கவிஞர்களின் பார்வையில் பெரியார் !
மாங்குடிபாலா
பெரியார்
ஈரோடு ஈந்தவனே - நீ
வேற்றுமைகளை வேரோடு சாய்த்தாய்
சாதி கொடுமைகளை வீழ்த்தி
சாதித்து காட்டினாய் !
சமூக சீர்திருத்தம் கண்ட நீ
தமிழ் எழுத்திலும் திருத்தம் கண்டாய்
பெரியார் எழுத்து - எனப்
பெரிதும் பேசப்பட்டாய் !
பெண்ணீயம் உனது பேச்சு
பெண் விடுதலை உனது மூச்சு
விதவைக்கும் மறுமண
விடிவு கண்டாய் !
துலாபாரம் கண்டவனே
தூய பண்பாளனே
வெண்கல குரலோனே
வெண் தாடி வேந்தனே !
கருப்பு சட்டைக்குள்ளே
கனிவான வெள்ளை உள்ளம்
கதராடை விற்ற நீ
கள்ளுக்கடை மறியலும் கண்டாய் !
வைக்கம் வீரனே உன் புகழ்
வையகம் உள்ள வரை
உன் காயம் நீத்து எம் கண்ணில்
வெங்காயச் சாரு வார்த்தாய் !