மகாபாரதத்தில்
குறளின் குரல்: வாக்கு தவறாதவர்?
மாலை நேரம்: கங்கைக் கரைஓரம். மாமன்னன் சந்தனு நதிக்கரை ஓரம் மெல்ல நடைபயில்கிறான் இயற்கையின் எழிலைப் பருகியபடியே வெகுதூரம் நடக்கிறான். கரையோர மரம் செடிகளின் மீது மாலை நேர மஞ்சள் வெயில் கண்ணா மூச்சி ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மரம் செடிகளுக்குத் தங்க முலாம் பூசியது இயற்கை எனும் இளைய கன்னியின் அதிசயத் தூரிகை.
கங்கையின் நிர்மலமான நீரில் தங்க நிற மரங்களின் பிரதிபலிப்பு அது மிக நீண்ட வெண்பட்டு ஆடையில் தங்க நிற ஜரிகை வேலைப்பாடு போன்ற பிரமிப்பு இது சிருஷ்டியின் அதிசயமோ? பிரமிக்ககிறான். கூடு திரும்பும் நானாவித பட்சிகளின் சப்த ஸ்வரங்கள். சில்லென்று தழுவும் மென்காற்று, பல்வேறு பூக்களின் மணம் நாசியை நிறைக்க மெய்மறந்து நின்றான் சந்தனு.
நதிக்கரை ஓரம் நாணற்புதர் அருகே...
அழகின் மொத்த வடிவாய் ஒரு ஆரனங்கு, காந்தம் இழுபடும் இரும்பென அவள் அருகே செல்கிறான் சந்தனு. அவள் பேரழகு கண்டு பிரமித்து நிற்கிறான் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே அடைக்கலம், என்னை மணப்பாயாக என்று கேட்கிறான். சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்கிறாள் அழகி. உனக்காக எந்த நிபந்தனையும் ஏற்பேன் என்கிறான் சந்தனு. என் பூர்வீகம் பற்றிக் கேட்கக்கூடாது. எனது செயல் எதனையும் தடுக்கக்கூடாது. அது பற்றி விள்க்கம் கேட்கக் கூடாது. அப்படி நீ மீறும் போது உனைவிட்டு விலகுவேன் என்கிறாள் பூடகமாக. சம்மதம் என்று சத்தியம் செய்து அவளை மணக்கிறான். மணவாழ்வின் மாபெரும்,விளைச்சலாக அடுத்தடுத்து ஏழு ஆண்குழந்தைகள். அத்தனையையும் கங்கையில் வீசி எறிகிறாள் அவர் எட்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறக்க அதனையும் கங்கையில் வீச முற்படுகிறாள் அழகி தடுக்கிறான் மன்னன்
தாய்மை நலன் கொண்ட உனக்கு இது தகுமோ என்று ஏசுகிறான். அழகி சிரிக்கிறாள். பின்னர் பேச ஆரம்பிக்கிறாள்.
மன்னா ! நான் மானுடப் பெண் அல்ல "கங்காதேவி" அஷ்டவசுக்கள் வசிஷ்டரின் பசுவான நந்தினியைக் கவர்ந்தனர். அதன் காரணமாக பூமியில் பிறக்கும்படி சாபம் ஏற்பட்டது. என்னைத் தாயாகும்படி கேட்டுக்கொண்டனர் எனவே உன்னை மணந்து அவர்களைப் பெற்று சாபவிமோசனம் பெற வழி வகுத்தேன். பசுவைத் தொட்டு இழுத்த "பிரபாசனே" எட்டாவது குழந்தை அவன் பூமியில் நெடுங்காலம் வாழ்ந்து செயற்கரிய செயல்கள் செய்வான் என்பன் வசிஷ்டரின் வாக்கு எனவே இவனை உரிய காலத்தில் உன்னிடம் கொண்டு வந்து ஒப்படைப்பேன் என்று கூறி குழந்தையுடன் மறைகிறாள்.
ஆண்டுகள் பல ஆன பின் கல்விக் கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து தேவவிரதன் என்று பெயர் சூட்டி மன்னனிடம் ஒப்படைக்கிறாள்.
தேவ விரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி இனிதே வாழ்கிறான்.
நாட்கள் கழிகின்றன ஒரு நாள் யமுனையில் நீராடும் போது ஒரு தெய்வீக மணத்தால் ஈர்க்கப்படுகிறான் சந்தனு மன்னன். மணம் வந்த திசை நோக்கி மனம் அலைபாயச் செல்கிறான். முனிவரின் அருளால் திருமேனியில் தெய்வீக மணத்தைப் பெற்றப் பரதவகுமங்கை சத்தியவதியைக் காண்கிறான்.
என்னை மணந்துகொள் என்று மன்றாடுகிறான் தந்தையைக் கேளுங்கள் என்கிறாள்.
பரிமளசுகந்தியான சத்யவதியின் தந்தை விதித்த நிபந்தனை. கேட்டு மன்னனின் தலை சுழல்கிறது. காதல் வசப்படவில்லையே என்ற வேதனையால் உடல் மெலிகிறான்.
