளிக்கிறார். இது ஒரு புதுமை. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நடந்த நிகழ்ச்சி-அனைத்து சக்திகளையும் வணங்குகிறோம். தாயுமானவர் சந்நிதி வருகிறோம்.இந்த தாயுமானவரை பாடிப் பரவிய அடியார் ஒருவர் திருச்சியிலே வாழ்ந்தார்.அவர் பெரும் தாயுமானவர்.அவர் பாடலை சந்நிதியில் ஓதுகிறோம்.
பாராயோ என்னை முகம்
பார்த்தொருகால் என் கவலை
தியராயோ வாய் திறந்து
செப்பாய் பராபரமே.
நம் கவலை குறைந்த உணர்வு. திருச்சிக்குப் பெருமை சேர்த்தப் பெரியார்கள் எத்தனை பேர். தாயுமானவர் - மெளன குரு - திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - அண்மையில் மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எனப் பட்டியல் நீளுகிறது.நமக்குச் சற்றே பெருமையாய் இருக்கிறது.
தாயாகி நின்று வழி காட்டியவன். சரியான தந்தையாகவும் நின்று நமக்கு நல்வழி காட்டுகிறான்.
'தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
அவையத்து முந்தியிருப்பச் செயல்''
அதுபோன்று தன் மகள் பெயரால் உச்சிப் பிள்ளையார் கோவில் எனப் பெயர் சூட்டி அந்த மகனின் புகழின் பின்னே தன்னை ஒளித்துக் கொண்டு ஒளிர்ந்து நிற்கும் ஆதர்சத் தந்தை இவன். அந்த தந்தையின் வாஞ்சை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய பாடம்.
பிள்ளையார் கோவில் காண மேலே ஏறுகிறோம். பாறையில் வேர் விட்டு செழித்து வளர்ந்த வேப்பமரம், நமக்குள் நம்பிக்கை ஊட்டுகிறது.நமது மனமெனும் பாறையிலும் பக்தி எனும் பயிர் செழித்து வளரும் என்ற நம்பிக்கை நமக்குள் வேர் விடுகிறது.அதற்கு அருளுமாறு ஆனைமுகத்தானிடம் வேண்டுகிறோம். சிராப்பள்ளிக் குன்றின் மீது நின்று பார்த்தால் திருச்சி மாநகரே கண்முன் விரிந்து பந்து காட்சி அளிக்கிறது.பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வயிரமென நகரம் ஜொலிக்கிறது.மின் விளக்குகள் ஒளிப்பொருட்டுகளை உதிர்க்க வானவீதியில் ஜொலிக்கும் நட்சத்திரகள் தரை இறங்கி வந்தது எப்படி என்று யோசிக்கிறோம். அத்தனை வண்ண வண்ண விளக்குகளின் அணிவகுப்பு. நம் மனக் கண்ணிலும் ஒளிமயமான எதிர்காலத் தோற்றம்.
ஆனை முகத்தான் முன்னே கண்மூடித் தியானிக்கிரறோம்.ஆனை முகத்தானின் தோற்றம் உண்மையில்' ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் குறியீடே. எனவே தான் யானையைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு பரவசம். குழந்தைகளுக்கும் ஒரு குதூகலம். எனவேதான், ஆனை ஆனை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
என்று யானையை முன்னிறுத்திக் குழந்தைகளுக்குக் கடவுள் பெயர் பற்றிய அறிவை ஊட்டுகிறோம். பக்தி மார்கத்தில் இன்னுமும் குழந்தையாய் நிற்கும் நாம் பக்தியில் பழக வரமளிக்க வேண்டுகிறோம். வழிகாட்டுகிறார் திருஞானசம்பந்தர். யானை யானை என்று கூறி பிள்ளையைப் பாடுவது போல் அப்பனை பாடும் அருமை. அது நமது சீர்காழிப் பிள்ளையின் தமிழுக்கே உரிய தனி உடமை. காது குளிரக் கேட்டோமா? கேட்டு நெஞ்சம் குளிருவோமா?
நன்றுடை யானை
தீயதில்லானை
நரை வெள்ளேறு
குன்றுடையானை
உமை ஒரு பாகம்
உடையானைச்
சென்றடையாத திரு
உடையானைச்
சிராப்பள்ளிக் குன்றுடையானைக்
கூற என்னுள்ளம் குளிரும்மே.
