கவிஞர்களின் பார்வையில் கண்ணதாசன்
மாங்குடிபாலா
கண்ணதாசன்
கண்ணதாசன் - நல்
எண்ணதாசா
எல்லோருக்கும் புரியும் புடி
எளிய கவிதை சொன்னதாசா
தீந்தமிழில் பாடல் புனைந்தவனே
தீது அறியா நல் நெஞ்சனே
அஞ்சாத சிங்கமே - நல்
அரசவைக் கவிஞனே - அந்தத்
திரையுலகம் உனக்குத்
திரை செலுத்தியது
அமர்க்களம் உன்புலமை
அவையடக்கம் உன் உடைமை
கவிஞனாய் -தயாரிப்பாளனாய்
கதாசிரியனாய் நடிகனாய் -பல
அவதாரம் எடுத்தவனே
அரிதாரம் இல்லா அன்பாலனே
உன்பாடல் ஒவ்வொன்றும் முத்து ஐயா
என்றும் நீ எம் சொத்து ஐயா
அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவனே -நல்
அர்த்தமுடன் வாழ வழி சொன்னவனே
உன் பொன்னுடம்பு மறைந்து
போனால் போகட்டும் போடா!
உன் புகழ் உடம்பு -என்றும்
பூமியில் நிலையாய் வாழு மடா !
மாங்குடிபாலா
கண்ணதாசன்
கண்ணதாசன் - நல்
எண்ணதாசா
எல்லோருக்கும் புரியும் புடி
எளிய கவிதை சொன்னதாசா
தீந்தமிழில் பாடல் புனைந்தவனே
தீது அறியா நல் நெஞ்சனே
அஞ்சாத சிங்கமே - நல்
அரசவைக் கவிஞனே - அந்தத்
திரையுலகம் உனக்குத்
திரை செலுத்தியது
அமர்க்களம் உன்புலமை
அவையடக்கம் உன் உடைமை
கவிஞனாய் -தயாரிப்பாளனாய்
கதாசிரியனாய் நடிகனாய் -பல
அவதாரம் எடுத்தவனே
அரிதாரம் இல்லா அன்பாலனே
உன்பாடல் ஒவ்வொன்றும் முத்து ஐயா
என்றும் நீ எம் சொத்து ஐயா
அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவனே -நல்
அர்த்தமுடன் வாழ வழி சொன்னவனே
உன் பொன்னுடம்பு மறைந்து
போனால் போகட்டும் போடா!
உன் புகழ் உடம்பு -என்றும்
பூமியில் நிலையாய் வாழு மடா !