விஷயம் அறிந்து தெளிகிறான் தேவ விரதன். சத்தியவதியிடம் செல்கிறான். அவள் தந்தை கேட்டபடியே சத்தியவதியின் வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடிக்காது பிரம்மச்சியம் அனுஷ்டிப்பேன் என்று உறுதி கூறுகிறான். தந்தைக்குச் சத்தியவதியை வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடித்துவைக்கிறான். ' பீஷ்வ ' என்று
போற்றி தேவர்கள் மலர்மாரி தூவுகின்றனர்.
கங்கையை மணந்து எட்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் சிற்றின்பம் நுகர்வதைத் தறக்க இயலாத தந்தைக்காகத் தான் சிற்றின்பம் பேரின்பமாகக் கருதியவன் தேவவிரதன். பீஷ்மன் என்றால் செயற்கரியசெயல் செய்பவன் என்று பொருள். இதைவிட செயற்கரிய செயல் யாரால் செய்ய இயலும்?
" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
-குறள்
நன்றி
திருக்கோவில்
கே.பாலசுந்தரி
மாங்குடி
திருக்குறட் செல்வர் - அன்னம் பாலித்தவர்
கே.பாலசுந்தரி, எம்.ஏ
பசி !
இது எல்லா உயிர்க்கும் பொதுவானது. " பசி வந்திடப் பத்தும் பறந்து போம் " என்பது பழமொழி. பத்து விதமான உயர் குணங்களைப் பறந்திடச் செய்யும் பசி தீர உணவிட்டவரை, "உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்" எனப் போற்றுகிறோம்.
எனவே தான் பாரதி "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என கர்ஜிக்கிறான். பண்டைக் காலத்தில் மன்னர்கள் அன்னசத்திரம் அமைத்துப் பசிப்பிணி தீர்த்தனர். மணிமேகலை அமுதசுரபி கொண்டு அமுது படைத்ததை அறிகிறோம். இதிகாசகாலத்தில் குருஷேத்திர யுத்தம் நடந்த போது சேரமன்னன்
உதியன் போரிடும் வீரர்களுக்கு சோறிடும் சேவை செய்தான். அதன் காரணமாகப் "பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்" எனப் புகழ் பெற்றான். என வரலாறு கூறுகிறது அவன் அன்னதானச் சிறப்பை.
இந்த அன்னதானச் சிறப்பினை உணர்ந்த இராமலிங்க அடிகளார் வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். பற்றற்ற வள்ளலார் பற்ற வைத்த நெருப்பு மக்களின் பசித்தீயை அணைத்தது. இப்படி சிறப்பாகத் தமிழ் மண்ணில் நடந்து வந்த அன்னதானம் இடைக்காலத்தில் சற்றே குன்ற ஆரம்பித்தது.
ஆயினும் தற்போது புதுப்பொலிவுடன் அன்னதானம் சிறப்புடன் நடைபெறுகிறது. ஆலயங்களுக்குப் புதியதோர் லயம் ஏற்பட்டு உள்ளது. உலகுக்கு அமுதூட்டும் உமையை அன்னபூரணியாகக் கண்டவர்கள் அல்லவா நமது முன்னோர்கள்.
"விதைக்கு இல்லாது விற்பது கூடாது" என்பது வேளாண்மை செய்பவருக்கான பழமொழி. அதற்கு மாறாக விதைத்த நெல்லையே விருந்தாக்கி மகிழ்ந்த வேளாளரும் உண்டு.
இளையாங்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். பயிர்த்தொழில செய்யும் வேளாளர் குலத்தவர். செல்வச் செழிப்புடன் சிறப்புடன் வாழ்ந்து வந்தவர். அடியவருக்கு அன்னம் பாலிப்பதே அவர் தம் முழுநேரப்பணி. இப்பணிக்குத் தக்கத் துணையாக நின்றவர் இவருடைய துணைவியார். இவர்கள் இட்ட உணவை உண்டவர்களின் மனமகிழ்வே தொட்டனைத்து ஊறும் மணற்கேணியெனப் பெருஞ் செல்வமாய் இவரிடம் பெருகியது. அடியவர்க்கு சோறிடுவதே பெரும் தொண்டு எனக் கருதி வாழ்ந்து வந்தார். திருமகள் இவர் தலைமகள் ஆனாள். மலையெனக் குவிந்த செந்நெல் கண்டு, விருந்தினரைப் போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழும் இவர் நிலத்தில் நெல் விதைக்காமலே விளையும் போலும் எனப் போற்றினர் ஊரார்.
"வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்" (குறள்)
இவரைச் சோதிக்க எண்ணினான் அந்த ஜோதி வடிவானவன். சோதனை வரும் போது தானே சாதனை வரும். "சோதனை வரும் முன்னே, சாதனை வரும் பின்னே" என்பது புதுமொழி. இறைவன் மாறனாரை விட்டு திருமகளை விலகிடச் செய்தார் ஏன்?
அவர் வறுமையிலும் செம்மையாக அன்னதானம் செய்யும் பாங்கை உலகுக்கு உணர்த்த.
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லார்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"
என்ற மூதுரைக்கிணங்க வறுமையால் கெட்டாலும் மாறனாரின் மேன்மையின் திறத்தை விண்ணவரும் கண்டு வியந்திடச் செய்ய அவரைச் சோதிக்க நாள் குறிக்கிறான் அந்த ஜோதி வடிவானவன்.