-திருஞானசம்பந்தர்
_
நமது வலிமையைச் சோதிக்கும் சோதனைக் களம் வலி .சாதாரண காயங்கள் ஏற்படுத்தும் வழியைத் தாங்காது அலறுகிறோம் . நாம் மரணத்தின் தலை வாசலைத் தொடும் பிரசவ வலியை எப்படித் தாங்குகிறாள் பெண் . இது தாய்மைக்கே உரிய தனி வலி . பிரசவ வலியைத் தாங்கும் மன வலிமையே பின்னாளில் பிள்ளைகள் ஏற்படுத்தும் மனவலியைத் தாங்கும் பயிற்சிக் களம் ஆகிறது .
வயிற்றில் சிசு உதைப்பதைத் தாங்கிப் பழகுவதால் பின்னாளில் வளர்ந்த பிள்ளைi நெஞ்சில் எட்டி உதைப்பதை ஜீரணிக்க முடிகிறது. ஜீரணித்து அவளே ஷுணித்துப் போகவும் ஏதுவாகிறது . இப்படிப்பட்ட வலிமையான பிரசவ வலி ஏற்படும்போது அனைத்து வலியை உணர்ந்த தாய் வீட்டில் தாயின் அருகாமையில் இருந்தால் சற்றே ஆறுதல் தாய் அறியாத சூல் இல்லை என்ற பழமொழியே உண்டு .
தற்போது கணவன் உடன் இருக்க வேண்டும் எனும் புதிய அலை மேலை நாடுகளில் உருவாக்கி வருகிறது . இது வரவேற்கத் தக்கதே . வலியை உணராத கணவன் வலியின் அவலத்தை நேரில் காணமுடியும் அல்லவா ? அப்போது பெண்களின் கஷ்டத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிகும் அல்லவா ? ஆண்டவனையே அம்மையே அப்பா என அன்னையை முன்னிட்டுப் பாடிப் பரவுகின்றனர் அடியார்கள் முற்றும் துறந்த பட்டினத்தடிகள் கூட தாயின் இருதிச்சடங்கு செய்யத் தவறவில்லை.
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து தொந்தி சரியப் பெற்றெடுத்த அன்னை என்று பெருமைப்படுத்தப்படுகிறாள். இருந்தாலும் 'பெண்ணாகப் பிறந்தலே பெரும் பிழை' என்று கல்விப் பால் மறுத்து கள்ளிப் பால் தரும் அவலம் இன்னும் தொடர்கதை.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்
-குறள்
இறைவன் உறைவும் இடம் கருவறை. அந்தக் கருவறையைத் தன் உடலிலேயே கொண்டு இருக்கும் அன்னை ஓர் ஆலயம். ஆம்|.
விஞ்ஞானி மெய்ஞானி இருவருமே தாயின் கருவறையில் வாசம் செய்து வந்தவரே. ஆயினும் தாயின் வசம் கடைசி வரை உண்ர்பவர் ஒரு சிலரே .
கருவிலேயே கடவுள் பற்றி அறிந்தவர்களும் உண்டு. பிரகலாதன் கருவிலேயே ஹரி நாமம் ஜெபித்து தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டான்.அபிம்ன்யுவின் மகன் கண்ணனின் அறிவுரை கருவிலேயே கேட்டு அதற்கு இணையான உரை எது அன்ரு பரீட்சித்து, பரீட்சித்து அதன் காரணமாக் பரீட்சித்து என்றே பேர் பெற்றாள். எனவே தான் கருவறையே முதல் கலாசாலை என்கின்றனர்.
கருவுற்ற நாள் முதலாக உன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும் நானும்
கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தென்
என்று பாடிப் பவுகின்றனர். ஒரு சிலருக்குத் தான் கருவிலேயே திருவாகும் பாக்கியம் கிட்டுகிறது. அப்படித் திருவாகிய கருவைத் தாங்க்கும் தாயும் பாக்கியசாலியே. தாயின் சுவாசத்திற்கே தனி வாசம் உண்டு. அந்த வாசம் அனைவரும் நுகரத் தானே தாயும் ஆன தயாபரனைக் காண்போமா?திருச்சிராப்பள்ளி|.
தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் எனப் போற்றப்படும் நகர். இது தொழில் மட்டுமல்ல. அருள் நகரும் கூட. சீரங்கம்-திருவானைக்காவல்-சமயபுரம்-வயலூர் என அருகருகே அருள் மிகு ஆலயங்கள். கல்லணை-முக்கொம்பு எனச் சுற்றுலா மையமும் கூட. கைலாய பர்வதத்தின் சிகரங்களில் ஒன்று. எனவே திரிசிரபுரம் என்று பெயர் என்பர். 'சிரா' என்ற பெயர் வந்தது என்கிறார் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்.