செல்வம் மகிமை அனைத்தும் "செல்வோம்" என மெல்ல மெல்லக் குறைய, கைப்பொருள் விற்றும், கடன் வாங்கியும் அன்னம் படைக்கிறார். அவர் வளம் சுருங்கினும் மனம் சுருங்கவில்லை. வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்தத் தம்பதியர் தம் வயிற்றுப் பசிக்கே உணவற்ற நிலை. தம் நெஞ்சில் கசியும் ஈரம் கொண்டு தம் வயிற்றில் எரியும் பசித்தீயை அணைக்க முயன்று சோர்கின்றனர்.
ஒரு நாள் இரவு, இறைவன் தன் திருவிளையாடலை அரங்கேற்ற ஆரம்பித்தான். பெருமழை கொட்டியது. அவன் விரிசடையென கருமேகம் சூழ, அவன் கடைக்கண் பார்வையென மின்னல் வெட்ட, அவன் கை உடுக்கை ஒலி போன்று இடி முழங்கி அவன்கருணை போன்று மழை கொட்டியது. அவன் சூடிய கங்கையென வெள்ளப் பெருக்கு. இறைவன் சிவனடியான் வேடம் புனைந்து மாறனார் இல்லம் வருகிறார். பசி எனக் குரல் கொடுக்கிறார்.
தாயினைத் தேடி ஓடும் கன்றென விரைகிறார் மாறனார். கதவு திறக்கிறார். அடியவரை வரவேற்று அமரச் செய்கிறார். உலர்துகில் கொண்டு அவர் உடல் துடைக்கிறார்.
அடியவர்க்கு எப்படி அமுது இடுவது? மனைவியிடம் ஆலோசிக்கிறார். "காலையில் வயலில் விதைத்த நெல்லை அள்ளி வந்தால் சமைக்கலாம்" என்கிறாள் சமயோசிதமாக. "நல்ல மனைவி நன் மந்திரி என்பதை மெய்ப்பித்தாய்" என்று உவகை கொண்டார்.
மனைவி சொல்லை மந்திரமாகக் கொண்டு விதைத்த நெல்லை சேகரிக்க விரைகிறார். கும்மிருட்டு வேளையிலும் அவர் உள்ஓளி கோடாக வழிகாட்டுகிறது. நெல்லை அள்ளி சேறு போக அலசி மனைவியிடம் தருகிறார். விறகு? எனத் தயங்க வீட்டின் ஒரு பகுதியை வெட்டி விறகாகத் தருகிறார். கொல்லையில் படர்ந்த கீரை வகைகள் கறியமுது செய்து, ஈர நெல்லை வறுத்துக் குத்தி சோறாக்கித் தலை வாழை இலையிட்டு அடியவரை அழைக்கிறார் மாறனார். உறங்குவது போன்று நடித்த இறைவன் சிரிக்கிறான். ஜோதி வடிவாகக் காட்சி அளிக்கிறான். திகைக்கின்றனர் தம்பதியர்.
பின்னர் இடப வாகனத்தில் உமையோடு காட்சி அளிக்கிறான். தேவர்கள் பூமாரி பொழிய இறைவன் புகழ்மாரி பொழிகிறான். "மாறா ! விண்ணவர் உண்ணும் அமுதமும் நீபடைத்த அமுதுக்கு ஈடாகாது. இந்த மண்ணுலகு உள்ளவரை உன் புகழ் நிலைக்கும். நீ உன் துணையோடு என்னுலகு அடைவாயாக. அங்குச் சங்க நிதி - பதுமநிதி கையில் ஏந்திய குபேரன் உன்னை வரவேற்று உன் மொழி கேட்டு உன் பணி செய்வான் என அருளி மறைகிறான்.
"செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு"
(குறள்)
பகைவனுக்கும் அருளிய நன்நெஞ்சர்
கே.பாலசுந்தரி.எம்.எ
பகை!
இந்த இரண்டெழுத்துச் சொல்லால் அழிந்த நாடுகள் எத்தனை? முறிந்த உறவுகள் எத்தனை? சிதைந்த குடும்பங்கள் எத்தனை? எத்தனை? பகைமை தொடர்கதையாவதின் விளைவே இது. இந்தத் தொடர்கதை தொடராதிருக்க என்ன வழி இப்பகை உணர்வை வேறோடு மாய்க்க மாற்று வழி என்ன. அன்புதான் மாற்று வழி. மாற்றம் ஏற்படுத்தும் வழி.
"பகையாளி குடியை உறவாடிக்கெடு" என்பது பழமொழி. அதாவது பகைவனிடம் நட்பு கொண்டது போல நடித்து அவன் குடியைக் கெடுக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றனர். அப்படி உறவாடிக் கெடுத்த நம் குடியை வெறொருவர் உறவாடிக் கெடுக்கமாட்டாரா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, என்பதும் பழமொழி தானே? நாம் செய்யும் காரியம் காரணமாக மாறி நம்மைக் கெடுக்கும் என்பதே உண்மை. இதனையே என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பகையாளி குடியுடன் உறவாடிப் பகையைக் கெடு என்பதே உண்மையான பழமொழி. அதன் அர்த்தம் மாறி அனர்த்தமாகக் கூறப்பட்டு வருகிறது. எனவே பகை தொடர்கதையாகிறது. இந்தத் தொடர்கதைக்கு முடிவுரைதான் என்ன? முடிவுரை மட்டுமல்ல - முகவுரையும் தருகிறான் அந்த முண்டாசுக் கவிஞன்.
"பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான்
- பாரதி"
பகையை வெல்லும் வெற்றி அன்று மட்டும் அவனுக்கு மட்டும் இன்பம் பயப்பது. பகைவனுக்கு அருளுவதால் ஏற்படும் வெற்றி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது. ஆம் ! மனிதனும் தெய்வமாகலாம்!! பகைவனுக்கு அருளும் போது!!! அப்படிப் பகைவனையும் பரமசிவன் வடிவாகவே கண்டவர் ஒருவர்.
சேது நாட்டின் தலைநகர் திருக்கோவிலூர். அங்கு மலாடர் மரபில் வந்த மன்னன் ஒருவன் வாழ்ந்து நன்னெறியுடன் ஆண்டு வந்தான். மிகச் சிறந்தவீரன். வெற்றிகள் பல கண்டவன். சிவநேசச்செல்வன். சிவனடியார்களின் திருவுருவே மெய்ப் பொருள் என்று நம்பியவன் சிவனடியார்களுக்குப் பண் செய்து மகிழ்ந்தவன் அவர்களின் திருவுருவே மெய்ப்பொருள் என்று கருதியதால் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கப்பட்டார்.
இதனிடையே முத்தநாதன் என்ற பகை மன்னன் சேது நாட்டை வெற்றி கொள்ள விரும்பினான். பலமுறை போரிட்டும் - பலனில்லை. தொடர்ந்து தோல்வியே கண்டான். சேது நாட்டின் வளம் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது. நேர் வழியில் கிடைக்காத வெற்றியை குறுக்கு வழியில் அடைய முடிவு செய்தான். என்ன செய்வது? குறுகியபுத்தி உள்ளவன் தேர்வு செய்வது குறுக்கு வழியைத்தானே?
குறுக்கு வழியில் வாழ்வு தேடிட கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு மனிதன் ஆனான் முத்தநாதன். குணத்திற்கு ஏற்ப திருட்டுத்தனமாய் ஒரு திட்டம் தீட்டுகிறான். அதன்படி சிவனடியார் வேடம் பூண்டு திருக்கோவிலூர் அடைகிறான். வேடம் தந்த துணிவில் அந்தப்புர வாசல் வரை வருகிறான். காவல் காக்கும் தத்தன் தடுக்கிறான். உறங்கும் வேளை என உரைக்கிறான். மன்னருக்கு வீடுபேறு அளிக்கவல்ல மந்திரம் உபதேசிக்க வந்துள்ளேன் தடுக்காதே எனக் கூறி உள்ளே நுழைகிறான்.அரசி எழுப்ப மன்னன் துடித்து எழுகிறான். தலை வணங்கி வரவேற்கிறான். தங்கள் வருகையின் நோக்கம் என்ன என்று வாஞ்சையுடன் கேட்கிறான்.
இறைவனே இயற்றிய ஆகமநூல் என்னிடம் உள்ளது, வேறு எங்கும் இல்லாத நூல், அதனை உனக்குப் போதிக்கவே வந்தேன். அதைத் தனிமையில் உபதேசிக்க வேண்டும் என்கிறான். குறிப்பறிந்து அரசி அகலுகிறாள்.
தான் பணிந்து வணங்கிக் கண்மூடி அமர்ந்து பாடம் கேட்க ஆயுத்தமாகிறார் மெய்ப்பொருளார். ஓலைச் சுவடியில் மறைத்து வைத்திருந்த வாளால் ஓங்கி வெட்டுகிறான் முத்தநாதன். அப்போதும் அவனது தவ வேடமே மெய்ப்பொருள் என வணங்கித்தானே வென்றவர் ஆகிறார் மெய்ப்பொருளார்.
தத்தன் சந்தேகத்தோடு உள்ளே நோக்க நடந்த விபரீதம் புரிகிறது. முத்தநாதனை வேட்டப் பாய்கிறான்.தடுக்கிறார் மெய்ப்பொருளார். இவரை யாதொரு இடையூறும் இன்றி அனுப்பி வைப்பாய் எனக் கூறுகிறார். செய்தி அறிந்து ஓடி வந்த வீரர்களை தடுக்கிறார் தத்தன். மன்னன் ஆணைப்படி இவரை பாதுகாப்பாக நகர் எல்லையில் கொண்டு விட வேண்டும் என்று கூறி அதன்படியே செய்கிறான். அனுப்பித்த செய்தி கூறுகிறான் மன்னனிடம். செய்தி கேட்டு சிந்தை குளிர்கிறார் மெய்ப்பொருளார். தத்தனை வாழ்த்துகிறார்.
அழுது அரற்றும் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார். திருநீற்றுச் செல்வர்களைப் பேணிப் பாதுகாக்கப் பணிக்கிறார். தன் மன அரங்கில் நடமிடும் தில்லைக் கூந்தனைத் தியானிக்கிறார். தில்லைக் கூத்தன் தரிசனம் தந்து தனது திருவடி நிழலும் தருகிறான்.
"கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார்கோள்"
குறளின் குரல்: வாக்கு தவறாதவர்?