எது உண்மையோ நாம் அறியோம். மகேந்திர பல்லவன் அமைத்தக் குடவரைக் கோயில் எனக் கல்வெட்டு கூறுகின்றது. இரும்பு, மரம், செங்கல் இன்றி ஆண்டவனுக்குப் பல ஆலயம் அமைத்தவன் என இவனது மெய்கீர்த்தி கூறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் அம்பாரியுடன் யானை படுத்து இருப்பது போன்ற தோற்றம். மலையே ஆனை முகத்தோனின் உருவில்.எனவேதான் உச்சியில் பிள்ளையார் கோவிலோ? யோசித்தபடியே உள்ளே நுழைகிறோம்.
உள்ளே...
புதியதோர் உலகம். மலையைக் குடைந்து ஒரு மாபெரும் கோவில். எத்தனை சிற்ப வேலைப்பாடுகள். இதனைக் காணும் போது பார்த்தென் - ரசித்தென் -இனித்தென் -மகிழ்ச்சியில் திளைத்தென். ஒரு படித் தென் நான் குடிதென் எனும் பாடல் நம் நினைவுக்கு வருகிறது. மாலை மயங்குகின்ற் நெரம்.
மலைக்கோட்டையைக் கலைக் கோட்டையாய்க் காட்சி அளிக்கிறது. நமக்குத் தல புராணம் மனக்கண்ணில் தெரிகிறது.
பூம்புகார் வணிகன் இரத்தின குப்தன். இவன் மகள் இரத்னாவதியை சிராப்பள்ளி மணமுடிக்கிறான். இரத்னாவதி மலைக்கோவில் செவ்வந்த்நாதர் பக்தை. தினமும் அவரைத் தரிசித்து அவர் அருளலே தாய்மை நிலை எய்துகிறாள். பேறு காலம் நெருங்கியது. தாய் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வருகிறாள். மகள் பிரசவ காலத்தில் உடனிருக்க ஓடி வருகிறாள். காவிரியில் நீர் பெருக தாயின் கண்களில் செந்நீர் பெருகுகிறது. பிரசவ வலி கண்ட மகள் தாய் வராமல் தவிக்கிறாள். செவ்வந்தி நாதரைக் கூவி அழைக்கிறாள்.
இறைவன் சேயின் அழைப்பு கேட்டு தாயாய் உருமாறி உரிய பொருட்களுடன் ஓடி வந்து தாதியாய் பணிவிடை செய்கிறான். ஏழு நாட்கள் தாயையும் சேயையும் பேணிக் காக்கிறான்.
குழவி ஈன்றவட்கு அருமருந்து
எண்ணையும் கொடுத்தே
ஏலுதினத்து அழகு இழைத்திடும்
செயல் எல்லாம் இயற்றி
அழகு தொட்டினுள் துயிற்றி
அங்குஒரு மதி அளவாம்
மழு களிற்றினை முருகவெள்
எனும்படி வளர்ந்தால் -செவ்வத்திப் புராணம்
பின்னர் உண்மைத் தாய் காவிரி நீர் வடிய வருகிறாள். மகள் திகைக்கிறாள். செவ்வத்தி நாதர் மட்டுவார் குழலியுடன் இடா வாகனத்தில் காட்சி தாயும் மகளும் கசிசின்றனர். நாமுந்தான். இதனை,
தாயுமாய் எனக்கே
தலைக் கண்ணுமாய்ப்
பேயணையும்
ஆண்ட பெருந்தகை
என்று பாடி கசிகிறார் நாவுக்கரசர்.அது முதல் செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற பெயர் பெறுகிறார்.
தாயின் கனிவு கொண்ட இவர் தந்தையின் கண்டிப்பும் கொண்டவர். தண்டிக்கவும் தயங்காதவர். கருணை மாரி பொழியும் இவர் மண் மாரி பெய்யச் செய்தார் என வரலாறு கூறுகிறது.
நாகலோகத்தில் இருந்து செவ்வந்தி மலர் கொணர்ந்து செவ்வந்தி நாதனைப் பூசித்து வருவார் சாரமா முனிவர். அம்மலரின் வாசம் கண்டு தன் வசம் இழக்கிறான் உறையுர் சோழன்.இறைவனுக்குச் சூட்ட வேண்டிய மலரைக் கவர்ந்து தன் மனைவிக்கு சூடிடுகிறான். மக்கள் தவறு செய்தால் மன்னன் நீதி வழங்க வேண்டும் என்பது நியதி. மன்னனே தவறு செய்தால் மகேசன் தானே நீதி வழங்குவது மரபு. எனவே மலைக் கோவில் தனில் வாழும் மகேசனிடம் முறையிடுகிறார் முனிவர். இறைவன் சினந்து உறையூர் பக்கம் திரும்பி நின்று கோபத்தால் சிவக்க உறையூர் மண்மாரி பெய்தது என்கிறது தல வரலாறு. நந்தி துவார பால்கர்- பரிவார தேவதைகள் எல்லாம் கோவிலின் கிழக்கில் இருக்க தாயுமானவர் மட்டும் மேற்கே பார்த்தபடி இன்றும் காட்சி அளிக்கிறார். இது ஒரு புதுமை. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நடந்த நிகழ்ச்சி-அனைத்து சக்திகளையும் வணங்குகிறோம். தாயுமானவர் சந்நிதி வருகிறோம்.இந்த தாயுமானவரை பாடிப் பரவிய அடியார் ஒருவர் திருச்சியிலே வாழ்ந்தார்.அவர் பெரும் தாயுமானவர்.அவர் பாடலை சந்நிதியில் ஓதுகிறோம்.