மாலை நேரம்: கங்கைக் கரைஓரம். மாமன்னன் சந்தனு நதிக்கரை ஓரம் மெல்ல நடைபயில்கிறான் இயற்கையின் எழிலைப் பருகியபடியே வெகுதூரம் நடக்கிறான். கரையோர மரம் செடிகளின் மீது மாலை நேர மஞ்சள் வெயில் கண்ணா மூச்சி ஆடுகிறது. அந்த ஆட்டத்தில் மரம் செடிகளுக்குத் தங்க முலாம் பூசியது இயற்கை எனும் இளைய கன்னியின் அதிசயத் தூரிகை.
கங்கையின் நிர்மலமான நீரில் தங்க நிற மரங்களின் பிரதிபலிப்பு அது மிக நீண்ட வெண்பட்டு ஆடையில் தங்க நிற ஜரிகை வேலைப்பாடு போன்ற பிரமிப்பு இது சிருஷ்டியின் அதிசயமோ? பிரமிக்ககிறான். கூடு திரும்பும் நானாவித பட்சிகளின் சப்த ஸ்வரங்கள். சில்லென்று தழுவும் மென்காற்று, பல்வேறு பூக்களின் மணம் நாசியை நிறைக்க மெய்மறந்து நின்றான் சந்தனு.
நதிக்கரை ஓரம் நாணற்புதர் அருகே...
அழகின் மொத்த வடிவாய் ஒரு ஆரனங்கு, காந்தம் இழுபடும் இரும்பென அவள் அருகே செல்கிறான் சந்தனு. அவள் பேரழகு கண்டு பிரமித்து நிற்கிறான் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கே அடைக்கலம், என்னை மணப்பாயாக என்று கேட்கிறான். சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்கிறாள் அழகி. உனக்காக எந்த நிபந்தனையும் ஏற்பேன் என்கிறான் சந்தனு. என் பூர்வீகம் பற்றிக் கேட்கக்கூடாது. எனது செயல் எதனையும் தடுக்கக்கூடாது. அது பற்றி விள்க்கம் கேட்கக் கூடாது. அப்படி நீ மீறும் போது உனைவிட்டு விலகுவேன் என்கிறாள் பூடகமாக. சம்மதம் என்று சத்தியம் செய்து அவளை மணக்கிறான். மணவாழ்வின் மாபெரும்,விளைச்சலாக அடுத்தடுத்து ஏழு ஆண்குழந்தைகள். அத்தனையையும் கங்கையில் வீசி எறிகிறாள் அவர் எட்டாவதாக ஓர் ஆண் குழந்தை பிறக்க அதனையும் கங்கையில் வீச முற்படுகிறாள் அழகி தடுக்கிறான் மன்னன்
தாய்மை நலன் கொண்ட உனக்கு இது தகுமோ என்று ஏசுகிறான். அழகி சிரிக்கிறாள். பின்னர் பேச ஆரம்பிக்கிறாள்.
மன்னா ! நான் மானுடப் பெண் அல்ல "கங்காதேவி" அஷ்டவசுக்கள் வசிஷ்டரின் பசுவான நந்தினியைக் கவர்ந்தனர். அதன் காரணமாக பூமியில் பிறக்கும்படி சாபம் ஏற்பட்டது. என்னைத் தாயாகும்படி கேட்டுக்கொண்டனர் எனவே உன்னை மணந்து அவர்களைப் பெற்று சாபவிமோசனம் பெற வழி வகுத்தேன். பசுவைத் தொட்டு இழுத்த "பிரபாசனே" எட்டாவது குழந்தை அவன் பூமியில் நெடுங்காலம் வாழ்ந்து செயற்கரிய செயல்கள் செய்வான் என்பன் வசிஷ்டரின் வாக்கு எனவே இவனை உரிய காலத்தில் உன்னிடம் கொண்டு வந்து ஒப்படைப்பேன் என்று கூறி குழந்தையுடன் மறைகிறாள்.
ஆண்டுகள் பல ஆன பின் கல்விக் கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து தேவவிரதன் என்று பெயர் சூட்டி மன்னனிடம் ஒப்படைக்கிறாள்.
தேவ விரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி இனிதே வாழ்கிறான்.
நாட்கள் கழிகின்றன ஒரு நாள் யமுனையில் நீராடும் போது ஒரு தெய்வீக மணத்தால் ஈர்க்கப்படுகிறான் சந்தனு மன்னன். மணம் வந்த திசை நோக்கி மனம் அலைபாயச் செல்கிறான். முனிவரின் அருளால் திருமேனியில் தெய்வீக மணத்தைப் பெற்றப் பரதவகுமங்கை சத்தியவதியைக் காண்கிறான்.
என்னை மணந்துகொள் என்று மன்றாடுகிறான் தந்தையைக் கேளுங்கள் என்கிறாள்.
பரிமளசுகந்தியான சத்யவதியின் தந்தை விதித்த நிபந்தனை. கேட்டு மன்னனின் தலை சுழல்கிறது. காதல் வசப்படவில்லையே என்ற வேதனையால் உடல் மெலிகிறான்.
விஷயம் அறிந்து தெளிகிறான் தேவ விரதன். சத்தியவதியிடம் செல்கிறான். அவள் தந்தை கேட்டபடியே சத்தியவதியின் வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடிக்காது பிரம்மச்சியம் அனுஷ்டிப்பேன் என்று உறுதி கூறுகிறான். தந்தைக்குச் சத்தியவதியை வாரிசுகளே நாடாள்வர். நான் மணம் முடித்துவைக்கிறான். ' பீஷ்வ ' என்று
போற்றி தேவர்கள் மலர்மாரி தூவுகின்றனர்.