பாராயோ என்னை முகம்
பார்த்தொருகால் என் கவலை
தியராயோ வாய் திறந்து
செப்பாய் பராபரமே.
நம் கவலை குறைந்த உணர்வு. திருச்சிக்குப் பெருமை சேர்த்தப் பெரியார்கள் எத்தனை பேர். தாயுமானவர் - மெளன குரு - திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - அண்மையில் மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் எனப் பட்டியல் நீளுகிறது.நமக்குச் சற்றே பெருமையாய் இருக்கிறது.
தாயாகி நின்று வழி காட்டியவன். சரியான தந்தையாகவும் நின்று நமக்கு நல்வழி காட்டுகிறான்.
'தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
அவையத்து முந்தியிருப்பச் செயல்''
அதுபோன்று தன் மகள் பெயரால் உச்சிப் பிள்ளையார் கோவில் எனப் பெயர் சூட்டி அந்த மகனின் புகழின் பின்னே தன்னை ஒளித்துக் கொண்டு ஒளிர்ந்து நிற்கும் ஆதர்சத் தந்தை இவன். அந்த தந்தையின் வாஞ்சை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய பாடம்.
பிள்ளையார் கோவில் காண மேலே ஏறுகிறோம். பாறையில் வேர் விட்டு செழித்து வளர்ந்த வேப்பமரம், நமக்குள் நம்பிக்கை ஊட்டுகிறது.நமது மனமெனும் பாறையிலும் பக்தி எனும் பயிர் செழித்து வளரும் என்ற நம்பிக்கை நமக்குள் வேர் விடுகிறது.அதற்கு அருளுமாறு ஆனைமுகத்தானிடம் வேண்டுகிறோம். சிராப்பள்ளிக் குன்றின் மீது நின்று பார்த்தால் திருச்சி மாநகரே கண்முன் விரிந்து பந்து காட்சி அளிக்கிறது.பட்டுக் கருநீலப் புடவையில் பதித்த நல் வயிரமென நகரம் ஜொலிக்கிறது.மின் விளக்குகள் ஒளிப்பொருட்டுகளை உதிர்க்க வானவீதியில் ஜொலிக்கும் நட்சத்திரகள் தரை இறங்கி வந்தது எப்படி என்று யோசிக்கிறோம். அத்தனை வண்ண வண்ண விளக்குகளின் அணிவகுப்பு. நம் மனக் கண்ணிலும் ஒளிமயமான எதிர்காலத் தோற்றம்.
ஆனை முகத்தான் முன்னே கண்மூடித் தியானிக்கிரறோம்.ஆனை முகத்தானின் தோற்றம் உண்மையில்' ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் குறியீடே. எனவே தான் யானையைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு பரவசம். குழந்தைகளுக்கும் ஒரு குதூகலம். எனவேதான், ஆனை ஆனை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
என்று யானையை முன்னிறுத்திக் குழந்தைகளுக்குக் கடவுள் பெயர் பற்றிய அறிவை ஊட்டுகிறோம். பக்தி மார்கத்தில் இன்னுமும் குழந்தையாய் நிற்கும் நாம் பக்தியில் பழக வரமளிக்க வேண்டுகிறோம். வழிகாட்டுகிறார் திருஞானசம்பந்தர். யானை யானை என்று கூறி பிள்ளையைப் பாடுவது போல் அப்பனை பாடும் அருமை. அது நமது சீர்காழிப் பிள்ளையின் தமிழுக்கே உரிய தனி உடமை. காது குளிரக் கேட்டோமா? கேட்டு நெஞ்சம் குளிருவோமா?
நன்றுடை யானை
தீயதில்லானை
நரை வெள்ளேறு
குன்றுடையானை
உமை ஒரு பாகம்
உடையானைச்
சென்றடையாத திரு
உடையானைச்
சிராப்பள்ளிக் குன்றுடையானைக்
கூற என்னுள்ளம் குளிரும்மே.
-திருஞானசம்பந்தர்
_