கங்கையை மணந்து எட்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும் சிற்றின்பம் நுகர்வதைத் தறக்க இயலாத தந்தைக்காகத் தான் சிற்றின்பம் பேரின்பமாகக் கருதியவன் தேவவிரதன். பீஷ்மன் என்றால் செயற்கரியசெயல் செய்பவன் என்று பொருள். இதைவிட செயற்கரிய செயல் யாரால் செய்ய இயலும்?
" சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் "
-குறள்
நன்றி
திருக்கோவில்
கே.பாலசுந்தரி
மாங்குடி
திருக்குறட் செல்வர் - அன்னம் பாலித்தவர்
கே.பாலசுந்தரி, எம்.ஏ
பசி !
இது எல்லா உயிர்க்கும் பொதுவானது. " பசி வந்திடப் பத்தும் பறந்து போம் " என்பது பழமொழி. பத்து விதமான உயர் குணங்களைப் பறந்திடச் செய்யும் பசி தீர உணவிட்டவரை, "உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்" எனப் போற்றுகிறோம்.
எனவே தான் பாரதி "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என கர்ஜிக்கிறான். பண்டைக் காலத்தில் மன்னர்கள் அன்னசத்திரம் அமைத்துப் பசிப்பிணி தீர்த்தனர். மணிமேகலை அமுதசுரபி கொண்டு அமுது படைத்ததை அறிகிறோம். இதிகாசகாலத்தில் குருஷேத்திர யுத்தம் நடந்த போது சேரமன்னன்
உதியன் போரிடும் வீரர்களுக்கு சோறிடும் சேவை செய்தான். அதன் காரணமாகப் "பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்" எனப் புகழ் பெற்றான். என வரலாறு கூறுகிறது அவன் அன்னதானச் சிறப்பை.
இந்த அன்னதானச் சிறப்பினை உணர்ந்த இராமலிங்க அடிகளார் வடலூரில் அணையா அடுப்பைப் பற்ற வைத்தார். பற்றற்ற வள்ளலார் பற்ற வைத்த நெருப்பு மக்களின் பசித்தீயை அணைத்தது. இப்படி சிறப்பாகத் தமிழ் மண்ணில் நடந்து வந்த அன்னதானம் இடைக்காலத்தில் சற்றே குன்ற ஆரம்பித்தது.
ஆயினும் தற்போது புதுப்பொலிவுடன் அன்னதானம் சிறப்புடன் நடைபெறுகிறது. ஆலயங்களுக்குப் புதியதோர் லயம் ஏற்பட்டு உள்ளது. உலகுக்கு அமுதூட்டும் உமையை அன்னபூரணியாகக் கண்டவர்கள் அல்லவா நமது முன்னோர்கள்.
"விதைக்கு இல்லாது விற்பது கூடாது" என்பது வேளாண்மை செய்பவருக்கான பழமொழி. அதற்கு மாறாக விதைத்த நெல்லையே விருந்தாக்கி மகிழ்ந்த வேளாளரும் உண்டு.
இளையாங்குடி என்னும் ஊரில் மாறனார் என்பவர் வாழ்ந்து வந்தார். பயிர்த்தொழில செய்யும் வேளாளர் குலத்தவர். செல்வச் செழிப்புடன் சிறப்புடன் வாழ்ந்து வந்தவர். அடியவருக்கு அன்னம் பாலிப்பதே அவர் தம் முழுநேரப்பணி. இப்பணிக்குத் தக்கத் துணையாக நின்றவர் இவருடைய துணைவியார். இவர்கள் இட்ட உணவை உண்டவர்களின் மனமகிழ்வே தொட்டனைத்து ஊறும் மணற்கேணியெனப் பெருஞ் செல்வமாய் இவரிடம் பெருகியது. அடியவர்க்கு சோறிடுவதே பெரும் தொண்டு எனக் கருதி வாழ்ந்து வந்தார். திருமகள் இவர் தலைமகள் ஆனாள். மலையெனக் குவிந்த செந்நெல் கண்டு, விருந்தினரைப் போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழும் இவர் நிலத்தில் நெல் விதைக்காமலே விளையும் போலும் எனப் போற்றினர் ஊரார்.
"வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்" (குறள்)
இவரைச் சோதிக்க எண்ணினான் அந்த ஜோதி வடிவானவன். சோதனை வரும் போது தானே சாதனை வரும். "சோதனை வரும் முன்னே, சாதனை வரும் பின்னே" என்பது புதுமொழி. இறைவன் மாறனாரை விட்டு திருமகளை விலகிடச் செய்தார் ஏன்?
அவர் வறுமையிலும் செம்மையாக அன்னதானம் செய்யும் பாங்கை உலகுக்கு உணர்த்த.
"அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லார்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"
என்ற மூதுரைக்கிணங்க வறுமையால் கெட்டாலும் மாறனாரின் மேன்மையின் திறத்தை விண்ணவரும் கண்டு வியந்திடச் செய்ய அவரைச் சோதிக்க நாள் குறிக்கிறான் அந்த ஜோதி வடிவானவன்.
செல்வம் மகிமை அனைத்தும் "செல்வோம்" என மெல்ல மெல்லக் குறைய, கைப்பொருள் விற்றும், கடன் வாங்கியும் அன்னம் படைக்கிறார். அவர் வளம் சுருங்கினும் மனம் சுருங்கவில்லை. வந்தவர்களுக்கு எல்லாம் விருந்து படைத்தத் தம்பதியர் தம் வயிற்றுப் பசிக்கே உணவற்ற நிலை. தம் நெஞ்சில் கசியும் ஈரம் கொண்டு தம் வயிற்றில் எரியும் பசித்தீயை அணைக்க முயன்று சோர்கின்றனர்.
ஒரு நாள் இரவு, இறைவன் தன் திருவிளையாடலை அரங்கேற்ற ஆரம்பித்தான். பெருமழை கொட்டியது. அவன் விரிசடையென கருமேகம் சூழ, அவன் கடைக்கண் பார்வையென மின்னல் வெட்ட, அவன் கை உடுக்கை ஒலி போன்று இடி முழங்கி அவன்கருணை போன்று மழை கொட்டியது. அவன் சூடிய கங்கையென வெள்ளப் பெருக்கு. இறைவன் சிவனடியான் வேடம் புனைந்து மாறனார் இல்லம் வருகிறார். பசி எனக் குரல் கொடுக்கிறார்.
தாயினைத் தேடி ஓடும் கன்றென விரைகிறார் மாறனார். கதவு திறக்கிறார். அடியவரை வரவேற்று அமரச் செய்கிறார். உலர்துகில் கொண்டு அவர் உடல் துடைக்கிறார்.
அடியவர்க்கு எப்படி அமுது இடுவது? மனைவியிடம் ஆலோசிக்கிறார். "காலையில் வயலில் விதைத்த நெல்லை அள்ளி வந்தால் சமைக்கலாம்" என்கிறாள் சமயோசிதமாக. "நல்ல மனைவி நன் மந்திரி என்பதை மெய்ப்பித்தாய்" என்று உவகை கொண்டார்.
மனைவி சொல்லை மந்திரமாகக் கொண்டு விதைத்த நெல்லை சேகரிக்க விரைகிறார். கும்மிருட்டு வேளையிலும் அவர் உள்ஓளி கோடாக வழிகாட்டுகிறது. நெல்லை அள்ளி சேறு போக அலசி மனைவியிடம் தருகிறார். விறகு? எனத் தயங்க வீட்டின் ஒரு பகுதியை வெட்டி விறகாகத் தருகிறார். கொல்லையில் படர்ந்த கீரை வகைகள் கறியமுது செய்து, ஈர நெல்லை வறுத்துக் குத்தி சோறாக்கித் தலை வாழை இலையிட்டு அடியவரை அழைக்கிறார் மாறனார். உறங்குவது போன்று நடித்த இறைவன் சிரிக்கிறான். ஜோதி வடிவாகக் காட்சி அளிக்கிறான். திகைக்கின்றனர் தம்பதியர்.
பின்னர் இடப வாகனத்தில் உமையோடு காட்சி அளிக்கிறான். தேவர்கள் பூமாரி பொழிய இறைவன் புகழ்மாரி பொழிகிறான். "மாறா ! விண்ணவர் உண்ணும் அமுதமும் நீபடைத்த அமுதுக்கு ஈடாகாது. இந்த மண்ணுலகு உள்ளவரை உன் புகழ் நிலைக்கும். நீ உன் துணையோடு என்னுலகு அடைவாயாக. அங்குச் சங்க நிதி - பதுமநிதி கையில் ஏந்திய குபேரன் உன்னை வரவேற்று உன் மொழி கேட்டு உன் பணி செய்வான் என அருளி மறைகிறான்.
"செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு"
(குறள்)
பகைவனுக்கும் அருளிய நன்நெஞ்சர்
கே.பாலசுந்தரி.எம்.எ
பகை!
இந்த இரண்டெழுத்துச் சொல்லால் அழிந்த நாடுகள் எத்தனை? முறிந்த உறவுகள் எத்தனை? சிதைந்த குடும்பங்கள் எத்தனை? எத்தனை? பகைமை தொடர்கதையாவதின் விளைவே இது. இந்தத் தொடர்கதை தொடராதிருக்க என்ன வழி இப்பகை உணர்வை வேறோடு மாய்க்க மாற்று வழி என்ன. அன்புதான் மாற்று வழி. மாற்றம் ஏற்படுத்தும் வழி.
"பகையாளி குடியை உறவாடிக்கெடு" என்பது பழமொழி. அதாவது பகைவனிடம் நட்பு கொண்டது போல நடித்து அவன் குடியைக் கெடுக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றனர். அப்படி உறவாடிக் கெடுத்த நம் குடியை வெறொருவர் உறவாடிக் கெடுக்கமாட்டாரா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, என்பதும் பழமொழி தானே? நாம் செய்யும் காரியம் காரணமாக மாறி நம்மைக் கெடுக்கும் என்பதே உண்மை. இதனையே என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பகையாளி குடியுடன் உறவாடிப் பகையைக் கெடு என்பதே உண்மையான பழமொழி. அதன் அர்த்தம் மாறி அனர்த்தமாகக் கூறப்பட்டு வருகிறது. எனவே பகை தொடர்கதையாகிறது. இந்தத் தொடர்கதைக்கு முடிவுரைதான் என்ன? முடிவுரை மட்டுமல்ல - முகவுரையும் தருகிறான் அந்த முண்டாசுக் கவிஞன்.
"பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே
பகைவனுக்கு அருள்வாய்
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான்
- பாரதி"
பகையை வெல்லும் வெற்றி அன்று மட்டும் அவனுக்கு மட்டும் இன்பம் பயப்பது. பகைவனுக்கு அருளுவதால் ஏற்படும் வெற்றி அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துகிறது. ஆம் ! மனிதனும் தெய்வமாகலாம்!! பகைவனுக்கு அருளும் போது!!! அப்படிப் பகைவனையும் பரமசிவன் வடிவாகவே கண்டவர் ஒருவர்.
சேது நாட்டின் தலைநகர் திருக்கோவிலூர். அங்கு மலாடர் மரபில் வந்த மன்னன் ஒருவன் வாழ்ந்து நன்னெறியுடன் ஆண்டு வந்தான். மிகச் சிறந்தவீரன். வெற்றிகள் பல கண்டவன். சிவநேசச்செல்வன். சிவனடியார்களின் திருவுருவே மெய்ப் பொருள் என்று நம்பியவன் சிவனடியார்களுக்குப் பண் செய்து மகிழ்ந்தவன் அவர்களின் திருவுருவே மெய்ப்பொருள் என்று கருதியதால் மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கப்பட்டார்.
இதனிடையே முத்தநாதன் என்ற பகை மன்னன் சேது நாட்டை வெற்றி கொள்ள விரும்பினான். பலமுறை போரிட்டும் - பலனில்லை. தொடர்ந்து தோல்வியே கண்டான். சேது நாட்டின் வளம் அவனைப் பொறாமை கொள்ளச் செய்தது. நேர் வழியில் கிடைக்காத வெற்றியை குறுக்கு வழியில் அடைய முடிவு செய்தான். என்ன செய்வது? குறுகியபுத்தி உள்ளவன் தேர்வு செய்வது குறுக்கு வழியைத்தானே?
குறுக்கு வழியில் வாழ்வு தேடிட கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு மனிதன் ஆனான் முத்தநாதன். குணத்திற்கு ஏற்ப திருட்டுத்தனமாய் ஒரு திட்டம் தீட்டுகிறான். அதன்படி சிவனடியார் வேடம் பூண்டு திருக்கோவிலூர் அடைகிறான். வேடம் தந்த துணிவில் அந்தப்புர வாசல் வரை வருகிறான். காவல் காக்கும் தத்தன் தடுக்கிறான். உறங்கும் வேளை என உரைக்கிறான். மன்னருக்கு வீடுபேறு அளிக்கவல்ல மந்திரம் உபதேசிக்க வந்துள்ளேன் தடுக்காதே எனக் கூறி உள்ளே நுழைகிறான்.அரசி எழுப்ப மன்னன் துடித்து எழுகிறான். தலை வணங்கி வரவேற்கிறான். தங்கள் வருகையின் நோக்கம் என்ன என்று வாஞ்சையுடன் கேட்கிறான்.
இறைவனே இயற்றிய ஆகமநூல் என்னிடம் உள்ளது, வேறு எங்கும் இல்லாத நூல், அதனை உனக்குப் போதிக்கவே வந்தேன். அதைத் தனிமையில் உபதேசிக்க வேண்டும் என்கிறான். குறிப்பறிந்து அரசி அகலுகிறாள்.
தான் பணிந்து வணங்கிக் கண்மூடி அமர்ந்து பாடம் கேட்க ஆயுத்தமாகிறார் மெய்ப்பொருளார். ஓலைச் சுவடியில் மறைத்து வைத்திருந்த வாளால் ஓங்கி வெட்டுகிறான் முத்தநாதன். அப்போதும் அவனது தவ வேடமே மெய்ப்பொருள் என வணங்கித்தானே வென்றவர் ஆகிறார் மெய்ப்பொருளார்.
தத்தன் சந்தேகத்தோடு உள்ளே நோக்க நடந்த விபரீதம் புரிகிறது. முத்தநாதனை வேட்டப் பாய்கிறான்.தடுக்கிறார் மெய்ப்பொருளார். இவரை யாதொரு இடையூறும் இன்றி அனுப்பி வைப்பாய் எனக் கூறுகிறார். செய்தி அறிந்து ஓடி வந்த வீரர்களை தடுக்கிறார் தத்தன். மன்னன் ஆணைப்படி இவரை பாதுகாப்பாக நகர் எல்லையில் கொண்டு விட வேண்டும் என்று கூறி அதன்படியே செய்கிறான். அனுப்பித்த செய்தி கூறுகிறான் மன்னனிடம். செய்தி கேட்டு சிந்தை குளிர்கிறார் மெய்ப்பொருளார். தத்தனை வாழ்த்துகிறார்.
அழுது அரற்றும் அனைவரையும் ஆற்றுப்படுத்துகிறார். திருநீற்றுச் செல்வர்களைப் பேணிப் பாதுகாக்கப் பணிக்கிறார். தன் மன அரங்கில் நடமிடும் தில்லைக் கூந்தனைத் தியானிக்கிறார். தில்லைக் கூத்தன் தரிசனம் தந்து தனது திருவடி நிழலும் தருகிறான்.
"கறுத்து இன்னா செய்தவக் கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார்கோள்"